மூலநோய் போக்கும் பிள்ளை கற்றாழை பற்றி தெரியுமா?

பிள்ளை கற்றாழை என்பது ஒரு மூலிகை வகையாகும். இதனை காய்கறிகளைப் போல சமைத்து உண்ணலாம். அதிலும் குறிப்பாக மூல நோய் இருப்பவர்கள் இந்த மூலிகையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

பிள்ளை கற்றாழையின் உள்ளே உள்ள தசையை கற்றாழை சோறு என்பார்கள். இதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் கசப்பு தன்மை உடையதாக இருக்கும். ஆகையால் இதனை ஏழு முதல் எட்டு முறை நீர் விட்டு நன்கு கழுவி விட வேண்டும். இவ்வாறு அதிக முறை கழுவுவதினால் அதில் உள்ள கசப்பு தன்மை நீங்கி உண்பதற்கு ஏதுவாக இருக்கும்.



இப்போது அந்த பிள்ளை கற்றாழை சதையுடன் உப்பு மற்றும் புளி ஆகியவற்றை அளவாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இவை மூன்றையும் ஒன்றாக கலந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த பாத்திரத்தை அப்படியே அடுப்பில் வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பிள்ளை கற்றாழை நன்கு வெந்தபின் அடிப்பினை அணைத்து இறக்கி விட வேண்டும்.



குறிப்பு:

1. பிள்ளை கற்றாழையை சமைக்கும்போது அதில் காரம் சேர்க்கக்கூடாது.

2. மேலும் இந்த கற்றாழை சோறு குளிர்ச்சி தன்மையும் சீத வீரியமும் உடையது. எனவே இது உஷ்ணம் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது.

சிறுநீர் எரிச்சல், சிறுநீர் அடைப்பு போன்ற பல நோய்களுக்கும் இது உதவுகிறது. சித்த வைத்திய முறைகளில் பஸ்ப செந்தூரங்கள் தயாரிப்பதில் இந்த பிள்ளை கற்றாழை சோறு சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

TTF வாசன் காதலியை வைத்து தந்திரமாக காய் நகர்த்திய விஜய் டிவி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து விரும்பி பார்ப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான்.…

2 mins ago

வித்தியாசமாக குழந்தைகளுக்கு இலங்கை ஸ்டைல் ரொட்டி செய்து கொடுத்து அசத்துங்க..

சாதாரணமாக டிபன் செய்வது என்றால் இட்லி, தோசை , சப்பாத்தி தான் செய்வோம். அதை மீறி பார்த்தல் சில நேரங்களில்…

5 mins ago

’எலக்சன்’ திரைப்பட விமர்சனம்

வலைப்பின்னல் போன்ற சிக்கலான உள்ளாட்சி அரசியல் குறித்தும் அதன் பிரதிநிதிகள் குறித்தும் பேசும் படமாக, நாடே தேர்தல் ஜுரத்தில் இருக்கும்…

6 mins ago

உடலென நான் உயிரென நீ -16

16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…

4 hours ago

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

4 hours ago

பெண்களே நீங்க சேலையில ஒல்லியா ஸ்டக்சரா தெரியணுமா? அப்போ இந்த டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க…

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு, என்று ஒரு சினிமா பாடலே இருக்கிறது. புடவை கட்டினால் பெண்கள் வழக்கத்தை விட…

4 hours ago