Categories: lifestylesNews

படிப்பை பாதியில் நிறுத்தினாலும் உலகப்பணக்காரர்களான இந்தியர்கள்!

Making money is an art that no school can teach you என ஆங்கிலத்தில் கூறுவதற்கு இணங்க பரிட்சையில் பாஸ் ஆகாத பலர் பணம் சம்பாதிப்பதில் பாஸ் ஆகியிருக்கின்றனர்.

பாஸ் என்ன, மிகப் பெரிய பணக்காரர்களாக உருவாகியிருக்கும் பலரும் கல்லூரி படிப்புக் கூட முடிக்காதவர்கள் என அறிவது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

அதானி முதல் அசிம் பிரேம்ஜீ வரை இந்தியாவில் படிக்காமலே மிகப் பெரிய தொழிலதிபர்களாக உயர்ந்திருக்கும் நபர்களைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் பேசப்போகிறோம்.



முகேஷ் அம்பானி

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரும் உலகப் பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றிருப்பவரும் ஆவார்.

திருபாய் அம்பானியின் மகனான இவர், பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்து கல்லூரி படிப்பை நிறைவு செய்தார்.

ஆனால் ஸ்டான்ஃபோர்ட் கல்லூரியில் எம்.பி.ஏ படிக்கும் போது பாதியிலேயே வெளியேறினார். ஸ்டான்ஃபோர்டுக்கு சொல்லும் முன் கெமிக்கல் இஞ்சினியரிங் படித்திருந்தார் முகேஷ் அம்பானி.



கௌதம் அதானி

அதானி இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராக இருந்தார். ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் அறிக்கைக்கு பிறகு சர்ச்சைக்குரிய பணக்காரராகவும் இருக்கிறார்.

இவர் குஜராத் பல்கலைகழகத்தில் பி.காம் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வெளியேறினார். 18 வயதில் வீட்டிலிருந்து பணம் பெற்றுக்கொண்டு மும்பையில் புதிய தொழிலைத் தொடங்கினார்.

இப்போது இந்தியாவில் பல தொழில்களில் முன்னணி வகிக்கிறார். குறிப்பாக இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறைமுகத்தை நடத்துகிறார்.

அசீம் பிரேம்ஜீ

விப்ரோ நிறுவனத்தின் நிறுவனரான அசீம், பணக்கார குடும்பத்தில் பிறந்தவர்.

இவரது தந்தை மரணத்தினால் தனது 21 வயதில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறினார்.

இந்திய ஐடி துறையின் முன்னோடியாக அசீம் வளர்ந்தார். 34 ஆண்டுகள் கழித்து ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகத்திலேயே எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தார்.



சாவித்ரி ஜிண்டால்

இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் தான். இவரது ஜிண்டால் குரூப்ஸ் நிறுனத்தை பிருத்விராஜ், சஜ்ஜன், ரத்தன் மற்றும் நவீன் ஆகிய இவரது 4 மகன்கள் இணைந்து நடத்துகின்றனர்.

சிறுவயதில் வீட்டை விட்டு வெளியேறாத பெண்ணாகவே வளர்க்கப்பட்டிருக்கிறார் சாவித்திரி ஜிண்டால். இதனால் இவர் பள்ளிக்கூடம் பக்கமே சென்றதில்லை.

இவரது கணவர் ஓ.பி ஜிண்டால் இறந்த பிறகு தான் இவர் பிசினஸ் குறித்த விவரங்களைத் தெரிந்துகொண்டார்.

சுபாஷ் சந்திரா

சுபாஷ் சந்திரா 12ம் வகுப்பு படிக்கும் போது வறுமை காரணமாக படிப்பை நிறுத்தியவர். 1965ம் ஆண்டு கடனில் இருந்து குடும்பத்தை மீட்க சிறிய அளவில் வணிகத்தைத் தொடங்கினார்.

இப்போது 2 லட்சம் கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்ந்திருக்கும் இவர் தான் முதன்முதலில் இந்தியாவில் தனியார் தொலைக்காட்சி சேனலைத் தொடங்கியவர்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நீயில்லாமல் வாழ்வது லேசா!-10

10 ‘‘ஆமாம், உன்னைக் கவிழ்ப்பதை தவிர எங்களுக்கு வேறு வேலை இல்லை பார். சரிதான் போடா.." வஜ்ரவேல் சொல்ல, அவன்…

8 hours ago

மருமகளை நம்பும் பாண்டியன்…பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் தங்கமயிலை கண்மூடித்தனமாக நம்பி ஓவராக இடம் கொடுத்து வைத்திருக்கிறார். இதனால் தங்கமயிலும்…

8 hours ago

விஜயாவுக்கு வந்த பிரச்சனை – சிறகடிக்க ஆசை 2 மணி நேரம் ஸ்பெஷல் எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய சண்டே ஸ்பெஷல்…

8 hours ago

திருநெல்வேலி ஸ்பெஷல் மொச்சை மசாலா

திருநெல்வேலி என்றாலே எல்லாருடைய நினைவுக்கும் முதலில் வருவது அல்வா தான். ஆனால், இங்கு  ஸ்பெஷலான உணவுகளில் ஒன்று மொச்சை மசாலா.…

8 hours ago

தென்காசிப் பட்டணம் திரைப்பார்வை

விஜயகாந்த் நடிப்பதாக இருந்த படத்தில் அவர் வெளியேறி சரத்குமார் நடித்த படம் ஆக, காமெடி கலந்த காதல் கதையுடன் வெளியாகி…

9 hours ago

சரணடைந்தேன் சகியே – 20

20       “நாம் கோவிலில் வைத்து திரும்பவும் தாலி கட்டிக் கொள்ளலாமா சகி..?” முணுமுணுப்பாய் அவள் தோள்களில்…

12 hours ago