Categories: CinemaEntertainment

கோலிவுட்டில் முதன்முறையாக ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய மாஸ் நடிகர் யார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், அஜித், ரஜினி, கமல் ஆகியோர் தற்போது ஒரு படத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் தான் நடிகர், நடிகைகளின் சம்பளம் தடாலடியாக உயர்ந்திருக்கிறது. அதற்கு முன்னர் வரை ஒரு கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களே மிகவும் அறிது. அந்த வகையில் தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் யார் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.



அந்த நடிகர் வேறுயாருமில்லை ராஜ்கிரண் தான். அவர் தான் கோலிவுட்டில் முதன்முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர். 16 வயதிலேயே சென்னைக்கு வந்த ராஜ்கிரண் தினக்கூலியாக வேலை பார்த்து வந்திருக்கிறார். அப்போது அவருக்கு சம்பளம் வெறும் 4 ரூபாய் 50 பைசா தானாம். பின்னர் ராஜ்கிரணின் உழைப்பையும், நேர்மையையும் பார்த்து வியந்து போன முதலாளி அவருக்கு கிளர்க்காக பதவி உயர்வு கொடுத்திருக்கிறார். அதுவரை மாதம் 150 ரூபாய் சம்பளம் வாங்கி வந்த ராஜ்கிரண் பதவி உயர்வுக்கு பின்னர் 170 ரூபாய் சம்பளம் வாங்கி வந்துள்ளார்.



பின்னர் சொந்தமாக விநியோக கம்பெனி ஒன்றை ஆரம்பித்து சினிமாவில் படிப்படியாக வளரத் தொடங்கிய ராஜ்கிரண், அதன்பின்னர் படம் இயக்கி நடிக்க ஆரம்பித்தார். அவரின் படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆனதால் வெவ்வேறு தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து நடிக்க அழைப்பு வந்திருக்கிறது. அப்படி ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்காக நடிக்க அழைத்தபோது தான் தனக்கு ரூ.1 கோடியே பத்து லட்சம் சம்பளம் தருவதாக கூறி அழைத்திருக்கிறார்கள். இதை தன் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக ஏற்றுக்கொண்டாராம் ராஜ்கிரண். 4 ரூபாய் 50 பைசா சம்பளம் வாங்கும்போது என்ன ஒரு ஃபீலிங் இருந்ததோ அதே ஃபீலிங் தான் 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் போதும் தனக்கு இருந்ததாக அவர் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.



அவர் முதன்முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கி நடித்த படம் மாணிக்கம். கடந்த 1996-ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை கே.வி.பாண்டியன் இயக்கி இருந்தார். இப்படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்தது நடிகர் விஜயகுமாரின் மகளும் பிக்பாஸ் பிரபலமுமான வனிதா தான். இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பாக டி.சிவா தயாரித்திருந்தார். இப்படத்தின் மூலம் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் தமிழ் ஹீரோ என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் ராஜ்கிரண். அவருக்கு பின்னர் தான் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித் போன்றவர்கள் அந்த உயரத்தை எட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.



What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

கோபிக்கு வந்த ஆப்பு – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியை…

4 hours ago

TTF வாசன் காதலியை வைத்து தந்திரமாக காய் நகர்த்திய விஜய் டிவி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து விரும்பி பார்ப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான்.…

4 hours ago

வித்தியாசமாக குழந்தைகளுக்கு இலங்கை ஸ்டைல் ரொட்டி செய்து கொடுத்து அசத்துங்க..

சாதாரணமாக டிபன் செய்வது என்றால் இட்லி, தோசை , சப்பாத்தி தான் செய்வோம். அதை மீறி பார்த்தல் சில நேரங்களில்…

4 hours ago

’எலக்சன்’ திரைப்பட விமர்சனம்

வலைப்பின்னல் போன்ற சிக்கலான உள்ளாட்சி அரசியல் குறித்தும் அதன் பிரதிநிதிகள் குறித்தும் பேசும் படமாக, நாடே தேர்தல் ஜுரத்தில் இருக்கும்…

4 hours ago

உடலென நான் உயிரென நீ -16

16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…

8 hours ago

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

8 hours ago