Categories: CinemaEntertainment

கண்ணதாசன் பாடல்கள் எழுதிய ஒரு படத்தில் நடிக்க மறுத்த கமல்ஹாசன்..

தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு என ஒரு பல்துறை வித்தகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன் ஆகிய மூன்று திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

தன்னுடைய படங்களில் திறமையானவர்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் கமல்ஹாசன் ஆர்வமாக இருப்பார். அதுபோல திறமையானவர்களைக் கண்டால் அவர்களுக்கான வாய்ப்புகளை எப்படியாவது தன்னுடைய கம்பெனியில் கொடுக்கவேண்டும் என ஆசைப்படுவார். வில்லனாக நடித்துக் கொண்டிருந்த சத்யராஜின் திறமையை வியந்து பலரிடம் அவரை வைத்து படம் எடுங்கள் எனக் கூறியதோடு மட்டும் இல்லாமல் தன் தயாரிப்பில் ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ என்ற படத்தையும் எடுத்தார்.



இப்படி குடிசை என்ற படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ஜெயபாரதி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஆசைபட்டுள்ளார் கமல்ஹாசன்.  அந்த படத்துக்கு 2 பேர் வானத்தை பார்க்கிறார்கள் என்று பெயர் வைத்து தொடக்கக் கட்ட வேலைகளை தொடங்கியுள்ளனர். இந்த படத்துக்காக வெறும் 500 ரூபாய் மட்டும் முன்பணமாகப் பெற்றுக்கொண்டுள்ளார் கமல்ஹாசன்.

அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் திரைக்கதை தான். முதலில் பாடல்களே இல்லாத இந்த திரைக்கதையில் பாடல்களை சேர்ப்பது என்று படத்தின் தயாரிப்பாளர் எம்.ஆர்.ரமேஷ் முடிவு செய்து, கண்ணதாசனை வைத்து 4 பாடல்களை எழுத வைத்துள்ளார். இதன்பிறகு பாடலுக்கான கம்போசிங்கும் தொடங்கியது.

இந்த தகவலை கேள்விப்பட்ட கமல்ஹாசன் உடனடியாக இயக்குனர் ஜெயபாரதியை அழைத்து “இப்ப நான் நடிக்கும் எல்லா படத்திலும் பாட்டு பாடு ஆடிக்கொண்டுதான் இருக்கேன். அது மாதிரி இல்லாம வித்தியாசமா நடிக்கனும் அப்படினுதான் உங்க கதையை நான் தேர்வு செய்தேன். திரும்பவும் இந்த படத்தில் 4 பாடல்கள் சேர்த்து என்னை ஆட வைத்தால், இந்த படத்தில் நான் நடிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது. அதனால் நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன்” என உறுதியாக மறுத்துவிட்டாராம். அதன் பிறகு அந்த படம் கடைசி வரை தொடங்கப்படவே இல்லை.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

கோபிக்கு வந்த ஆப்பு – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியை…

8 hours ago

TTF வாசன் காதலியை வைத்து தந்திரமாக காய் நகர்த்திய விஜய் டிவி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து விரும்பி பார்ப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான்.…

8 hours ago

வித்தியாசமாக குழந்தைகளுக்கு இலங்கை ஸ்டைல் ரொட்டி செய்து கொடுத்து அசத்துங்க..

சாதாரணமாக டிபன் செய்வது என்றால் இட்லி, தோசை , சப்பாத்தி தான் செய்வோம். அதை மீறி பார்த்தல் சில நேரங்களில்…

8 hours ago

’எலக்சன்’ திரைப்பட விமர்சனம்

வலைப்பின்னல் போன்ற சிக்கலான உள்ளாட்சி அரசியல் குறித்தும் அதன் பிரதிநிதிகள் குறித்தும் பேசும் படமாக, நாடே தேர்தல் ஜுரத்தில் இருக்கும்…

8 hours ago

உடலென நான் உயிரென நீ -16

16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…

12 hours ago

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

12 hours ago