Categories: CinemaEntertainment

ஒரு வருடத்திற்கு மேல் திரையரங்கில் திருவிழாபோல் ஓடிய 4 படங்கள்..

 தற்பொழுதெல்லாம் சினிமாவில் இளம் நடிகர்களின் திரைப்படங்கள் முதல் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் என தொடர்ந்து அடுத்தடுத்து திரையரங்களில் வெளியாகி வருகிறது. இதனால் இந்த காலகட்டத்தில் திரைப்படங்களுக்கென இருக்கும் மவுசு மக்கள் மத்தியில் குறைந்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.



ஏனென்றால் 80, 90களில் வரும் படங்களை ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் பார்த்து வந்தனர். ஆனால் தற்பொழுது அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இவ்வாறு 365 நாட்களுக்கு மேல் ஓடி திரையரங்குகளில் கல்லாக் கட்டிய நான்கு திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.

சின்னத்தம்பி: பி வாசு இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு பிரபு, குஷ்பூ, மனோரமா மற்றும் ராதா ரவி போன்றோர்கள் இணைந்து நடித்த திரைப்படம் தான் சின்னத்தம்பி. இப்படத்தில் பிரபு-குஷ்புவின் காதலையும் பிறகு இவர்களுடைய வரட்டு கவுருவத்தால் ஏற்படும் பிரச்சனைகளை அழகாக காண்பித்து இருப்பார்கள். இவ்வாறு சின்னத்தம்பி படம் 365 நாட்களுக்கு மேல் ஓடி திரையரங்குகளில் சாதனை படைத்தது.

மூன்று முடிச்சு: கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1976ஆம் ஆண்டு கமல், ஸ்ரீதேவி, ரஜினி மூவரும் இணைந்து நடித்த திரைப்படம் தான் மூன்று முடிச்சு. இப்படத்தில் ஒரே ரூமில் கமல் மற்றும் ரஜினி நண்பர்களாக இருக்க அங்கு அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் ஸ்ரீதேவியின் மீது இவர்களுக்கு காதல் ஏற்படும் எனவே அவரிடம் தங்களை நல்லவர்கள் போல் காண்பித்து நடிக்க ஆனால் ரஜினி தன்னை கெட்டவனாக காண்பித்து நடித்திருப்பார்.



மூன்றாம் பிறை: பாலுமகேந்திரா இயக்கத்தில் 1982ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை படத்தில் ஸ்ரீதேவி, கமல் இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள். இப்படத்தில் ஸ்ரீதேவிக்கு பழைய ஞாபகமாக மறந்து போக கமல் அடைக்கலம் கொடுத்திருப்பார். இவர்களுக்கு இடையே கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாற இந்த சமயத்தில் ஸ்ரீதேவிக்கு பழைய ஞாபகங்கள் வந்ததால் கமலை விட்டு பிரிந்து விடுவார். இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அருமையாக அமைந்ததால் வசூல் ரீதியாக, விமர்சன ரீதியாகவும் சூப்பர் ஹிட் வெற்றினை பெற்று இரண்டு தேசிய விருதுகளையும் வென்றது.

கரகாட்டக்காரன்: இப்படத்தின் கதைகளம் மட்டுமல்லாமல் பாடல்களும் மிகவும் அருமையாக இருந்ததால் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் கிராமத்து மக்களின் மனதை பெரிதளவிலும் கவர்ந்தது. இப்படத்தை கங்கை அமரன் 1989ஆம் ஆண்டு இயக்க ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலருடைய நடிப்பில் வெளியானது. இவ்வாறு ராமராஜன் இப்படத்தின் மூலம் கிராமத்து நாயகனாக மக்கள் மனதை கவர்ந்தார். 33 வருடங்களுக்கு பிறகும் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் இருக்கும் மவுசு குறையவில்லை.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நீயில்லாமல் வாழ்வது லேசா!-8

8 ‘‘யார் அவர்?" சஷ்டிகா எதிர்பார்த்த கேள்வியை வி.கே.வி கேட்டிருந்தான். அதுவும் நேரடியாக அவள் அறைக்கே வந்து கேட்டான். முதலில்…

5 hours ago

தங்கமயிலை வெளுத்து வாங்கும் புருஷன்…பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் ஆசை ஆசையாக எடுத்துக் கொடுத்த டிரஸ்சை ராஜி போட்டுக்கொண்டு சந்தோசமாக வருகிறார். ராஜியின் சந்தோஷத்திற்கு என்ன…

5 hours ago

அசத்தும் சுவையில் மக்ரூன் ஸ்வீட்: செய்யலாமா?

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்து கடற்கரையோரப் பகுதி மக்கள் விரும்பி உண்ணும் இனிப்பு வகைகளுள் ஒன்று மக்ரூன். இந்த முந்திரி…

5 hours ago

உள்ளொழுக்கு படம் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

 இந்த வருடம் மலையாளத்தில் அடுத்தடுத்து தரமான படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் மஞ்சுமல் பாய்ஸ், பிரமயுகம், பிரேமலு, ஆடு ஜீவிதம், ஆவேசம் என…

5 hours ago

சரணடைந்தேன் சகியே – 18

18   மூன்று நாட்களாக ஒருவரை ஒருவர் முகம் பார்க்காமல் நடமாடிக் கொண்டிருந்தவர்களை கவனித்தபடி இருந்தனர் அபிராமியும், அன்னலட்சுமியும்.. இவர்களுக்குள்…

9 hours ago

மனம் மாறிய ஈஸ்வரி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ராதிகா,…

9 hours ago