108 திவ்ய தேச தலங்கள்- 20 | தஞ்சை நீலமேகப் பெருமாள் கோயில்

108 வைணவ திவ்ய தேசத் தலங்களில், தஞ்சாவூர் நீலமேகப் பெருமாள் கோயில், 20-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயில் பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.



தல வரலாறு

திரேதா யுகத்தில் தஞ்சகன், தண்டகன், தாடகன் ஆகிய மூன்று அசுரர்கள் சிவபெருமானை நோக்கி தவம் புரிந்தனர். சிவபெருமான் இவர்களின் தவத்தில் மகிழ்ந்து, தன்னால் எந்தத் துன்பமும் ஏற்படாது என்று உறுதியளித்தார். சிவபெருமான் அளித்த வரத்தால் கர்வம் கொண்ட அசுரர்கள், அனைத்து முனிவர்கள், ரிஷிகளையும் துன்புறுத்தி வந்தனர்.

பராசரர் முனிவர், பாற்கடலைக் கடைந்து கிடைத்த அமுதத்தை மணிமுத்தா நதியில் விட்டு, பசுமையான வயல்கள் சூழ்ந்த வெண்ணாற்றங்கரையில் ஆசிரமம் அமைத்து ஹரிநாமம் உச்சரித்து, சீடர்களுக்கு உபதேசம், தவம் செய்து வந்தார். தவம் செய்யும் முனிவரை அந்த இடத்தைவிட்டு துரத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அசுரர்கள், அவருக்கு பல்வேறு விதங்களில் இன்னல்கள் கொடுத்து வந்தனர். பராசரர் முனிவர் அசுரர்களை திருத்த எண்ணி பல அறிவுரைகளை வழங்கினார். ஆனால் அவற்றை ஏற்கும் மனநிலையில் அவர்கள் இல்லை. வருத்தமடைந்த முனிவர், இதுகுறித்து திருமாலிடம் முறையிட்டார்.

பக்தர்களைக் காக்க ஓடோடி வரும் திருமால், முனிவரைக் காக்க கருட வாகனத்தில் எழுந்தருளி அவரது ஆசிரமத்துக்கு வந்தார். ‘கஜமுக’ வடிவம் கொண்டு தஞ்சகன், ‘நரசிம்மயாளி’ வடிவில் வந்த திருமாலுடன் போரிட்டான். தஞ்சகனை சக்ராயுதத்தால் தோற்கடித்தார் திருமால். திருமாலிடம் தஞ்சகன் சரணடைந்ததால், இவ்வூர் ‘தஞ்சகனூர்’ என்று அழைக்கப்படுகிறது. நாளடைவில் இவ்வூர் தஞ்சாவூர் என்றும், திருமால் நரசிம்மயாழி வடிவம் கொண்டு போரிட்டதால், இவ்வூர் ‘தஞ்சையாழி’ என்றும் அழைக்கப்படுகிறது.



தண்டகாரண்யத்தில் வராக மூர்த்தியால் தண்டகனும், கிருஷ்ணாவதாரத்தின்போது காளிதேவியால் தாடகனும் வதம் செய்யப்பட்டனர். அரக்கர்களின் வதத்துக்குப் பிறகு, பராசரர் முனிவருக்கு நீலமேகப் பெருமாளாக திருமால் காட்சியளித்தார்.

மேலும் பக்தர்களுக்காக, வெண்ணாற்றங்கரையில் திருமால், மூன்று கோயில்களில், கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். அவை, செங்கமலவல்லித் தாயார் சமேத நீலமேகப் பெருமாள் கோயில், அம்புஜவல்லித் தாயார் சமேத மணிகுன்றப் பெருமாள் கோயில், தஞ்சைநாயகித் தாயார் சமேத வீரநரசிம்ம பெருமாள் கோயில் ஆகும்.

 

பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மூன்று கோயில்களையும் சேர்த்து மங்களாசாசனம் செய்துள்ளதால், மூன்று கோயில்களுமே சேர்ந்து ஒரே திவ்யதேசமாக கருதப்படுகிறது. வீரநரசிம்மர் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். உற்சவர் நீலமேகப் பெருமாள் கையில் செங்கோல் ஏந்தியும், உற்சவர் செங்கமலவல்லித் தாயார் அக்னி கிரீடம் அணிந்து சாந்த ரூபத்திலும் அருள்பாலிக்கின்றனர். அருகே பராசரர் பெருமாளை வணங்கியபடி உள்ளார். வடக்கு பார்த்தபடி லட்சுமியுடன் ஹயக்ரீவர் அருள்பாலிக்கிறார்.

திருவிழாக்கள்

பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் மூன்று பெருமாள்களுக்கும் பிரம்மோற்சவங்கள் நடைபெறும்.



What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

சுந்தரி சீரியல் திடீரென மாற்றப்படும் ஒளிபரப்பு நேரம்..

 தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. காலை முதல்…

2 hours ago

மருமகள் பற்றி தெரியாமல் மொத்தத்தையும் உளறிய கோமதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி ஆசைப்பட்ட மாதிரி டியூஷன் எடுப்பதற்கு மீனா ஒரு ஐடியா கொடுத்தார். அதன்படி ஹோம்…

2 hours ago

சின்ன வெங்காய காரக்குழம்பு செய்து அசத்துங்க !

சமையல் செய்யும் போது அனைவரது மனதிலும் எழும் முதல் கேள்வியே இன்னைக்கு என்ன சமையல் என்பதே. அதிலும் அதிக அளவில்…

2 hours ago

‘கருப்பன்’ விமர்சனம்

கிராமத்து பின்னணி கொண்ட படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி, பல ஆண்டுகளுக்கு பிறகு கிராமத்து பின்னணியில் நடித்திருக்கும் படம்…

2 hours ago

சரணடைந்தேன் சகியே-28

28   “வெல்கம் அகிரோட்டோ..” வலது கையால் அகிரோட்டோவின் கையை குலுக்கியபடி இருந்த பாலகுமரன் இடது கையால் சஸாக்கியின் கை…

6 hours ago

மணி பிளான்ட் நடும்போது இந்த ரெண்டுல ஒன்னு போட்டு நடுங்க..!

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் மணி பிளான்ட் வைப்பது மிகவும் மங்களகரமாக கருதப்படுகிறது. இதனால் வீட்டில் பணம் பெருகுவது மட்டுமின்றி,…

6 hours ago