மகாபாரதக் கதைகள்/கிருஷ்ணர், அர்ஜுனன் மற்றும் புறாவின் கதை

இது, கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த புகழ்பெற்ற  உரையாடல்.

ஒரு சமயம், இருவரும் தோட்டத்தில், ஒரு அழகான பாதையில் உலாவிக் கொண்டிருக்கும் பொழுது, வானத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவை ஒன்றை அவர்கள் பார்த்தனர்.



கிருஷ்ணர் அதை சுட்டிக் காட்டியபடி, “அர்ஜுனா, அந்தப் பறவையைப் பார் – அது புறாதானே?” என்று கேட்டார்.

“ஆம் பிரபு! அது கண்டிப்பாகப் புறா தான்” என்று அர்ஜுனன் கூற முற்பட்டதும் கிருஷ்ணர், “சற்றுப் பொறு! கழுகு போல எனக்குத் தோன்றுகிறதே. அது ஒரு சமயம் கழுகோ?” என்று தொடர்ந்தார்.

“ஆமாம்! அது நிச்சயமாகக் கழுகு தான்” என்று அர்ஜுனனிடமிருந்து பதில் வந்தது.

“இல்லை, இல்லை! அது கழுகு மாதிரி இல்லை” என்று கிருஷ்ணர் கூறி, “கண்டிப்பாக அது காகம் தான்” என்றார்.

“சந்தேகமே இல்லை கிருஷ்ணா, அது காகமே தான்”, என்றவாறு அர்ஜுனன் பதிலளித்தான்.



இந்தத் தருணத்தில், கிருஷ்ணர் சிரித்துக் கொண்டே அர்ஜுனனைச் செல்லமாகக் கடிந்து கொண்டு, “நண்பா, நீ என்ன குருடா? உனக்கு சொந்தமாகக் கண்கள் இல்லையா! நான் எது சொன்னாலும் ஏற்றுக் கொள்கிறாயே?” என்று கேட்டார்.

அதற்கு அர்ஜூனன், “கிருஷ்ணா, நான் என் கண்களால் காணும் ஆதாரங்களை விட உங்கள் சொற்களின் மீது அதிகமான நம்பிக்கை வைத்திருக்கிறேன். நீங்கள் எது சொன்னாலும், அதை உருவாக்குவதற்கான சக்தி உங்களுக்கு இருக்கிறது. அதை ஒரு காகமாகவோ, புறாவாகவோ அல்லது கழுகாகவோ, நீங்கள் நினைத்தால் மாற்றலாம். ஆகையால், நீங்கள் ஒன்றினைக் காகம் என்று சொன்னால், அது காகமாகத் தான் இருக்க வேண்டும்” என்று கூறினான்.

பக்தி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தக் கதையே சான்று. ஆசிரியர் மற்றும் கடவுளின் மீதும் இப்படிப்பட்ட நம்பிக்கையைத் தான் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நன்மை தீமைக்கு இடையில் உள்ள போரை வெல்லகிருஷ்ணரின் மீது அர்ஜுனன் வைத்த இந்த பக்தியே காரணமாகும்.

ஆன்மீக வெற்றிக்கு மனப்பூர்வமான நம்பிக்கை அவசியம். ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் – கடவுள்  பக்தனை விட பக்தியை மட்டுமே விரும்புவார்.



What’s your Reaction?
+1
2
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நீயில்லாமல் வாழ்வது லேசா!-15

15 மறுநாள் கண்விழித்த உடனேயே வேறு இடத்தில் இருப்பதை உணர்ந்துகொண்ட சஷ்டிகா, சட்டென எழுந்து அமர்ந்தாள். "என்னடா பாப்பா எழுந்து…

1 hour ago

புருஷனை தன் கைக்குள் போட்ட தங்கமயில்…..பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில், புருஷனை தன் கைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒன்றுமே…

1 hour ago

நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்…

1 hour ago

’7ஜி’ (7G) திரைப்பட விமர்சனம்

ரோஷன் பஷீர் - ஸ்முருதி வெங்கட் தம்பதி தனது மகனுடன் அடுக்குடிமாடி குடியிருப்பில் புதிதாக குடியேறுகிறார்கள். தனது நீண்டநாள் சொந்த…

1 hour ago

சரணடைந்தேன் சகியே – 25

25       “அம்மா நான் போயிட்டு வர்றேம்மா..” சஸாக்கி வேலைக்கு கிளம்பிவிட்டாள்.. அன்னத்திற்குத்தான் மிகுந்த கவலை.. மகள்…

5 hours ago

ஈஸ்வரியை தூக்க வரும் போலீஸ் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா அப்செட்…

5 hours ago