Categories: CinemaEntertainment

‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ பாடல் ரகசியம் கூறிய வைரமுத்து

நடிகர் விஜய், நடிகை ஜோதிகா நடிப்பில் கடந்த 2000ம் ஆண்டில் வெளிவந்த படம் குஷி. இப்படத்தை நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே சூர்யா இயக்கி இருந்தார். தேவா இசையமைத்து இருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ பாடல் சூப்பர்ஹிட் பாடலாகும். பாடலுக்கு விஜய் – மும்தாஜ் ஜோடியாக நடமாடி இருப்பார்கள்.



இந்நிலையில், ‘கட்டிப்புடி கட்டிப்புடா’ பாடலுக்கு வரிகள் எழுதிய கவிஞர் வைரமுத்து பாடல் உருவான ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக யூடியூப் சேனல் ஒன்று அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பது பின்வருமாறு:-

தேவா எனக்கு பிடித்த இசையமைப்பாளர். ரொம்ப அன்பர், ரொம்ப ரசிகர், ரொம்பவும் மரியாதை தெரிந்தவர். குஷி படத்துக்கு பாடல் எழுதி முடிச்சாச்சு. ஒருநாள் தேவா என்னை அழைச்சு ‘ஒரு கமர்ஷியல் சாங்’ பண்ணனும் சார்-ன்னு சொன்னாரு. ‘ஏன் இதுவரைக்கும் பண்ணதெல்லாம்  கமர்ஷியல் சாங் கிடையாதா?’-ன்னு கேட்டேன்.

‘கட்டிப்புடி கட்டிப்புடா’ பாடலுக்கு சும்மா டம்மியாக ரெண்டு லைன் எழுதி இருக்கேன். அது டைரக்டர், தயாரிப்பாளருக்கு புடிச்சிருக்கு. நீங்க தப்பா நினைக்கலான அதையே நாங்க வச்சுக்கலாமான்னு கேட்டார் தேவா. சரி பாடுங்க-ன்னு சொன்னேன். அவர் இந்தப் பாடலை பாடினார். உடனே இது அப்படியே ஓகே-ன்னு சொன்னேன். அப்படியே வச்சுங்க-ன்னும் சொன்னேன்.



கார்ல வரும்போது என் உதவியாளர், ‘அந்த வரி கொஞ்சம் கீழே இருக்கே, அதை ஏன் ஓகே சொன்னிங்க’ன்னு கேட்டார். அத விட கீழ என்னால எழுத முடியாதுன்னு நான் சொன்னேன். அந்த தொடக்க வரி நான் எழுதவில்லை. அதன் பல்லவி முழுதுமே நான் எழுதவில்லை.

என்னுடைய வரிகள்ன்னு பாத்தீங்கனா, ‘ஆக்ஜிசன் இல்லாமல் இமயமலை ஏறாதே, கற்பனை இல்லாமல் கட்டிலின் மேல் சேராதே’ அப்பிடின்னு போட்டுருப்பேன். அதெல்லாம் கொஞ்சம் கவித்துவமா இருக்கும். இதெல்லாம் என்ன தெரியுமா?, வாழ்க்கையில எல்லாம் அம்சங்களும் வேண்டியிருக்கு. கொண்டாட்டம் வேண்டியிருக்கு.

இந்த புனிதம் ஒருபக்கம். இந்த கொண்டாட்டம் ஒருபக்கம். இந்த கேளிக்கை ஒருபக்கம். வேடிக்கை ஒருபக்கம், எல்லாம் சேர்ந்த சமூகத்துல இதற்கும் ஒரு பங்கு இருக்கும். இதை நான் ஞாயப்படுத்தவில்லை ஆனா புரிஞ்சுக்கிறேன். வாழ்க்கையில் இரண்டு விஷயங்கள் இருக்கு. சில விஷயங்களை ஏற்றுக்கொள்வது. எல்லாத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் புரிந்து கொள்ளலாம். இவ்வாறு வைரமுத்து கூறினார்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

தண்ணீரே இல்லாமல் காரை சுத்தம் செய்யும் நிறுவனம்!!

தண்ணீரே இல்லாமல் உங்களது காரை நாங்கள் சுத்தம் செய்து தருகிறோம் இப்படி யாரேனும் சொன்னால் இனி நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.…

1 hour ago

ஜெயிக்கப் போவது யார்? சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நீ தனது…

1 hour ago

’நேசிப்பாயா’ படத்தின் புரமோஷன் விழாவில் நயன்தாரா..எப்படி?

நடிகை நயன்தாராவை ஒரு திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யும் தயாரிப்பாளர்களிடம் முதலில் அவர் கூறும் நிபந்தனை எந்தவித புரமோஷனு க்கும் வர மாட்டேன்…

3 hours ago

மாரடைப்பு ஏற்படும் போது வலி எப்படி இருக்கும் ..? நெஞ்சு வலி தானா அல்லது என்ன வலி என்று எப்படி கண்டறிவது?

மாரடைப்பு என்பது பொதுவா க சுருக்சுருக்கென்று கூர்மையாக இருக்கும் வலி மட்டுமல்ல, மாறாக இது உடலில் பரவலான அசௌகரிய உணர்வையும்…

3 hours ago

ஜூலை மாத ராசி பலன்கள் (சிம்மம், கன்னி )

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில்…

3 hours ago

தயாரிப்பாளர் காலில் விழுந்த கேப்டன்.. ஏன்?பாவா லட்சுமணன் சொன்ன பிளாஷ்பேக்

நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் கடந்த வருடம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஒவ்வொரு…

4 hours ago