Categories: CinemaEntertainment

கடனில் சிக்கிய சிவாஜி பட இயக்குனர்!.. கை கொடுத்து தூக்கிவிட்ட எம்.ஜி.ஆர்

1950,60ஸ் களில் திரையுலகில் ஒரு பழக்கம் இருந்தது. சிவாஜியை வைத்து படமெடுக்கும் இயக்குனர்கள் தொடர்ந்து சிவாஜியை வைத்து மட்டுமே படம்  எடுப்பார்கள். அதேபோல், எம்.ஜி.ஆருக்கு என சில இயக்குனர்கள் இருந்தார்கள். அவர்கள் தொடர்ந்து எம்.ஜி.ஆரை வைத்து மட்டுமே படம் எடுப்பார்கள். இப்படி நடக்க தயாரிப்பு நிறுவனங்களும் காரணமாக இருந்தது.



வாகிணி ஸ்டுடியோ தேவர் பிலிம்ஸ், மாடர்ன் பிக்சர்ஸ், ஜெமினி பிக்சர்ஸ், ஏவிஎம் என அப்போது திரைப்படங்களை தயாரித்து வந்த நிறுவனங்களுக்கென தனி இயக்குனர்கள் இருப்பார்கள். அவர்கள் அந்த நிறுவனங்களுக்கு மட்டுமே படம் இயக்குவார்கள். ஆனால், தோல்வி மற்றும் நஷ்டம் காரணமாக அதில் சில இயக்குனர்கள் மற்ற நடிகர்களை வைத்து எடுத்த கதையும் உண்டு.

சிவாஜியை வைத்து வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களை இயக்கியவர் பி.ஆர்.பந்துலு. இவரை சிவாஜி பட இயக்குனர் என்றே அழைப்பார்கள். சிவாஜியை வைத்து ஏபி நாகராஜன் இயக்கிய படம் நவராத்திரி. அதேபோல், பந்துலு இயக்கிய திரைப்படம் முரடன் முத்து. இரண்டு படமும் ஒரே நேரத்தில் உருவானது.



அப்போது சிவாஜி 99 படங்களில் நடித்து முடித்திருந்தார். எனவே, முரடன் முத்துவை 100வது படமாக சிவாஜி அறிவிப்பார் என பந்துலு நினைத்தார். ஆனால், சிவாஜியோ நவராத்திரி படத்தை அறிவித்தார். இதனால், பந்துலுவுக்கு கோபம் வந்தது. அதோடு, சிவாஜியை வைத்து அவர் தயாரித்து இயக்கிய சில படங்கள் நஷ்டத்தை சந்தித்தது. இதனால் கடனிலும் சிக்கினார்.

எனவே, எம்.ஜி.ஆரிடம் சென்று தனக்கு ஒரு படம் நடித்து கொடுக்கும்படி கேட்டார். அவருக்கு உதவ நினைத்த எம்.ஜி.ஆர் ‘ஒரு நல்ல கதையோடு வாருங்கள்’ என சொல்ல பந்துலு உருவாக்கிய கதைதான் ‘ஆயிரத்தில் ஒருவன்’. இப்படத்தை பந்துலு தயாரித்து இயக்கினார். இந்த படம் உருவான போது எம்.ஜி.ஆருக்கு இருந்த அரசியல் எதிர்ப்பால் படப்பிடிப்பை நடந்த முடியாமல் பந்துலு சிரமப்பட்டார். இதனால் மேலும் மன உளைச்சலுக்கு உள்ளானார்.

தயாரிப்பாளரின் நிலையை அறிந்த எம்.ஜி.ஆர் தனது தலைமையிடம் பேசி படப்பிடிப்புக்கு இடையூறு வராமல் பார்த்துக்கொண்டு அப்படத்தில் நடித்து கொடுத்தார். அப்படி உருவான ஆயிரத்தில் ஒருவன் படம் வசூலில் சக்கை போடு போட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால், எல்லா கடன்களையும் அடைத்து நல்ல லாபத்தை பார்த்தார் பந்துலு.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

கோபிக்கு வந்த ஆப்பு – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியை…

8 hours ago

TTF வாசன் காதலியை வைத்து தந்திரமாக காய் நகர்த்திய விஜய் டிவி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து விரும்பி பார்ப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான்.…

8 hours ago

வித்தியாசமாக குழந்தைகளுக்கு இலங்கை ஸ்டைல் ரொட்டி செய்து கொடுத்து அசத்துங்க..

சாதாரணமாக டிபன் செய்வது என்றால் இட்லி, தோசை , சப்பாத்தி தான் செய்வோம். அதை மீறி பார்த்தல் சில நேரங்களில்…

8 hours ago

’எலக்சன்’ திரைப்பட விமர்சனம்

வலைப்பின்னல் போன்ற சிக்கலான உள்ளாட்சி அரசியல் குறித்தும் அதன் பிரதிநிதிகள் குறித்தும் பேசும் படமாக, நாடே தேர்தல் ஜுரத்தில் இருக்கும்…

8 hours ago

உடலென நான் உயிரென நீ -16

16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…

12 hours ago

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

12 hours ago