மன்னர்களின் ராஜ்ஜியம்  அரண்மனைகள்  

மன்னர்களின் ராஜ்ஜியம்  அரண்மனைகள்  



அரண்மனை என்பது அரசன் அல்லது அரசி வகிக்கும் மாளிகை.
அரண் என்பது பாதுகாப்பு. மனை என்றால் வீடு. எனவே பாதுகாப்பான இல்லம் என்பது கருத்து.பொதுவாக இத்தகைய இல்லம் அரசர் உடையதாக இருப்பதால் அரசருடைய மாளிகையே அரண்மனை எனக் கருதப்படுகிறது. அரண்மனை அல்லது அரமனை என்று வழங்கப்படும் சொல் அரசருடைய இல்லம் அல்லது இறைவனுடைய இல்லம் என்ற பொருளைத் தாங்கி நிற்கிறது.

அரண்மனைகள் எதிரி நாட்டவரிடம் இருந்து மன்னரைக் காக்கும் பொருட்டு மிக்க பாதுகாப்புடன் கட்டப்படுவன.  கோட்டைகளாலும், கண்காணிப்பு கோபுரங்களாலும், சில நேரங்களில் அகழிகளாலும் சூழப்பட்டிருக்கும். அரசனுக்கும், அரசிக்கும் மிக்க வசதிகள் நிறைந்த இருப்பிடம், உவளகம், அவர்கள் உலாவ பூந்தோட்டம், அமைச்சர்களுடனும், பிற அவையோருடனும் கலந்துரையாடவும், நீதி வழங்கவும் அரசவை போன்ற பகுதிகள் அரண்மனைகளின் உள்ளே இருக்கும்.



ஆயிரம்பேர் அமர்ந்து உண்ணக்கூடிய வகையிலான பிரம்மாண்டமான அன்னதானக் கூடமும் இதற்குள் உள்ளது. மேலும் அந்த அறையில் உணவு பரிமாறுவதற்காக வைக்கப்பட்டுள்ள குவளைகள் ஒரு மனிதனின் உயரத்தில் பாதி அளவில் இருப்பது பார்போரை வியப்பில் ஆழ்த்தும். வெவ்வேறு அளவில் அம்மியும் ஆட்டு உரலும் மண் அடுப்புகளும் தண்ணீர் தொட்டிகளும் ஆள் உயர குவளைகளும் இட்லிக் கொப்பறைகளும் கொண்ட சமையலறையும் உண்டு.

அரசப் பெண்களுக்கென்று தனி அறைகள் உள்ளன. அழகிய ஊஞ்சலும், கண்ணாடியும் அவர்களுக்கென அமைக்கப்பட்ட தனிக் குளமும் அரண்மனையின் உள்ளன. பிரத்யேகமாக நாட்டிய சாலையும் அரண்மனையில் உள்ளது. இந்த நாட்டிய சாலை தமிழகக் கோயில் கட்டிடக் கலையைப் போன்று தூண்கள் வைத்துக் காணப்படுகிறது. இந்த நாட்டிய சாலையில் அரச பெண்கள் பார்ப்பதற்காக தனி அறைகள் உள்ளன. அவர்களை சபையில் உள்ளவர்கள் காண முடியாதபடி அறைகள் பிரிக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலேயர்களுக்கென்று தனி மாளிகை பிற்காலத்தில் கட்டப்படுள்ளது. போர் கருவிகள் வைக்கப்பட்ட கூடாரத்தில் பல விதமான வால்களும் கேடயங்களும் வில்லும் அம்பும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டு அரண்மனைகள்  

தமிழ்நாட்டை பல்வேறு காலகட்டங்களில் சோழர்களும், பாண்டியர்களும், பல்லவர்களும் ஆண்டு வந்துள்ளனர்.

இவர்களைத் தவிர, ஏராளமான குறுநில மன்னர்களும், ஜமீன்தார்களும், தமிழ்நாட்டின் பல பகுதிகளை ஆண்டு வந்துள்ளனர். அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் நாம் வாழவில்லை என்றாலும், அந்த ராஜரீக காலத்தினை நாம்
நம் கண் முன்னே நிறுத்தும், தமிழ்நாட்டில் இன்றும் நாம் காணக்கூடிய அரண்மனைகளில் பிரபலமாக அறியப்படும் 7  அரண்மனைகளை பார்ப்போம்:



  1. செட்டிநாடு அரண்மனை

  2. பத்மநாபபுரம் அரண்மனை

  3. பெர்ன்ஹில்ஸ் பேலஸ்

  4. திருமலை நாயக்கர் மஹால்

  5. தஞ்சாவூர் அரண்மனை

  6. தமுக்கம் அரண்மனை

  7. சொக்கநாத நாயக்கர் அரண்மனை

ஒவ்வொரு அரண்மனையை பற்றி இனி வரும் பதிவுகளில் விரிவாக பார்க்கலாம்.



What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

கோபிக்கு வந்த ஆப்பு – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியை…

3 hours ago

TTF வாசன் காதலியை வைத்து தந்திரமாக காய் நகர்த்திய விஜய் டிவி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து விரும்பி பார்ப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான்.…

3 hours ago

வித்தியாசமாக குழந்தைகளுக்கு இலங்கை ஸ்டைல் ரொட்டி செய்து கொடுத்து அசத்துங்க..

சாதாரணமாக டிபன் செய்வது என்றால் இட்லி, தோசை , சப்பாத்தி தான் செய்வோம். அதை மீறி பார்த்தல் சில நேரங்களில்…

3 hours ago

’எலக்சன்’ திரைப்பட விமர்சனம்

வலைப்பின்னல் போன்ற சிக்கலான உள்ளாட்சி அரசியல் குறித்தும் அதன் பிரதிநிதிகள் குறித்தும் பேசும் படமாக, நாடே தேர்தல் ஜுரத்தில் இருக்கும்…

3 hours ago

உடலென நான் உயிரென நீ -16

16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…

7 hours ago

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

7 hours ago