அத்தியாயம்-11

ஒரு வாரத்துக்கு பிறகு…

காலையில தேவானந்தன் பேசிய பேச்சால் அன்று முழுவதும் மூட் அவுட் ஆகவே இருந்தால் மோகனா .எப்படி பேசிட்டான் இப்படி கூட ஒருவரை வார்த்தையால கஷ்டப்படுத்த முடியுமா? நினைச்சுப் பார்க்கவே கஷ்டமா இருந்தது.

காலையில் என்ன நடந்தது என்றால்…



வீட்டின் கீழ் தளத்தில் அவனுக்கென்று ஒரு தனி அறை இருந்தது. அவனைப் பார்க்க யாராவது வந்தால் அந்த அறையில் அமர வைத்து தான் பேசுவான். உறவுக்காரர்களும் நண்பர்களும் பர்சனலாக ஏதாவது பேச வேண்டுமென்றால் அந்த அறையில் வெயிட் பண்ணு வார்கள் இவன் அவர்களோடு பேசிவிட்டு அவர்களை அனுப்பிவைப்பான். பொதுவாக அந்த அறைக்கு யாரும் போக மாட்டார்கள் ஏனென்றால் அவனுக்கு அப்படி வருவதும் பிடிக்காது. தொழிலாளர்களோ முதலாளியோ தங்கள் தொழிலைப்பற்றி பேசுவது ரகசியம் காக்கப்பட வேண்டும். தன் மனைவியாக இருந்தால் கூட ஷேர் பண்ணுவது தப்பு என்ற கொள்கை உடையவன். தனக்கு மட்டும் தெரிய வேண்டுமே என்ற எண்ணத்தோடு சில பர்சனல் விஷயங்களையும் பேச வேண்டிய சூழ்நிலை இருக்கும் அப்படி இருக்கும் போது அது வீட்டிற்கு மற்றவர்களுக்கு தெரிய வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் அவன் அந்த தனியறையை பயன்படுத்தினான்.

திருமணமான மூன்று மாதக்காலத்தில் மோகனா அந்த அறைக்கு போனதே இல்லை. அன்று சின்ன மாமனார் கணபதி ஊரிலிருந்து வந்திருந்தார். அவர் ஒரு கடிதத்தை இவளிடம் கொடுத்து இது தேவானந்தனுக்கு வந்த கடிதம் அவனிடம்  கொடுத்து விடும்மா என்று சொல்லவும் ஏதாவது முக்கியமான கடிதமாக இருக்கப் போகிறது என்ற எண்ணத்தில் அதை எடுத்துக் கொண்டு அறைக்குள் சட்டென்று நுழைந்து விட்டாள்.



உள்ளே ஒரு இளம் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த தன் கணவன் இவளுடைய வரவை பார்த்து முகம் சுளித்தான். பிறகு எழுந்து வந்து இவள் அருகில் இவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? அறைக்குள் வருவதற்கு முன் கதவைத் தட்டிவிட்டு வரவேண்டும் என்ற மேனர்ஸ் கூடவா தெரியாது? நீ பாட்டுக்கு வந்து கதவைத் திறக்கிறே? என்று எரிந்து விழுந்தான்.

வார்த்தைகள் வெளிவராமல் திக்கித்திணறி சாரி என்று தலை குனிந்தபடி நின்றாள் மோகனா. முதலில் வெளியில் போ..என்ன விஷயமா இருந்தாலும் அப்புறம் வந்து பேசிக்கலாம் என்று சொன்னவன் அவள் கையில் வைத்திருந்த கடிதத்தை கூட பார்க்கவில்லை படாரென்று கதவை சாத்திவிட்டான்.

முகம் சுண்டிப்போன மோகனா நேராக மாமனாரிடம் வந்தவள் மாமா அவர் ரொம்ப பிசியா இருக்கிறாராம் அப்புறமா வந்து பார்க்கிறேன் சொன்னார் இருந்தாங்க… கடிதத்தை அவரிடம் கொடுத்துவிட்டு பட்டென்று முகத்தை திருப்பிக்கொண்டாள். அவளுடைய முகத்தை பார்த்த  மாமனார் எதையோ கேட்க வாயை திறக்க இவள் அங்கு நிற்காமல் விறுவிறுவென்று நடந்து தன் அறைக்கு வந்து கதவை தாழிட்டுக் கொண்டாள். பீரிட்டு  வந்த அழுகையை ஒரு மூச்சு அழுது தீர்த்தாள். மனைவி மட்டுமே வேண்டும் அவளோடு சந்தோஷமாக இருக்க வேண்டும். ஆனால் அவளுக்கு எந்த உரிமையும் இல்லை என்று ஒதுக்கிவைக்கும் இந்த சமுதாயத்தை நினைத்து வேதனைப்பட்டாள். இப்படியெல்லாம் பேசிய அவன் முகத்தை  இனிமே ஏறிட்டு பார்க்க கூடாது அவனாக வலிய வந்து பேசற வரைக்கும் நாம  போய் பேசக்கூடாது என்ற  முடிவுக்கு வந்தாள்.



What’s your Reaction?
+1
17
+1
11
+1
1
+1
0
+1
0
+1
2
+1
3

Padma Grahadurai

Website Admin

View Comments

Recent Posts

கோபிக்கு வந்த ஆப்பு – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியை…

6 hours ago

TTF வாசன் காதலியை வைத்து தந்திரமாக காய் நகர்த்திய விஜய் டிவி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து விரும்பி பார்ப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான்.…

6 hours ago

வித்தியாசமாக குழந்தைகளுக்கு இலங்கை ஸ்டைல் ரொட்டி செய்து கொடுத்து அசத்துங்க..

சாதாரணமாக டிபன் செய்வது என்றால் இட்லி, தோசை , சப்பாத்தி தான் செய்வோம். அதை மீறி பார்த்தல் சில நேரங்களில்…

6 hours ago

’எலக்சன்’ திரைப்பட விமர்சனம்

வலைப்பின்னல் போன்ற சிக்கலான உள்ளாட்சி அரசியல் குறித்தும் அதன் பிரதிநிதிகள் குறித்தும் பேசும் படமாக, நாடே தேர்தல் ஜுரத்தில் இருக்கும்…

6 hours ago

உடலென நான் உயிரென நீ -16

16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…

10 hours ago

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

10 hours ago