Categories: CinemaEntertainment

விக்னேஷ் சிவன் – முதன் முதலாக மனம் திறந்த நயன்தாரா

திரைப்பட தயாரிப்பாளர் விக்னேஷ் சிவனுடனான தனது திருமணம் குறித்து  முதன் முதலாக மனம் திறந்த நடிகை நயன்தாரா.!



நடிகை நயன்தாரா தற்போது கனெக்ட் எனும் த்ரில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக நயன்தாராவுடன் சிறப்பு நேர்காணல் ஒன்று சமீபத்தில் நடைபெற்றது.  அந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி டிடி தான் தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் டிடி நயன்தாராவிடம் பல கேள்விகள் கேட்டார். அதற்கு நடிகை நயன்தாராவும் மறுக்காமல் பதில் அளித்து வந்தார். அப்போது டிடி எதற்காக படங்களில் ஹீரோயினாக மட்டும் நடிக்காமல் சிவகாசி, சிவாஜி போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடினீர்கள் என்ற கேள்வியை கேட்டார்.



அதற்கு பதில் அளித்த நயன்தார ” நான் ஸ்பெஷலாக படங்களின் ஒரு பாடலில் மட்டும் நடமாடியதால் பலரும் அட்வைஸ் கூறினார்கள். எதற்காக இப்படி ஒரு பாடலில் மட்டும் நடனமாடுகிறாய்.. பிறகு வாய்ப்பு அந்த மாதிரியே வந்துவிடும் என கூறினார்கள்.  நான் அவர்கள் சொன்னதை பற்றியெல்லாம் யோசிக்கவே இல்லை.

ஏனென்றால், நான் அந்த மாதிரி ஸ்பெஷல் பாடல்களில் ஆடுவது மிகவும் ஸ்பெஷலான விஷயம், எனவே என்னிடம் ஏதோ ஒன்று ஸ்பெஷலாக இருப்பதால் தான் என்னை அழைக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் அந்த காலகட்டத்தில் கதாநாயகிகளுக்கு  முக்கியத்துவம் குறைவாகவே இருந்தது. அப்போது எல்லாம் படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் ஏதேனும் விழாவிலும் கதாநாயகிகளுக்கு ஒரு ஓரமாகவே இடம் கிடைக்கும். அந்த காரணத்திற்காக விழாக்களில் எதுவும் பங்கேற்பதை தவிர்த்திருந்தேன். அதை மாற்றவே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் (உமென் சென்ட்ரிக்) படங்களை தேர்ந்தெடுத்து நடித்தேன்.



மேலும், தொலைக்காட்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினியுடன் பேசிய நயன்தாரா, “பெண்களுக்கு ஏன் கட்டுப்பாடுகள்? அது தவறு என்று உணர்கிறேன். திருமணத்திற்குப் பிறகு பெண்கள் வேலை செய்யக்கூடாது என்ற தலைப்பு ஏன்? திருமணம் முடிந்த மறுநாள் ஆண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். திருமணம் என்பது ஒரு இடைவெளி அல்ல. அது உங்களை வாழ்வில் நிறைவாகவும் செட்டில் ஆக்கவும் செய்கிறது. நீங்கள் அதை உணரும் போது, நீங்கள் மேலும் சாதிக்க விரும்புகிறீர்கள். இதுவரை நான் சந்தித்த எல்லா பெண்களிடமும் அந்த எண்ணத்தை பார்த்தேன்.” மேலும் அவர் எனக்கு எதுவும் மாறவில்லை இது ஒரு புதிய கட்ட வாழ்க்கையின் அழகான ஆரம்பம். எனது கணவரின் ஆதரவு அமைப்பால் மட்டுமே என் வாழ்க்கை சிறப்பாக உள்ளது. என்னால் இன்னும் சாதிக்க முடியும், நிறைய படங்களை நன்றாகப் புரிந்து கொண்டு மேலும் நன்றாக நடிக்க  முடியும் என்றும் என் திருமணம் அழகாக இருக்கிறது என்றும் தனது திருமணத்தை பற்றி பேசியுள்ளார்.

  மேலும் நடிகை நயன்தாரா கனெக்ட் திரைப்படத்தை தொடர்ந்து ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Padma Grahadurai

Website Admin

Recent Posts

மகாபாரதக் கதைகள்/இந்திரன் வியந்த கர்ணன்!

பாரத தேசத்தில் பல வள்ளல் பெருமக்கள் தோன்றியிருந்தாலும், கர்ணனுக்கு ஈடானவர்கள் வேறு எவரும் இல்லை. கௌரவர் களில் மூத்தவனான துரியோதனனைத்…

1 hour ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு பயறணீநாத சுவாமி திருக்கோவில்

சுவாமி : பயறணீஸ்வரர். தலச்சிறப்பு : இவ்வாலயம் அரியலூர் மாவட்டத்தில் சுற்றுலாவுக்கு சிறந்த இடமாகும். தல வரலாறு : இக்கோவில் 1400 ஆண்டுகளுக்கு முன்…

1 hour ago

நாள் உங்கள் நாள் (22.05.24) புதன்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று மே 22.05.24 புதன்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - வைகாசி 9 ஆம்…

1 hour ago

இன்றைய ராசி பலன் (22.05.24)

குரோதி வருடம் வைகாசி 9, புதன் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உள்ள உத்திரட்டாதி சேர்ந்தவர்களுக்கு…

1 hour ago

ஆனந்தியிடம் உண்மையை சொல்ல போகும் அன்பு.. ஆட்டத்தை கலைக்க ரெடியான மகேஷ்- சிங்க பெண்ணே சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சிங்க பெண்ணே சீரியல் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. கடந்த வார எபிசோடில் இருந்தே…

12 hours ago

பாக்கியாவுக்கு வந்த புது சிக்கல் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வி ஜே…

12 hours ago