Categories: Entertainmentserial

எதிர்நீச்சல் மருமகள்கள்



ஈஸ்வரி (கனிகா)

எதிர் நீச்சல்  முதல் எபிசோட் இந்த ஆண்டு பிப்ரவரி 7 அன்று சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. சீரியலில்தயாரிப்பாளர்கள் அதிக தைரியமான மற்றும் முற்போக்கான பெண் கதாபாத்திரங்களை காட்ட முயற்சித்துள்ளனர். அந்த கதாபாத்திரத்திற்கு கனிக்காவை தேர்வு செய்தார் இயக்குனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் தொலைக்காட்சிக்கு திரும்பிய கனிகா இதில் மூத்த மருமகளாக நடித்து மக்களை கவர்ந்தும் வருகிறார்.  

தமிழ் நடிகை கனிகா 2002 ஆம் ஆண்டு தமிழில் வெளியான பைவ் ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமான கனிகாதனது பன்முகத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்தவர். அவர் ஏராளமான மலையாளம்தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் பணியாற்றியுள்ளார்பிரபலமான நடிகர்களுடன் நடித்தார் மற்றும் அனைத்து கதாபாத்திரங்களில் நடித்தவர்.

பல ஆண்டுகளாக லைம் லைட்டில் இருந்து விலகி இருந்த கனிகா தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க முடிவு செய்துள்ளார். பிரபல தொலைக்காட்சித் தொடரான கோலங்கள் இயக்கிய திருச்செல்வம் தான் இயக்குகிறார் என தெரிந்து பிறகு எதிர் நீச்சல் தொடரில் நடிக்க சம்மதம் கூறியிருக்கிறார். அவரும் 7 வருட இடைவெளிக்குப் பிறகு தமிழ் தொலைக்காட்சிக்கு மீண்டும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



ரேணுகா (பிரியதர்ஷிணி)

பாக்யராஜின் ’தாவணி கனவுகள்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை பிரியதர்ஷினி. தொகுப்பாளராக இருபது வருடங்கள் கடந்தும் வெற்றிகரமான தொகுப்பாளராக வலம் வருபவர் இப்போது சின்னத்திரையில் ‘எதிர்நீச்சல்’ சீரியல் மூலம் நடிப்பிற்கு திரும்ப வந்திருக்கிறார். 

 சீரியல் பற்றி அவர் கூறியது:  




ரொம்பவே அழகாக எழுதப்பட்ட சீரியல் என்று தான் ‘எதிர்நீச்சல்’ பற்றி சொல்வேன். ’கோலங்கள்’ சீரியல் இயக்குநர் திருச்செல்வத்தின் எழுத்து பற்றி அனைவருக்குமே தெரியும். அவர் என்னை ‘எதிர்நீச்சல்’ சீரியலின் ரேணுகா கதாபாத்திரத்திற்காக அணுகிய போது மறுப்பதற்கு எனக்கு எந்த ஒரு காரணமும் இல்லை. “என்னால் இது செய்ய முடியும் என நினைக்கிறீர்களா?” எனக் கேட்டேன். அவர் என் மேல் நம்பிக்கை வைத்திருந்தார். இடையில் சில நாட்கள் சீரியல் நடிக்காமல் இருந்தேன். அப்படி இருக்கும் போது இப்படியான ஒரு நல்ல கதாபாத்திரம் வரும்போது வாய்ப்பை தவற விட விரும்பவில்லை.

இந்த சீரியலில் ரேணுகா கதாபாத்திரத்தின் உடைநகை என சின்னச் சின்ன விஷயங்கள் கூட ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது. இந்த கேரக்டருக்காக செட்டி நாட்டு நூல் சேலைபதக்கம்அன்னம் டாலர் வைத்த செயின்இரட்டை வட செயின்கண்ணாடி வளையல் என அனைத்தையும் பார்த்துப் பார்த்து அணிவேன்.

எனக்கும் ரொம்பவே சந்தோஷம். ஒருத்தருடைய கதாபாத்திரம் இன்னொருவரின் மனதில் பதியும் அளவுக்கு நன்றாகவே போய்க் கொண்டிருக்கிறது. என்னுடைய ரேணுகா கதாபாத்திரம் பொறுத்தவரைக்கும் எல்லா விஷயங்களையும் தெளிவாகப் பேசக்கூடிய பெண். ஆனால்அதெல்லாம் சமையலறை வரைக்கும் தான். ஆனால்நந்தினியும் ஈஸ்வரியும், ஜனனியும்  வேறு வேறு. இப்படி நான்கு விதமான கதாபாத்திரங்கள். இதை பல பெண்களும் தங்களுக்கும் பொருந்துவதாக சொல்கிறார்கள். வெவ்வேறு நிலையில் ஒடுக்கப்பட்ட பெண்கள் ஒரு குடும்பத்தில் இருக்கும் போது அதில் நான்காவதாக ஒருத்தி வந்து  என்னவெல்லாம் செய்கிறாள் என்பதுதான் கதை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் ஜாலியாக இன்னொரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிறார். என் தங்கை டிடியின் ‘காஃபி வித் டிடி’ விஜய் டிவி நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்றார்.  



நந்தினி (ஹரி பிரியா)

மூன்றாவது மருமகளாக அப்பாவி பெண்ணாக நடித்து மக்களை தன் பக்கம் திருப்பியுள்ளார் இந்த ஹரிபிரியா. விஜய் டிவியில் ஒளிபரப்பான “ கனா காணும் காலங்கள் ” என்ற தமிழ் சீரியலில் அறிமுகமாகும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது . இந்த சீரியல் அதிகம் மக்கள் பார்க்கப்பட்ட சீரியலில் ஒன்றாகும்மேலும் இது பள்ளி வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதால் மிகப்பெரிய நடிகர்கள் இருந்தனர். அந்த சீரியலில் ஹரிப்ரியா ஒரு பகுதியாக இருந்தார்.அதன் பிறகு, ” வாணி ராணி ” சீரியலில் நடிக்க சன் டிவிக்கு சென்றார் . தற்போதுஅவர் ஜீ தமிழின் லக்ஷ்மி வந்தாச்சு சீரியலில் பணிபுரிந்திருக்கிறார்மேலும் கார்த்திக்குடன் பிரியமானவள் சீரியலில் துணை வேடத்திலும்சன் டிவியில் விதி சீரியலில் எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.



ஜனனி (மதுமிதா)

ஜனனியாக நான்காவது மருமகளாக செம போல்டாக நடித்து ரசிகர்களை தன் பக்கம் திருப்பியுள்ளார் இந்த மதுமிதா. அவ்வளவாக எதிர்த்து பேசாமல் அமைதியாகவே இருந்து வந்த ஜனனி தற்போது குணசேகரன் நடுத்தெருவில் வைத்து எதிர்த்துப் பேசி அவமானப்படுத்தும் பெண்ணாக  நடித்துள்ளார். பெண் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு நடித்து அசத்தியுள்ளார்.  இவர் கன்னடம்தெலுங்கு மற்றும் தமிழ் சீரியல்களில் பணியாற்றி இருக்கிறார். பிறகுஅவர் ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் 2017 இல் நடிகையானார் . புடமாலி என்ற கன்னட சீரியலில் துணைக் கதாபாத்திரத்தில் தனது நடிப்பு அறிமுகமானார். மதுஷானிஜெய் ஹனுமான் மற்றும் பல தொடர்களில் தோன்றினார். 2018 இல்மனசுனா மனசை சீரியலில் தெலுங்கில் அறிமுகமானார். பின்னர் பிரியாத வரம் வேண்டும் தமிழ் சீரியலில் நடித்தார். மதுமிதாவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் (ஜூன் 2022 நிலவரப்படி) 342kக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.



What’s your Reaction?
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Padma Grahadurai

Website Admin

Recent Posts

கோபிக்கு வந்த ஆப்பு – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியை…

7 hours ago

TTF வாசன் காதலியை வைத்து தந்திரமாக காய் நகர்த்திய விஜய் டிவி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து விரும்பி பார்ப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான்.…

7 hours ago

வித்தியாசமாக குழந்தைகளுக்கு இலங்கை ஸ்டைல் ரொட்டி செய்து கொடுத்து அசத்துங்க..

சாதாரணமாக டிபன் செய்வது என்றால் இட்லி, தோசை , சப்பாத்தி தான் செய்வோம். அதை மீறி பார்த்தல் சில நேரங்களில்…

7 hours ago

’எலக்சன்’ திரைப்பட விமர்சனம்

வலைப்பின்னல் போன்ற சிக்கலான உள்ளாட்சி அரசியல் குறித்தும் அதன் பிரதிநிதிகள் குறித்தும் பேசும் படமாக, நாடே தேர்தல் ஜுரத்தில் இருக்கும்…

7 hours ago

உடலென நான் உயிரென நீ -16

16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…

11 hours ago

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

11 hours ago