Kavithaigal

En Karpanaiyin Gethangal

நட்சத்திரச் சொட்டுக்கள் 

 

நனைந்த  இருளுள் 
நட்சத்திரச் சொட்டுக்கள்  நிறையத்
தொடங்குகையில் 
சுலபமாய் இறங்குகிறேன் 
ஞாபகங்களுள்
எனைத் துருவி எடுக்கும்
உன் தோளசைவுகள்
என் தேகம் கிளறும் உன் பார்வைகள்
திடமான உன் உடலுள்
புதைகிறேன் திரும்பவும்
மழையிரவு கலைந்த பிறகு
காம்பு சிவந்த பவள மல்லிகள்
கவலையற்றுக் கிடக்கின்றன
வாசலில்.

முயற்சி

 

 

பாவங்களை மன்னிப்பிற்கு அனுப்பிவிட்டு 
நியாயங்களுக்கு தயாரிக்கப்படும் சிலுவைகள் சுமக்கும் ஏசுபிரான்களுக்கு 
சூட்டப்படும் முள்கிரீடங்கள்
சீழுடைத்து பெருகிய நிணங்கள் ,
காத்திருக்கின்றன 
அதிகாலை விடியலுக்காய் ,
கிடைக்காத வெற்றிக்கான தகுதியோடு 
சுற்றியலையும் பச்சைப் பறவை ,
ஊதி ஊதி …மேகங்கலைத்து 
வெளிப்படுத்த முயற்சிக்கிறது
ஆதவனின் ஓர கதிரொன்றை .
What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!