Categories: CinemaEntertainment

கொலையான நந்தா ; பழியை சுமக்கும் ஆனந்தி.. சிங்க பெண்ணே சீரியல் அப்டேட்

சன் டிவியின் சிங்க பெண்ணே சீரியலில் யாருமே எதிர்பார்க்காத திருப்பம் ஒன்று நடந்திருக்கிறது. கடந்த வாரம் முழுக்க ஆனந்தி, மகேஷ், அன்பு என்ற முக்கோண காதலை மையமாகக் கொண்டே சீரியல் ஒளிபரப்பப்பட்டது. இதனாலேயே ரசிகர்களுக்கு ஒருவித சலிப்பும் ஏற்பட்டது.

ஆனால் இந்த வாரம் இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கும் என்று யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். நந்தா போலீசில் மாட்டிய போது அவன் எப்படியாவது மித்ராவின் பெயரை சொல்லிவிட வேண்டும் என்று தான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.

நேற்றைக்கு முந்தைய நாள் எபிசோடில் நந்தா என்னை மாஜிஸ்திரேட்டிடம் கூட்டிக்கொண்டு போங்கள், நான் அங்கு தான் உண்மையை சொல்வேன் என சொல்வது போல் காட்டப்பட்டிருந்தது. இதனால் கண்டிப்பாக நந்தா மித்ராவின் பெயரை சொல்லி விடுவான் என்று தான் ரசிகர்கள் நினைத்திருந்தார்கள்.

ஆனால் நேற்றைய எபிசோடில் திடீரென போலீஸ் ஹாஸ்டலுக்கே வந்து ஆனந்தியை கைது செய்து அழைத்துக் கொண்டு போனார்கள். எதற்காக இந்த கைது என எல்லோருமே குழம்பி இருந்த நிலையில் பிணவறைக்கு அழைத்துச் சென்று நந்தாவின் உடலை காட்டிய போது தான் இந்த எதிர்பாராத திருப்பம் ரசிகர்களுக்கு புரிந்திருக்கும்.



அதாவது மாஜிஸ்திரேட் முன்னிலையில் நந்தாவை ஆஜர் படுத்த அழைத்துக் கொண்டு போன வழியில் அவனை யாரோ கொலை செய்திருக்க கூடும். ஆனந்தி தான் கடைசியாக நந்தாவுடன் நெருங்கி பழகிய ஆள் என்பதால் சந்தேகத்தின் பெயரில் அவளை கைது செய்து இருக்கிறார்கள்.

மித்ராவை முந்திக்கொண்டு போட்டு தள்ளிய அந்த நபர்

தற்போது இந்த பிரச்சனையில் இருந்து ஆனந்தியே அன்பு மற்றும் மகேஷ் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் அடுத்த கட்ட கதை. நந்தா இறந்துவிட்டான் என்றதுமே எல்லோருக்குமே மித்ரா மீதுதான் சந்தேகம் வந்திருக்கும்.

ஆனால் உண்மையில் நந்தாவை, கம்பெனிக்கு தேடி வந்து தன் பெண்ணை ஏமாற்றியதாக குற்றம் சாட்டிய அந்த பெரியவர் தான் கொலை செய்திருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நந்தாவை பற்றி முழுதாக விசாரிக்கும் போது கண்டிப்பாக இதில் மித்ராவின் பெயர் சிக்குவதற்கே அதிக வாய்ப்பு இருக்கிறது.

இந்த கொலை பழியில் இருந்து ஆனந்தியை அன்பு எப்படி காப்பாற்றுகிறான் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நீயில்லாமல் வாழ்வது லேசா!-11

11 ‘‘வி.கே.வி நம்முடைய கான்ட்ராக்ட் கோட் தெரிந்து கொள்ள என்னிடமே பேரம் பேசினார் தெரியுமா மேடம்?" சஷ்டிகா சுமேரியாவிடம் சொல்ல,…

7 hours ago

மீனா -ராஜியை பார்த்தவுடன் எஸ்கேப்-பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் வழக்கம் போல பாண்டியன் கதிரை திட்டுவதாக அமைந்திருந்தது. இரவில்…

7 hours ago

‘கதாநாயகன்’ விமர்சனம்

பயந்த சுபாவம் கொண்ட ஹீரோ விஷ்ணு விஷாலுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஹீரோயின் கேத்ரின் தெரசாவுக்கும் காதல். காதலியை…

7 hours ago

நூடுல் பாக்கெட்டில் இருக்கும் மசாலாவை வீட்டிலேயே செய்யலாம்.. இதோ ரெசிபி

வீட்டில் வகை வகையாக மசாலா போட்டு சமைத்தாலும் கடைகளில் இருந்து வாங்கி உண்ணும் மசாலாக்களின் சுவையை போல நம்மால் செய்ய…

7 hours ago

சரணடைந்தேன் சகியே – 21

21     சிலீரென கண்ணாடி விழுந்து நொறுங்கும் சத்தத்தில் அபிராமி வேகமாக வந்து பார்த்தாள்.. சில விருந்தாட்கள் வருவதால்…

11 hours ago

மாமியாரை அடிக்க கை ஓங்கிய கோபி.. – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி சாவித்திரியை…

11 hours ago