தக்காளி செடியில் காய்கள் அதிகமாக காய்க்க இதை மட்டும் செய்யுங்க..

தக்காளி இல்லாமல் எந்த சமையலும் செய்ய முடியாது. இதனை மொத்தமாக கடையில் வாங்கி வைக்கவும் முடியாது. சீக்கிரம் அழுகி விடுவதால் ஒரு வாரத்திற்கு மட்டும் தான் வாங்கி வைத்திருப்போம். கடையில் வாங்கும் தக்காளியானது ரசாயனம் கலந்து பழுக்க வைத்திருப்பார்கள். அதனால் நீங்க வீட்டிலேயே தக்காளி செடி வளர்த்தால் ஆரோக்கியமான தக்காளி காய்களை பறித்து சமைக்கலாம். சில பேர் தக்காளி செடி வைத்திருப்பார்கள், ஆனால் அதிலிருந்து காய்கள் காய்க்காமலே இருக்கும் , அதனால் இந்த பதிவில் தக்காளி செடியில் அதிக காய்கள் காய்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

தக்காளி செடி வளர என்ன உரம் கொடுக்கலாம்:

தக்காளி செடிக்கு பொட்டாசியம் சத்து முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதற்கு ஒரு பக்கெட் எடுத்து தண்ணீரை நிரப்பி கொள்ளவும். அதில் சாம்பலை சேர்த்து கரைத்து கொள்ளவும். இந்த தண்ணீரை செடியின் வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும். இந்த கரைசலை ஊற்றுவதன் மூலம் செடி நன்றாக வளரும்.



பூச்சி தாக்காமல் இருக்க:

சாம்பல் கரைசலை கொடுத்த பிறகு ஒரு வாரம் கழித்து சுண்ணாம்பு கரைசலை கொடுக்க வேண்டும். இதற்கு சிறிகளவு தண்ணீரில் சுண்ணாம்பை கலந்து கொள்ளவும். இந்த கரைசலை செடிகளில் தெளித்து வர வேண்டும். இந்த கரைசலை தெளிப்பதால் செடிகளில் உள்ள பூச்சிகள் அழிந்து விடும்.

முக்கியமாக இந்த உரத்தை பூக்கள் பூப்பதற்கு முன்பு கொடுக்க வேண்டும்.

மேலும் தேமோர் கரைசலையும் கொடுக்கலாம். இந்த கரைசலை கொடுப்பதன் மூலம் பூச்சிகள் வராமல் இருக்கும்.

தக்காளி செடியின் தண்டுகளில் உள்ள பூச்சிகளையும் இலைகளின் உள்ள பூச்சிகளையும் போக்க விரலி மஞ்சள் , பூண்டு இரண்டையும் நச்சு தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும. பிறகு இந்த தண்ணீரை வடிகட்டி செடிகளின் தண்டுகளில் தெளித்து வந்தால், செடிகளில் உள்ள பூச்சிகள் இறந்து விடும்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

9 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

9 hours ago

நுங்கு இனிப்பு சாதம் செய்யலாம் வாங்க!

இந்த வெயிலுக்கு நுங்கு சாப்பிடுறது ரொம்ப நல்லது. நுங்கு சீசன் இப்பதான் ஆரம்பிக்குது. இன்னும் கொஞ்ச நாள்ல ஆங்காங்கே தெருவோரத்துல…

9 hours ago

‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடர் விமர்சனம்

தமிழக முதல்வரான கிஷோர் மீதான ஊழல் வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு அவருக்கு எதிராக…

9 hours ago

உடலென நீ உயிரென நான்-15

15 "  சப்பாத்தி மாவு எந்த அளவு அழுத்தி பிசையுறோமோ அந்த அளவு சாப்டா வருமாம் .குலோப்ஜாமூன் மாவை அழுத்தி…

12 hours ago

ஒருவரின் இறப்புக்குப் பின்பு அவரது ஆதார் கார்டை என்ன செய்வது?

நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் முக்கியமான ஆவணங்களாக…

13 hours ago