குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட வேகத்தில் வெடித்த பிரச்சனை.. வெளியேறிய பிரபலம்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து பிரபலம் ஒருவர் அதிரடியாக வெளியேறுவதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. முதல் சீசனில் வனிதா விஜயகுமார் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, இரண்டாவது சீஸனின் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருதிகாவும், கடைசியாக நடந்து முடிந்த சீசனில் மைம் கோபியும் டைட்டிலை வென்றனர்.



காமெடிக்கு பஞ்சம் இல்லாத நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின்… 5-ஆவது சீசன் பல சர்ச்சைகளுக்கு நடுவே, கடந்த வாரம் துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட்.. தற்போது சன் டிவியில் தொடங்கப்பட உள்ள ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சிக்கு தாவி விட்டார். இவர் மட்டும் இன்றி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளரை ஆகியோரும் அந்த நிகழ்ச்சிக்கு தாவியுள்ளனர்.

அதே போல் விஜய் டிவியில் இருந்த கோமாளிகள் சிலர் சன் டிவிக்கு சென்று விட்டதால்… இம்முறை புதிய கோமாளிகளுடன் ‘குக் வித் கோமாளி’ சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பமானது.

செஃப் தாமு மற்றும் மதம்பட்டி ரங்கராஜ் நடுவர்களாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை மணிமேகலை மற்றும் ரக்ஷன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள். விடிவி கணேஷ், சுஜிதா, வசந்த் வஷி, ப்ரியங்கா, உள்ளிட்ட பல போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி துவங்கியது.

அதே போல் கோமாளியாகவும் விஜய் டிவியை சேர்ந்தது புதிய பிரபலங்கள் கலந்து கொண்டு கலக்கி வந்தனர். தற்போது கோமாளிகளில் ஒருவராக இருந்த நாஞ்சில் விஜயன் அதிரடியாக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளதாக அறிவித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. கூறியுள்ளதாவது, “நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேன். எனக்கு விஜய் டிவியுடன் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் இனி Box Office Company தயாரிக்கும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டேன் என பதிவிட்டுள்ளார். இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியை…

4 hours ago

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா..புதிய அப்டேட்!

மிழ் திரையுலகில் காமெடி நடிகராகவே பல ஆண்டு காலம் பயணித்து வந்த நடிகர் சூரியின், திரை வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய…

4 hours ago

குழந்தைகளுக்கு பிடித்த பிரெஞ்சு டோஸ்ட் செய்யலாம் வாங்க!

French Toast உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் காலை உணவாகும். எளிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவு,…

4 hours ago

விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு

தமிழ் திரையுலகில் காமெடியனாக கொடிகட்டிப் பறந்தவர் சந்தானம். ஒரு காலத்தில் நிற்க கூட நேரமில்லாமல் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்த…

4 hours ago

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

8 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

8 hours ago