காவல் தெய்வங்கள்/முனியப்பன் திருக்கோயில்

அந்தகாசுரன் என்பவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தான். அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி அன்னை பராசக்தியை தேவர்கள் வேண்டினர். அவள் அவர்களைக் காப்பதற்காக காத்தாயம்மன் என்ற பெயரில் தோன்றினாள். அவள் லாடமுனி, முத்துமுனி, செம்முனி, வாழ்முனி, கருமுனி, கும்பமுனி. சடைமுனி என்ற ஏழு புதல்வர்களை உருவாக்கினாள். அவர்கள் அந்தகாசுரனை அடக்கினர். பின்னர் முனிகள் அனைவரும் ஒரே வடிவாகி கலியுகத்தில் மக்களைக் காப்பதற்காக பூமிக்கு வந்தனர். இவர்களது அம்சமாக விளங்குபவர் தான் இந்த முனியப்பன். இவர் கனல் கக்கும் வீரக் கண்களும், அருள் ஒளிரும் மேனியழகும், அஞ்சேல் என அபயம் காட்டும் அருளழகும் பொங்க விளங்குகிறார்.



 நீண்டதூர பயணம் புறப்படுபவர்கள் தங்கள் வாகனங்களுடன் இங்கு வந்து முனியப்பனை வணங்கிய பிறகு பயணம் செல்கின்றனர். தங்களுடன் பாதுகாப்பாக அந்த முனியப்பனே வருவதாக நம்புகின்றனர். 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் இது. சேலத்தின் காவல் தெய்வமாக விளங்கும் இவர், இரவில் சேலம் நகரின் காவல் பணிக்கு செல்வதாக நம்பப்படுகிறது. கன்னியாகுமரியிலிருந்து டில்லிக்கு செல்லும் லாரி டிரைவர்கள் விபத்தின்றி சென்று வர முனியப்பனை வேண்டிக் கொள்கின்றனர். இரவு நேரங்களில் லாரிகள் அதிகம் வரும் என்பதால் கோயில் 24 மணிநேரமும் திறந்திருக்கிறது.

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இயற்கையாகவே பயஉணர்வு உள்ளவர்கள் முனியப்பனுக்கு பொங்கல் வைப்பதாக வேண்டிக் கொள்கின்றனர். வேல்விலங்கு என்னும் சிறிய இரும்பு கம்பி இங்கு இருக்கிறது. இதைக் கொண்டு சுவாமிக்கு பூஜை செய்தால் தீய சக்திகள் விலகி பயஉணர்வு நீங்குவதாக நம்பிக்கை. இந்த வழிபாட்டுக்கு கட்டுவர்த்தனம் என்று பெயர். திருஷ்டி கழிய எலுமிச்சைபழத்தில் குங்குமம் தடவி கழிக்கப்படுகிறது.

மூலவர் முனியப்பன் வெண்ணங்கொடி என்ற ஒருவகை மரக்கொடி படர்ந்த பகுதியில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டுள்ளார். வலது கையில் வேலும், இடது கையில் வாளும் வைத்துள்ளார்.



திருவிழா:

பொங்கல் முடிந்ததும் ஜாகீர் அம்மாபாளையம் மாரியம்மன் கோயிலிலிருந்து எல்லைகாவல் தெய்வமான முனியப்பன் கோயிலுக்கு பக்தர்கள் அலகுகுத்தியும், அக்னிசட்டி ஏந்தியும்வருகின்றனர். ஞாயிறுதோறும் பொங்கல் வைக்கப்படுகிறது.

வேண்டுகோள்:

குழந்தை வரம், திருமணத்தடை நீங்குவதற்காக இங்குள்ள முனியப்பனிடம் வேண்டிக் கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

குழந்தை பாக்கியம் கிடைத்தவுடன் தொட்டில் போடுவதுடன், பொங்கல் வைக்கின்றனர்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

ஆனந்தியிடம் உண்மையை சொல்ல போகும் அன்பு.. ஆட்டத்தை கலைக்க ரெடியான மகேஷ்- சிங்க பெண்ணே சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சிங்க பெண்ணே சீரியல் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. கடந்த வார எபிசோடில் இருந்தே…

9 hours ago

பாக்கியாவுக்கு வந்த புது சிக்கல் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வி ஜே…

9 hours ago

பாக்கியலட்சுமி சீரியலில் இனி புது எழில் இவர் தான் – ரசிகர்களை ஷாக்காக்கிய தகவல் !

 தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ஈஸ்வரி கோபியோடு சேர்ந்து வீட்டை…

9 hours ago

’கன்னி’ திரைப்பட விமர்சனம்

நாயகி அஷ்வினி சந்திரசேகர், குழந்தை மற்றும் இளம் பெண் ஒருவருடன், மனித நடமாட்டம் இல்லாத மலைப்பாதையை கடந்த தனது தாத்தா…

9 hours ago

குழந்தைகளை குஷி படுத்தும் இந்த ஸ்ட்ராபெரி ஸ்பாஞ்ச் கேக்!

கோடை விடுமுறை என்றாலே ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பேரானந்தம் தான். பள்ளிக்கு நேரத்தில் எழத் தேவையில்லை. நினைத்த நேரத்தில் தூங்கலாம், உறவினர்கள்…

9 hours ago

உடலென நான் உயிரென நீ-17

17 " காஸ்மெடிக் சர்ஜரி " மதுரவல்லி முணுமுணுத்தாள் . " அ ...அப்படின்னா ? " சங்கரவல்லியின் கிராமத்து மூளைக்கு எட்டாத விசயங்கள் இவை . " ப்ளாஸ்டிக் சர்ஜரி கேள்விப்பட்டிருப்பீர்களே அம்மா ? முகத்தை  ,உடலை…

13 hours ago