அட்சய திருதியை அன்று சொல்ல வேண்டிய மந்திரங்கள்..! அன்று எப்படியாவது பல்லியை பார்த்து விடுங்கள்.! ஏன்.?

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அட்சய திருதியை அன்று சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. இந்நாளில் தங்கம் வாங்குவதை தவிர்த்து தான, தர்மங்களை அளவின்றி குறையில்லாமல் செய்ய வேண்டும். இந்நாளில் பல சிறப்புகள் உள்ளது. அதாவது, பகவான் பரசுராமர் அவதரித்த நாள், வியாசர் மகாபாரதம் எழுத ஆரம்பித்த நாள்,அன்னபூரணி தேவி அவதரித்த நாள் இப்படி அட்சய திருதியை நாளை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு அட்சய திருதியை மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.

அன்றைய தினத்தில், எந்தவொரு நோய் நோய்நொடியில்லாமலும், பாவங்கள் நீங்கவும், செல்வ வளம் பெருகவும் அட்சய திருதியை சக்திவாய்ந்த மந்திரங்களை கூற வேண்டும். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் அட்சய திருதியை அன்று சொல்லவேண்டிய சஞ்சீவினி மந்திரம், தன்வந்திரி மந்திரம் மற்றும் குபேர மந்திரம் என பல்வேறு மந்திரங்களை இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். மந்திரத்தை கூறி பயன்களை பெறுங்கள்.



அமிர்த சஞ்சீவினி மந்திரம்:

ஓம் நமோ பகவதி மிருதசஞ்சீவினி சந்தி குரு குரு ஸ்வாஹா

தன்வந்திரி மந்திரம்:

ஓம்| நமோ பகவதே வாசுதேவாய| தன்வந்திரியே| அமிர்தகலச ஹஸ்தாய|
சர்வ ஆமய நசனாய| த்ரைலோக்ய நாதாய| ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹா|

லட்சுமி குபேர மந்திரம்:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாயை கமலதாரிண்யை
சக்தியை சிம்ஹ வாஹின்யை பலாயை ஸ்வாஹா
ஓம் குபேராய நமஹ ஓம் மகாலட்சுமியை நமஹ

குபேர மந்திரம்:

ஓம் ஹ்ரீம் க்ளீம்செளம் ஸ்ரீம் கும் குபேராய
நரவாகனாயயக்ஷ ராஜாய தன தான்யாதிபதியே
லக்ஷ்மி புத்ராய ஸ்ரீம் ஓம் குபேராய நமஹ

குபேரன் மூல மந்திரம்:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லக்ஷ்மி குபேராய நம

குபேர தியான மந்திரம்:

மநு ஜவாஹ்ய விமாந வரஸ்திரம் கருடரத்ந
நிபம் நிதி தாயகம் சிவசகம் முகுடாதி விபூஷதம்
வரகம் தந்தம் பஜ துந்திலம்

குபேர காயத்ரி மந்திரம்:

ஓம் யஷேசாய வித்மஹே
வைஸ்ரவனாய தீமஹி
த்ந்நோ ஸ்ரீத : ப்ரசோதயாத்

குபேரன் துதி:

ஓம் குபேரம் மநு ஜாசினம் ஸகர்வம் கர்வ விக்ரஹம்
ஸ்வர்ணச்சாயம் கதா ஹஸ்தம் உத்தராதிபதிக் ஸ்மரேத்

ஓம் ஸ்ரீ யஷ ராஜாய குபேராய வைச்ரவணாய
தன தான்யாதிபதிபதயே தனதான்யஸம் ருதிம்மே
தேஹி தாபய தாபஸ ஸ்வாஹா !!

ஓம் க்லீம் லக்ஷ்மி குபேராய தனதான்யாதிபதயே
மம ஐஸ்வர்யம் தனதான்ய விருத்திம் குருகுரு ஸ்வாஹா



அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தால் ஏழு ஜென்மங்கள் பாவங்கள் அனைத்தும் விலகி பிடித்த தரித்திரம் அனைத்தும் விலகி விடும்.

அட்சய திருதியை நாளில் வீட்டிலுள்ள பல்லிகள் அனைத்தும் யார் கண்ணிலும் தென்படாமல் இருக்க வேண்டும் என்பது வாஸ்து பகவான் கட்டளையிட்ட நாளாகவும் கூறுவார்கள். ஒரு சிலர் பல்லியை வழிபடவும் செய்வார்கள். இந்த அட்சய திருதியை நாளில் பல்லியை கண்டு விட்டால் எல்லா பீடைகளும் நீங்கி, திரிஜென்மம் பாவமும் நீக்கப்பெற்று அனைத்து செல்வங்களும் பெற்று லட்சமி கடாஷத்துடன் வாழ்வர் என்று நம்பப்படுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த அட்சய திருதியை ஆனது சித்திரை மாத வளர்பிறையில் கொண்டாடப்படுகிறது. மற்ற நாட்களில் நம் வீட்டில் பல்லிகள் அதிகமாக இருக்கும். ஆனால்,  அட்சய திருதியை நாளில் மட்டும் பல்லிகள் நம் கண்ணிலே தென்படாதாம். வாஸ்து பகவானின் கட்டளைக்கிணங்க அட்சய திருதியை அன்று மட்டும் எல்லா பல்லிகளும்  கண்ணுக்குத் தெரியாத ஒரு இடத்தில் போய் ஒளிந்து கொண்டிருக்குமாம். எனவே, எல்லாவிதமான துன்பங்களும் நீங்கி சகல செல்வ வளமும் பெற வேண்டுமென்றால் எப்படியாவது அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்து விடுங்கள்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

கோபிக்கு வந்த ஆப்பு – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியை…

56 mins ago

TTF வாசன் காதலியை வைத்து தந்திரமாக காய் நகர்த்திய விஜய் டிவி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து விரும்பி பார்ப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான்.…

59 mins ago

வித்தியாசமாக குழந்தைகளுக்கு இலங்கை ஸ்டைல் ரொட்டி செய்து கொடுத்து அசத்துங்க..

சாதாரணமாக டிபன் செய்வது என்றால் இட்லி, தோசை , சப்பாத்தி தான் செய்வோம். அதை மீறி பார்த்தல் சில நேரங்களில்…

1 hour ago

’எலக்சன்’ திரைப்பட விமர்சனம்

வலைப்பின்னல் போன்ற சிக்கலான உள்ளாட்சி அரசியல் குறித்தும் அதன் பிரதிநிதிகள் குறித்தும் பேசும் படமாக, நாடே தேர்தல் ஜுரத்தில் இருக்கும்…

1 hour ago

உடலென நான் உயிரென நீ -16

16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…

5 hours ago

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

5 hours ago