Categories: Samayalarai

வாட்டி வதைக்கும் வெயிலுக்கு இதமான சூப்பர் தர்பூசணி மில்க்‌ஷேக்…

கோடைகாலத்தில் உடலில் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே இருப்பது இயல்பு. இதனால் கோடைகாலத்தில் அதிக பழ வகைகள் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அவற்றிலும் நீர் ஆகாரங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

நீர் சத்து அதிகம் நிறைந்த உணவு பொருள்களில் தர்பூசணி முக்கியமான ஒன்று. அதை அப்படியே சாப்பிட்டு பழகிய நீங்கள் ஒருமுறை தர்பூசணி மில்ஷேக் செய்து குடித்து பாருங்கள். சுவை அட்டகாசமாக இருக்கும். தர்பூசணி மில்ஷேக் செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.



தேவையான பொருட்கள்:

தர்பூசணி – அரை பழம்

பால் – அரை லிட்டர்

சர்க்கரை – தேவையான அளவு

பாதாம் பிசின் – 2 ஸ்பூன்

சப்ஜா விதை – 1 ஸ்பூன்



செய்முறை விளக்கம் :

  • முதலில் அரை தர்பூசணி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

  • பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த தர்பூசணி ஜூஸை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அதனுடன் அரை லிட்டர் காய்ச்சி ஆற வைத்த பால் ரெண்டு ஸ்பூன் பாதாம் பிசின் ஒரு ஸ்பூன் சப்ஜா விதைகள் சேர்த்து நன்கு கலக்கவும்.

  • பின்பு அதனை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து குடித்தால் குளு குளுவென வெயிலுக்கு இதமான தர்பூசணி மில்க் ஷேக் தயார்.

  • இது போன்ற ஜூஸ்களை வீட்டிலேயே தயார் செய்து குடித்தால் சுகாதாரமாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.


வீட்டுக்குறிப்பு:

  • பொடி வகைகளில் உப்பு அதிகமாகி விட்டால் அதில் உள்ள பருப்பு எதுவோ அதை கொஞ்சம் வாணலியில் வறுத்து தனியாக பொடி செய்து நன்கு கலந்து விட்டால் உப்பு குறைந்து விடும்.

  • பெருங்காயம் கட்டியாகி இறுகி விட்டால் அதில் இரண்டு பச்சை மிளகாய் போட்டு வைத்தால் இளகிவிடும்.

  •  தோசை மாவு நீர்த்து இருந்தால் பாலில் இரண்டு ஸ்பூன் ரவை மற்றும் அரிசி மாவு சேர்த்து அதனுடன் கலந்து விட்டால் மேலும் நீர்த்துப் போகாது, புளிப்பும் தெரியாது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மகாபாரதக் கதைகள்/மகாபாரதம் நடந்தது உண்மைதானா?விளக்கங்கள்-2!

மகாபாரதம் கற்பனை கதை என்று கூறுவது நகைப்புக்குரியது, ஏனெனில் இந்த நூல்கள் கவிதை நடையில் எழுதப்பட்டு உள்ளன. எல்லாவற்றையும் விட…

34 mins ago

மாவட்ட கோவில்கள்:ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ சுவாமி திருக்கோவில்

தலச்சிறப்பு : ஐந்து தலை நாகத்தின் மீது அமர்ந்தபடி ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹர் அருள்பாலிப்பது சிறப்பு ஆகும்.  கருட சேவை  மஹோத்ஸ்வம்…

35 mins ago

நாள் உங்கள் நாள் (17.05.24) வெள்ளிக்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று மே 17.05.24 வெள்ளிக்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - வைகாசி 4 ஆம்…

36 mins ago

இன்றைய ராசி பலன் (17.05.24)

 சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல்…

38 mins ago

விஜய் டிவியின் 5 சீரியலின் கதை..ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி சீரியலை கொடுப்பது விஜய் டிவி! தான்.

என்னதான் சன் டிவி சீரியலுக்கு மக்கள் அமோக வரவேற்பை கொடுத்து வந்தாலும் இப்ப இருக்கிற ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி சீரியலை கொடுப்பது விஜய் டிவி தான்.…

12 hours ago

பாக்யா குடும்பத்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. சீரியலில் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தி கோபி இனிமே…

12 hours ago