Categories: CinemaEntertainment

ரோகிணியை ஆட்டிப்படைக்க சரியான ஆளு ஜீவா தான்.. சிறகடிக்கும் ஆசை சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து ஆசை ஆசையாக மீனாவிற்கு பூக்கடையை வீட்டிற்கு முன்னாடி ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால் இதை கெடுக்கும் முயற்சியில் ரோகினி மற்றும் விஜயா அதை காலி பண்ண சதி செய்து விட்டார்கள்.



அதனால் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணின மீனாவுக்கு முத்து ஆறுதல் கூறினார். இருந்தாலும் மீனாவை இப்படியே அடுப்பாங்கரையில் வேலைக்காரி மாதிரி வைத்து விடக்கூடாது என்பதற்காக ஒரு பைக்கை வாங்கி கொடுக்கிறார். அந்த பைக் மூலம் பூ ஆர்டர் எடுத்து வியாபாரத்தை தொடர்ந்து செய்யலாம் என்று முத்து ஒரு சர்ப்ரைஸ் பண்ணி விட்டார்.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத முத்துவின் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போய்விட்டார்கள். ஆனால் இதைப் பார்த்த ரோகினி மற்றும் விஜயா வயிற்று எரிச்சலில் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். அத்துடன் மனோஜ் இதெல்லாம் பார்த்து ரோகினி இடம் என்னுடைய தம்பிகள் இரண்டு பேரும் தொடர்ந்து வெற்றி பெற்று நல்ல நிலைமைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நான் மட்டும் எதற்கும் பிரயோஜனம் இல்லாமல் தண்ணில போட்ட கல்லு மாதிரி ஒரே இடத்தில் நிற்கிறேன் என்று சொல்கிறார். எனக்கு ஏதாவது சொந்த பிசினஸ் இருந்தால் அதில் கண்டிப்பாக நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கு என ரோகிணி இடம் புலம்புகிறார்.



கனடாவில் இருந்து வந்த ஜீவா

உடனே வழக்கம் போல் ரோகிணி குறுக்குப் புத்தியில் யோசிக்க ஆரம்பித்து விடுகிறார். அதாவது மனோஜை ஏமாற்றி 27 லட்ச ரூபாயை எடுத்துட்டு போன ஜீவாவை பற்றி ரோகினி கேட்கிறார். இதை கண்டுபிடிக்கும் முயற்சியில் மனோஜ் மற்றும் ரோகினி இறங்குகிறார்கள். அப்படி இந்த பணம் கிடைத்துவிட்டால் யாரிடமும் சொல்லாமல் நாம் வைத்துக் கொள்ளலாம் என்று ரோகினி யோசிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பணத்தை எடுத்துட்டு கனடாவுக்கு போன ஜீவா, டோரா புஜ்ஜி ஸ்டைலில் மறுபடியும் இந்தியாவிற்கு வருகிறார். சென்னைக்கு வந்ததும் முத்துவின் காரில் தான் போய்க்கொண்டிருக்கிறார். முத்துவுக்கு ஜீவா மூலம் அனைத்து உண்மைகளும் தெரிய வாய்ப்பிருக்கிறது. அத்துடன் ரோகிணியை ஆட்டிப்படைக்க சரியான ஆளு ஜீவாவாகத்தான் இருக்கப் போகிறார்.

இதன் மூலம் ரோகினியின் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறப்போகிறது. கூடிய சீக்கிரத்தில் முத்துவிடம் இந்த ரோகினி கையும் களவுமாய் மாட்டப் போகிறார்.



What’s your Reaction?
+1
3
+1
14
+1
3
+1
2
+1
8
+1
1
+1
2

Radha

Recent Posts

நடிகை மனோரமா-8

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என்று மனோரமா…

1 hour ago

வேர்க்குரு எதனால் வருகிறது… வியர்க்குரு போவதற்கு என்ன செய்வது.?

கோடைக்காலத்தில் வெயிலினால் நம்முடைய ஆரோக்கியத்திலும், தோலிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பருக்கள், அரிப்பு போலவே வேர்க்குருவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது.…

1 hour ago

கோடை காலத்தில் நம்ம ஊருக்கு ஏற்றதா ‘ஏர் கூலர்’?

வெயிலைச் சமாளிக்க நாம் பல போராட்டங்களை இந்தக் கோடைக் காலத்தில் மேற்கொள்வோம். அவற்றுள் ஒன்றுதான் ஏர் கூலர் வாங்குவது. பொதுவாக…

1 hour ago

இந்தியன் படத்தில் நம்பவே முடியாத 5 ஆச்சரியங்கள்…

1996ல் உலகநாயகன் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான போது இந்தியன் பட்டையைக் கிளப்பியது. அந்தக் காலத்தில் தமிழில் இந்தியன்…

1 hour ago

மகாபாரதக் கதைகள்/குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன…

4 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள். அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி. தலவிருட்சம் : மகாலிங்கமரம். தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய…

4 hours ago