மகாபாரதக் கதைகள்/மகாபாரத இதிகாசகங்களிலிருந்து நாம் கற்று கொண்ட பாடம்?

1) எத்தனைதான் நீதிக்கும், நேர்மைக்கும், நாணயத்திற்கும், கட்டுப்பட்டு இருந்தாலும் தெரியாத விஷயத்தில் ஈடுபடாதே. தாயக்கட்டை சரியாக ஆட தெரியாமல் யுதிஷ்டிரன் அனைத்தையும் இழந்து நின்றது இதற்கு ஒரு சரியான உதாரணம்.



2) கடவுளிடம் கோரிக்கை வைக்கும் பொழுது அவன்மேல் முழு நம்பிக்கை வையுங்கள் பூரண சரணாகதி!கம்பிளட் சரண்டர்!. கௌரவ சபையிலே துச்சாதனன் திரௌபதி வஸ்திராபரணம் செய்கிறான். அப்பொழுது அவள் தன்மானம் போகப் போகிறது என்ற பயத்தில், மார்பகங்கள் மேல் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு கண்ணனிடம் மன்றாடுகிறார். கண்ணன் உதவவில்லை. சிறுது நேரம் கழித்து இரண்டு கைகளையும் மார்பகங்களின் மேல் இருந்து எடுத்து கண்ணனிடம் முழுவதும் சரணாகதி அடைகிறாள். இப்பொழுது கண்ணன் உதவுகிறான்.

3) நெருங்கிய நண்பன் ஆனாலும் உதவி என்று கேட்கும்பொழுது, பவ்வியமாக, மரியாதையாக, அணுகு! அவன் உதவுவான். குருஷேத்திரப் போர் உறுதியாகி விட்ட பின் கிருஷ்ணனிடம் உதவி கேட்க துரியோதனன் மற்றும் அர்ஜுனன் சொல்கிறார்கள். கண்ணன் துயில் கொண்டிருக்கிறான். துரியோதன் எகத்தாளமாக கண்ணன் தலைமாட்டில் அமர்கிறான். அர்ஜுனன் கைகூப்பி கண்ணன் காலடியிலேயே நிற்கிறான். துயில் எழுந்த கண்ணன் முதலில் பார்ப்பது அர்ஜுனனை. அடுத்தது பார்ப்பது துரியோதனனை. முதல் வரம் விஜயனுக்கு கொடுக்கப்படுகிறது அவன் கண்ணனையே கேட்கிறான். துரியோதனனுக்கு கிட்டியது கண்ணனின் படைகள் மட்டுமே. கண்ணுக்கு முன்னால் அவன் படைகள் எம்மாத்திரம்

4) ஒரு நல்ல நண்பனுக்கு அடையாளம் என்ன?, நண்பன் தவறு செய்யும் பொழுது அவனை திருத்துவது! அவனை மேலும் மேலும் உசுப்பேதுவ தல்ல! துரியோதனன் கட்டுப்பட்டது கர்ணன் வார்த்தைகளுக்கு மட்டுமே. கர்ணன் துரியோதனனுக்கு சரியான அறிவுரை சொல்லி இருந்தால் குருசேத்திர யுத்தம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. நாம் தவறு செய்யும் போதும் நம் தவறை சுட்டிக் காட்டும் நல்ல நண்பனை தேர்ந்தெடு.

5) ஒரு விஷயத்தை அரைகுறையாக அறிந்துகொண்டு முழுவீச்சில் இறங்காதே இறங்கினால் தோல்வி நிச்சயம். சக்கர வியூகத்தை பற்றி உள்ளே நுழையும் திறமை மட்டுமே கொண்டிருந்த அபிமன்யு விற்கு ஆன கதி நாம் அனைவரும் அறிந்ததே.



6)Men will always be men. மனைவியாய் துரோபதி இருந்தும் அனைத்து பாண்டவர்களுக்கும் மாற்று மனைவிகள் உண்டு.

7) தூதுவனாய் வந்த கண்ணனுக்கு கௌரவர்கள் அரண்மனையில விதவிதமான, ருசியான, உணவு இருந்தும் அவன் விரும்பி சாப்பிட்டது விதுரன் வீட்டு கீரையை.அன்புக்கு முன்னால் அனைத்தும் அடிபணியும்.

8) உன் வீட்டு உணவை உண்டு உன்னை பெருமைப்படுத்தி பேசி உன் அழிவு தான் என் வாழ்க்கை குறிக்கோள் என்று இருப்பவர்களை அடையாளம் கண்டுகொள். சிரித்து பேசுபவர்கள் எல்லாம் நண்பர்கள் அல்ல! உதாரணம் சகுனி நல்ல அறிவுரை கூறுபவர்கள் அனைவரும் உனக்கு எதிரியும் அல்ல! உதாரணம் விதுரன்

9) தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்வோருக்கு வெற்றிக்கனி கிட்டவே கிட்டாது. உதாரணம் கர்ணன்.

10) பத்தினி சபதம் பலிக்கும். உதாரணம் துரோபதி.

11) போர் என்று வந்துவிட்டால் எதிரில் யார் உள்ளார்கள் என்று பார்க்காதே!. போரின் குறிக்கோள் வெற்றி மட்டுமே.

 



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

9 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

9 hours ago

நுங்கு இனிப்பு சாதம் செய்யலாம் வாங்க!

இந்த வெயிலுக்கு நுங்கு சாப்பிடுறது ரொம்ப நல்லது. நுங்கு சீசன் இப்பதான் ஆரம்பிக்குது. இன்னும் கொஞ்ச நாள்ல ஆங்காங்கே தெருவோரத்துல…

9 hours ago

‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடர் விமர்சனம்

தமிழக முதல்வரான கிஷோர் மீதான ஊழல் வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு அவருக்கு எதிராக…

9 hours ago

உடலென நீ உயிரென நான்-15

15 "  சப்பாத்தி மாவு எந்த அளவு அழுத்தி பிசையுறோமோ அந்த அளவு சாப்டா வருமாம் .குலோப்ஜாமூன் மாவை அழுத்தி…

13 hours ago

ஒருவரின் இறப்புக்குப் பின்பு அவரது ஆதார் கார்டை என்ன செய்வது?

நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் முக்கியமான ஆவணங்களாக…

13 hours ago