Categories: Uncategorized

மகாபாரதக் கதைகள்/கர்ணனின் தவறு

துரியோதனிடம் பல நற்குணங்கள் இருந்தன. ஆனால் அவனுடைய சேர்க்கை அவனை அகல பாதாளத்தில் கொண்டு நிறுத்தியது. கர்ணன், சகுனி போன்றவர்களின் துர்போதனையினால் துரியோதன் தோற்று உயிரிழந்தான்.



கர்ணன் சாதாரண குடும்பத்தில் பிறந்து துரியோதன் உதவியால் அங்க நாட்டு ராஜா ஆனான். துரியோதனின் மிக நெருங்கிய நண்பன் அவன். பல வகை அனுபவங்களும் பெற்றவன். ஒரு உண்மையான நண்பன் தக்க சமயத்தில் சிறந்த ஆலோசனை புரிந்து தவறான பாதையில் இருந்து நற்பாதைக்கு இழுக்க வேண்டும். இதை கர்ணன் செய்தானா?

1. துரியோதனன் பாண்டவர்களை அரக்கு மாளிகைக்கு அழைத்து கொடூரமாக தீயிலட முயன்றான். கர்ணன் தடுத்தானா? மாறாக இதற்கு துணை போனான்.

2. சகுனி ஏற்றப்பட்ட பகடை கொண்டு தர்மரை வென்றான். கர்ணன் தடுத்தானா? மாறாக இதற்கு துணை போனான்.

3. பாஞ்சாலி மானம் காக்க முயன்றபோது கர்ணன் காத்தானா? மாறாக பழைய கோவம் கொண்டும் அவளை அவமானப்படுத்தினான். ஒரு சிறு பெண் பல நாள் முன்னர் கிண்டல் செய்தற்காக அவளை அவமானம் படுத்துவதா தர்மம். இதுவா ஒரு ராஜாவிற்கு அழகு? இப்படி ஒரு பெண்ணிற்கு பங்கம் விளைக்கும் இவனா பெரிய மனிதன்?



4. பாண்டவர்கள் அஞ்ஞான வாசம் முடிந்து வரும்போது பரமாத்மா கிருஷ்ணன் தூது வந்து வெறும் 5 கிராமம் கேட்டான். பெரியவர்கள் எல்லாம் இதனை எடுக்க அறிவுரை செய்த பொழுது, கர்ணன் போரிற்காக கர்ஜித்தான். தேவையில்லாத போர் மூண்டு கவுரவர்கள் பூண்டோடு அழிந்தனர்.

5. பாண்டவர்களுக்கு பரமாத்மாவே துணை புரிந்தார். இது எல்லா பெரியவர்களும் தெரியும். ஆனால் கர்ணன் இது தெரியாமல், துரியோதனனுக்கு அதி நம்பிக்கை கொடுத்தான். பாண்டவர்களின் வலிமையை துச்சமாக நினைத்து குறைத்து மதிப்பிட்டான். இந்த ஆணவம் தோல்விக்கு பாதை வகித்தது.

கர்ணன் ஒரு நண்பனாகவும் இல்லை. ஒரு விவேகமுள்ள ராஜாவாகவும் இல்லை. இதற்கு நேர் மாறாக கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு நற்போதை செய்து, சரியனான நம்பிக்கை ஊட்டினான். தர்மரும் பல விவேகம் மிக்க பெரியோர் ஆலோசனை கேட்டார். இதனால் தான் எல்லா பெரியோர்க்கும் தர்மரே பிடிக்கும். நற்சேர்க்கை உயிர் காக்கும்.

துர்சேர்க்கை உயிர் கெடுக்கும். இது மஹாபாரத்தின் பல தத்துவங்களில் ஒன்றாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியை…

6 hours ago

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா..புதிய அப்டேட்!

மிழ் திரையுலகில் காமெடி நடிகராகவே பல ஆண்டு காலம் பயணித்து வந்த நடிகர் சூரியின், திரை வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய…

6 hours ago

குழந்தைகளுக்கு பிடித்த பிரெஞ்சு டோஸ்ட் செய்யலாம் வாங்க!

French Toast உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் காலை உணவாகும். எளிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவு,…

6 hours ago

விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு

தமிழ் திரையுலகில் காமெடியனாக கொடிகட்டிப் பறந்தவர் சந்தானம். ஒரு காலத்தில் நிற்க கூட நேரமில்லாமல் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்த…

6 hours ago

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

10 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

10 hours ago