Categories: CinemaEntertainment

பெரிய நடிகர்களையே பயப்பட வைத்த கவுண்டமணி!

 கவுண்டமணி என்றால் நக்கல்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அவருடன் எவ்வளவு பெரிய நடிகர் நடித்தாலும் சரி.. மரியாதை இல்லாமல்தான் பேசுவார். மேட்டுக்குடி படத்தில் ஜெமினி கணேசனையே கார்த்திக்கிடம் ‘அவன், இவன்’ என பேசுவார். அவரை பொறுத்தவரை செந்திலுக்கும் கொடுக்கும் மரியாதையைத்தான் ரஜினி, கமலுக்கும் கொடுப்பார்.

இதனாலேயே பெரிய நடிகர்கள் கவுண்டமணியுடன் நடிக்க யோசிப்பார்கள். அப்படியே நடித்தாலும் இயக்குனரை அழைத்து கவுண்டமணி ‘என்னை அசிங்கப்படுத்துவது போல வசனம் பேசக்கூடாது’ என கண்டிஷன் போட்டுதான் நடிப்பார்கள். ஆனால், அதையும் தாண்டி கேப் கிடைக்கும்போது கோல் போட்டுவிடுவார் கவுண்டமணி.

சில சமயம் எடிட்டிங் பணியிலும் நீக்க முடியாதபடி வசனங்களை பேசிவிடுவார். இதனால் ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்கள் இயக்குனரிடம் இதுபற்றி பேசிவிட்டுதான் கவுண்டமணியுடன் நடிப்பார்கள். எவ்வளவு பெரிய நடிகர் என்றாலும் சரி.. சகட்டு மேனிக்கு மரியாதை இல்லாமல் பேசிவிடுவார் கவுண்டமணி.



அதோடு, பெரிய நடிகர்களை ‘வாங்க போங்க’ எனவும் பேசமட்டார். ‘என்னப்பா.. எப்படி இருக்க?’ என்று ஒருமையில்தான் பேசுவார். நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் ஒருமுறை கவுண்டமணி பற்றி பேசிய போது ‘அவருக்கு காந்தி வேடம் கொடுத்தாலும் நேருவை ‘டே நாயே’ என்றுதான் கூப்பிடுவார்’ என சொன்னார். அதுதான் கவுண்டமணி.

கமல் நடிப்பில் 1987ம் வருடம் வெளியான திரைப்படம்தான் ‘பேர் சொல்லும் பிள்ளை’. இந்த படத்தில் நடிக்கும்போது கவுண்டமணி எப்படியும் தன்னை நக்கலடித்து பேசுவார் என தெரிந்த கமல் இயக்குனரிடம் ‘கவுண்டமணிக்கு வெறும் காமெடி மட்டும் கொடுக்காதீர்கள். அவர் வில்லத்தனம் செய்வது போலவும் காட்சி வையுங்கள்’ என்று சொன்னாராம்.

அதாவது அப்படி வேடம் கொடுத்தால் கவுண்டமணி தன்னை நக்கடிக்க மாட்டார் என கணக்கு போட்டிருக்கிறார் உலக நாயகன். இயக்குனரும் கவுண்டமணிக்கு அந்த படத்தில் அப்படி ஒரு வேடத்தையே கொடுத்தார். எஜமான் படத்தில் நடிக்கும்போது ‘கவுண்டமணி என்னை மட்டம் தட்டுவது போல் பேசக்கூடாது’ என இயக்குனரிடம் சொல்லிவிட்டுதான் நடித்திருக்கிறார் ரஜினி.

அப்படி ஒரு பயத்தைத்தான் கவுண்டமணியை உருவாக்கி வைத்திருந்தார்…



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மகாபாரதக் கதைகள்/குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன…

1 hour ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள். அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி. தலவிருட்சம் : மகாலிங்கமரம். தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய…

1 hour ago

நாள் உங்கள் நாள் (20.05.24) திங்கட்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று மே 20.05.24 திங்கட்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - வைகாசி 7 ஆம்…

1 hour ago

இன்றைய ராசி பலன் (20.05.24)

இன்றைய ராசிபலன் மே 20, 2024, குரோதி வருடம் வைகாசி 7, திங்கட் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார்.…

2 hours ago

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

13 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

13 hours ago