Categories: CinemaEntertainment

நடிகை கே.ஆர். விஜயா-8

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன் போன்ற முன்னணி திரை நட்சத்திரங்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்தவர் கே.ஆர் விஜயா. அந்த கால தமிழ் சினிமாவில் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளங்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1963ஆம் ஆண்டில், தன் திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய கே.ஆர்.விஜயா, இன்றளவும் திரையுலகில் பயணித்துக் கொண்டே உள்ளார். ஏறத்தாழ 58 ஆண்டுகாலம், தமிழ்நடிகை ஒருவர், திரையுலகில் தொடர்ந்து பயணிக்கின்றார் என்றால் அது, கே.ஆர்.விஜயாதான். எனக்குத் தெரிந்தவரை இந்திய திரையுலக அளவிலும் இத்தகைய சாதனைக்குரியவர், கே.ஆர்.விஜயாவாகவே இருப்பார் என்று கருதுகிறேன். (மனோரமாவைக் கூறலாம்; நகைச்சுவை நடிகை என்ற அளவில் அவரும் இப்பெருமைக்குரியவரே. நாயகி நிலை நடிகை என்ற அளவிலேயே, கே.ஆர்.விஜயாவைக் குறிப்பிடுகிறேன்).



திருமணத்திற்க்கு பிறகும் சினிமாவை விட்டு விலகாமல் நடிகை கே.ஆர்.விஜயா நடித்து வந்தார். பிறகு பட வாய்ப்புகள் குறைந்தவுடன் படங்களை தயாரிக்க தொடங்கினாராம். தனது கணவர் சினிமா பைனான்சியர் என்ற காரணத்தால் சம்பாதித்த பணத்தை படம் தயாரித்து அதில் வரும் லாபங்களை வைத்து அடுத்தடுத்த படங்களை தயாரிக்கலாம் என திட்டமிட்டுருந்தாராம்.

திட்டமிட்ட படி தொடர்ச்சியாக அவர் படங்களை தயாரிக்கவும் செய்தார். இதில் தொடர்ச்சியாக அவர் தயாரித்த 6 திரைப்படங்கள் வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றதாம். இதன் மூலம் நல்ல லாபமும் கிடைத்ததாம். பிறகு 7-வாதாக அவர் தயாரித்த படம் சரியான வெற்றியை பெறவில்லையாம். இதனால் அந்த சமயம் கே.ஆர்.விஜயா மிகவும் வருத்தத்தில் இருந்தாராம்.

கடைசியாக தயாரித்த அந்த ஒரு திரைப்படத்தின் தோல்வி காரணமாக கே.ஆர்.விஜயா தனது தயாரிப்பு கம்பெனியை இழுத்து மூடிவிட்டாராம். இந்த தகவலை நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் நடிகை கே.ஆர்.விஜயா கடைசியாக இந்த ஆண்டு வெளியான “ராயர் பரம்பரை” திரைபடத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியை…

11 hours ago

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா..புதிய அப்டேட்!

மிழ் திரையுலகில் காமெடி நடிகராகவே பல ஆண்டு காலம் பயணித்து வந்த நடிகர் சூரியின், திரை வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய…

11 hours ago

குழந்தைகளுக்கு பிடித்த பிரெஞ்சு டோஸ்ட் செய்யலாம் வாங்க!

French Toast உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் காலை உணவாகும். எளிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவு,…

11 hours ago

விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு

தமிழ் திரையுலகில் காமெடியனாக கொடிகட்டிப் பறந்தவர் சந்தானம். ஒரு காலத்தில் நிற்க கூட நேரமில்லாமல் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்த…

11 hours ago

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

15 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

15 hours ago