Categories: Samayalarai

சூப்பர் டேஸ்டியான துருவிய மாங்காய் தொக்கு

மாங்காய் என்ற பெயரைக் கேட்டாலே நாவில் எச்சில் ஊரும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மங்காவை பச்சையாகவோ அல்லது குழம்பில் போட்டு சமைத்து கொடுத்தாலோ விரும்பி சாப்பிடுவார்கள். அதற்கு முக்கிய காரணம் அதன் இனிப்புடன் சேர்ந்த புளிப்பு சுவை ஆகும்.

உணவில் பல விதமாக இந்த மாங்காயைப் பயன்படுத்தலாம். ஆனால் மாங்காய் என்றாலே எல்லோருக்கும் உடனே நினைவிற்கு வருவது ஊறுகாய் மற்றும் தொக்கு தான். எனவே துருவிய மாங்காய் கொண்டு சுவையான தொக்கு எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.



தேவையான பொருட்கள் :

  • மாங்காய் – 750 கிராம்

  • மஞ்சள் தூள் – 3/4 டேபிள் ஸ்பூன்

  • சிவப்பு மிளகாய் தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

  • வெந்தய தூள் – 1 டீஸ்பூன்

  • பெருங்காய தூள் – 1/2 டீஸ்பூன்

  • கடுகு – 1 டீஸ்பூன்

  • வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்

  • நல்லெண்ணெய் – 3/4 கப்

  • உப்பு – தேவையான அளவு



செய்முறை விளக்கம்  :

  • முதலில் பச்சை மாங்காயை நன்றாக அலசி அதை தோலுடன் சேர்த்து துருவி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

  • தற்போது அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து சூடானதும் வெந்தயம் போட்டு நன்கு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

  • வெந்தயம் ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

  • பின்னர் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்துக்கொள்ளவும்.

  • கடுகு வெடித்ததும் துருவிய மாங்காயைச் சேர்த்து நன்றாக எண்ணெய்யில் வதக்கவும்.

  • அடுத்து அதில் மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், வெந்தய தூள், பெருங்காய தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து வதக்கவும்.

  • தற்போது கடாயை மூடி மிதமான தீயில் சுமார் 15 நிமிடங்களுக்கு அடிபிடிக்காமல் அடிக்கடி கிளறி வேகவிடவும்.

  • பின்னர் அதனுடன் தேவையான அளவு வெல்லம் சேர்த்து மேலும் 5 நிமிடங்களுக்கு சமைக்கவும்.

  • தொக்கில் எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்தால் சுவையான துருவிய மாங்காய் தொக்கு ரெடி.

  • தொக்கு ஆறியவுடன் ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு சேமிக்கலாம்.

குறிப்பு : இந்த துருவிய மாங்காய் தொக்கை எடுக்கும் போது ஈரமான ஸ்பூனை பயன்படுத்தாதீர்கள்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நடிகை மனோரமா-7

தமிழ் திரையுலகம் ஆரம்பித்த காலகட்டங்களில் இருந்து இதுவரைக்கும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்ற எத்தனையோ கதாநாயகிகளைப் பார்த்திருப்போம். ஆனால்,…

1 hour ago

பாலிடெக்னிக்குகளில் சேர்ந்து டிப்ளமோ படிக்கப் போறீங்களா?…

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் பட்டயப் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் மே 10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக்…

1 hour ago

ரயில் பயணிகளின் லக்கேஜ்: புதிய விதிமுறைகளை வெளியிட்ட ரயில்வே நிர்வாகம்..

ரயிலில் பயணம் செய்யும்போது, யாராவது தங்கள் லக்கேஜுடன் ஓடிவிட்டால், கேட் திறந்திருப்பதால், பல பயணிகள் இரவில் தூங்குவதில்லை. கேட்டை சுற்றியுள்ள…

1 hour ago

சுசித்ராவின் இரண்டாவது கணவர் யார்? பல உண்மைகள்!

சென்னையில் பிறந்து வளர்ந்து, தன்னுடைய விடாமுயற்சியாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக பிரபலமானவர் சுசித்ரா. பாடகி என்பதை தாண்டி,…

1 hour ago

மகாபாரதக் கதைகள்/சகுனி பற்றி கிருஷ்ணரின் விளக்கம்

மகாபாரத போர் முடிந்து அஸ்தினாபுரத்தில் மெல்ல மெல்ல அமைதி திரும்பி கொண்டிருந்தத அந்த நேரத்தில் போரில் வீர மரணம் அடைந்த…

5 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில்(அ) கங்கைகொண்ட சோழபுரம் கோவில்

தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன். தன் தந்தையைப்போல மிகச்சிறப்புடன் ஆண்டவன்…

5 hours ago