Categories: CinemaEntertainment

சாய்பாபா கோயில் இவர் கட்டியதே இல்லையாம்..

அரசியலுக்காக வேஷம் போடுகிற பல அரசியல்வாதிகளை நாம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அது செய்கிறேன். இது செய்கிறேன் என எதையும் செய்யாமல் வெளி வேஷம் போட்டுக் கொண்டு இருக்கும் எத்தனையோ அரசியல்வாதிகளை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த வரிசையில் இப்போது விஜயும் சேர்ந்துவிட்டார் என்று சொல்லும் போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.

விஷயம் என்னவெனில் சில தினங்களுக்கு முன்பு விஜய் சாய்பாபா கோயிலில் தரிசனம் செய்வது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. விசாரித்ததில் அது விஜய் கட்டிய சாய்பாபா கோயில் என்றும் அவருடைய தாய் ஷோபாவுக்காக கட்டியது என்றும் தெரியவந்தது. ஆனால் உண்மையிலேயே அந்த சாய்பாபா கோயிலை விஜய் கட்டவே இல்லை என வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.



அதாவது விஜய் ஒரு உண்மையான கிறிஸ்தவ மதத்தை பின்பற்றக் கூடியவர். அவர் எப்படி சாய்பாபா கோயிலை கட்டமுடியும்? அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூட எல்லா கோயிலுக்கும் செல்லக் கூடியவர்தான். இருந்தாலும் எந்த இந்து மதக் கடவுளை பார்த்தாலும் அவர் வாயில் இருந்து முதலில் ‘ஏசப்பா காப்பாற்று’ என்றுதான் வருமாம். இதை எஸ்.ஏ.சந்திரசேகர் வலைப்பேச்சு பிஸ்மியிடமே கூறியிருக்கிறாராம்.

இப்படி இருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் தான் விஜய். அதனால் அவர் கட்டுவதற்கு வாய்ப்பே இல்லை. அதையும் மீறி விஜய் ஒன்னும் லாரன்ஸ் இல்லை இந்த கோயிலை கட்டுவதற்கு. லாரன்ஸ் அளவுக்கு அவர் தாய் மீது விஜய் அன்பு வைக்கவில்லை என்று இப்படி சொன்னாரா என தெரியவில்லை.

மேலும் கொரட்டூர் ஒன்னும் அமெரிக்காவிலோ ஆப்பிரிக்காவிலோ இல்லை. இங்கு சென்னையில்தான் இருக்கிறது. இத்தனை வருடமாக விஜய் இந்த கோயிலை கட்டுகிறார் என்றால் நமக்கு தெரியாமல் இருக்குமா?

யாருக்குமே தெரியவில்லையே. மேலும் கொரட்டூர் பகுதி மக்கள் விஜய்தான் கட்டுகிறார் என்று சொன்னாலும் அது ஒரு வேளை சொல்லவைக்கப்பட்டவையாக கூட இருக்கலாம் என்று வலைப்பேச்சு பிஸ்மி கூறினார். ஆனால் நேற்று அந்த சாய்பாபா கோயிலுக்கு வந்த ஷோபா இது எனக்காக என் மகன் விஜய் கட்டியது என மிகவும் ஆணித்தரமாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

11 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

11 hours ago

நுங்கு இனிப்பு சாதம் செய்யலாம் வாங்க!

இந்த வெயிலுக்கு நுங்கு சாப்பிடுறது ரொம்ப நல்லது. நுங்கு சீசன் இப்பதான் ஆரம்பிக்குது. இன்னும் கொஞ்ச நாள்ல ஆங்காங்கே தெருவோரத்துல…

11 hours ago

‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடர் விமர்சனம்

தமிழக முதல்வரான கிஷோர் மீதான ஊழல் வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு அவருக்கு எதிராக…

11 hours ago

உடலென நீ உயிரென நான்-15

15 "  சப்பாத்தி மாவு எந்த அளவு அழுத்தி பிசையுறோமோ அந்த அளவு சாப்டா வருமாம் .குலோப்ஜாமூன் மாவை அழுத்தி…

15 hours ago

ஒருவரின் இறப்புக்குப் பின்பு அவரது ஆதார் கார்டை என்ன செய்வது?

நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் முக்கியமான ஆவணங்களாக…

15 hours ago