Categories: CinemaEntertainment

கவுண்டமணி பற்றி ஃபீல் பண்ணி பேசும் ராமராஜன்..

திரையுலகில் பல நடிகர்களின் திரைப்படங்கள் கவுண்டமணி – செந்தில் காமெடி காட்சிகளால் ஓடியிருக்கிறது. சரியாக சொல்ல வேண்டுமானால் கவுண்டமணியின் காமெடி காட்சிகள் பல திரைப்படங்களை காப்பாற்றி இருக்கிறது. 80களிலில் இருந்து சுமார் 30 வருடங்கள் கவுண்டமணியின் காமெடி கொடி கட்டி பறந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.



கவுண்டமணியும், செந்திலும் துவக்கத்தில் நாடகங்களில் நடித்துவந்து பின்னர் சினிமாவில் நுழைந்தார்கள். பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில் உள்ளிட்ட படங்களில் பாக்கியராஜ் வாய்ப்பு கொடுத்தார். அதை கவுண்டமணி சரியாக பயன்படுத்திகொண்டார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார் கவுண்டமணி.

சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். ஒருகட்டத்தில் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடித்து பட வாய்ப்புகளை தவிர்த்து வந்தார். ஆனால், அவரை சமாதானம் செய்து கரகாட்டக்காரன் படத்தில் நடிக்க வைத்தார் கங்கை அமரன், அந்த படத்தில் இடம் பெற்ற காமெடி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

அதன்பின் கவுண்டமணி மீண்டும் பல வருடங்கள் காமெடியனாக கலக்கினார். அதுவும் ராமராஜன் படங்கள் என்றாலே கவுண்டமணியும் செந்திலும் கண்டிப்பாக இருப்பார்கள். இளையராஜாவை போல ராமராஜனின் வெற்றிக்கு கவுண்டமணி முக்கிய காரணமாகவும் இருந்தார்.



இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த ராமராஜன் ‘கவுண்டமணி அண்ணன் எப்போதும் நக்கலடிப்பார். அவர் செட்டில் இருந்தாலே ஜாலியாக இருக்கும். கரகாட்டக்காரன் படத்துக்கு பின் நான், கவுண்டமணி, செந்தில் ஆகியோர் சேர்ந்து நடிப்பது போல ஒரு கதையை உருவாக்கினேன்.

ஆனால், அதிக பட்ஜெட் காரணத்தால் அந்த படத்தை எடுக்க முடியாமல் போய்விட்டது. இப்போது கவுண்டமணி அண்ணன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இது பெரிய விஷயம். இப்போதும் கூட உன்னுடன் வருவது போல நான் நடிக்கிறேன் என என்னிடம் சொல்லுவார். இனிமேல் அவர் தனியாக ட்ராக் காமெடி எல்லாம் செய்ய மாட்டார். காமெடியில் அவர் கிங்’ என ராமராஜன் சொல்லி இருக்கிறார்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நடிகை மனோரமா- 5

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என்று மனோரமா…

5 mins ago

ரயில்களில் வெள்ளை நிற பெட்ஷீட்டுகள் கொடுக்க என்ன காரணம்?

நம் நாட்டில் மக்கள் குறைந்த செலவில்  நீண்ட தூரம் பயணிக்க ரயில்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ரயிலில் அனைத்து வசதிகளுடன் பாதுகாப்பான பயணம்…

8 mins ago

வீட்டிலேயே ஹேர் கண்டிஷர் தயாரிப்பது எப்படி?

அனைவருமே கூந்தலை பராமரிக்க பல வழிகளை மேற்கொண்டு வருகிறோம். கூந்தல் மென்மையாகவும் நீளமாகவும் இருப்பதற்கு கடைகளில் கிடைக்கும் பலவிதமான பொருட்களை…

10 mins ago

விஜய் பெயரை கெடுக்குறதுக்கு த்ரிஷா செய்த வேலையா இது ?

கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொல்வார்கள். அது இந்த செய்தியில் வர ஒரு சிலருக்கு சரியா பொருந்தும். தளபதி…

13 mins ago

மகாபாரதக் கதைகள்/மகாபாரதம் நடந்தது உண்மைதானா?விளக்கங்கள்-2!

மகாபாரதம் கற்பனை கதை என்று கூறுவது நகைப்புக்குரியது, ஏனெனில் இந்த நூல்கள் கவிதை நடையில் எழுதப்பட்டு உள்ளன. எல்லாவற்றையும் விட…

4 hours ago

மாவட்ட கோவில்கள்:ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ சுவாமி திருக்கோவில்

தலச்சிறப்பு : ஐந்து தலை நாகத்தின் மீது அமர்ந்தபடி ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹர் அருள்பாலிப்பது சிறப்பு ஆகும்.  கருட சேவை  மஹோத்ஸ்வம்…

4 hours ago