மூலநோய் போக்கும் பிள்ளை கற்றாழை பற்றி தெரியுமா?

பிள்ளை கற்றாழை என்பது ஒரு மூலிகை வகையாகும். இதனை காய்கறிகளைப் போல சமைத்து உண்ணலாம். அதிலும் குறிப்பாக மூல நோய் இருப்பவர்கள் இந்த மூலிகையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

பிள்ளை கற்றாழையின் உள்ளே உள்ள தசையை கற்றாழை சோறு என்பார்கள். இதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் கசப்பு தன்மை உடையதாக இருக்கும். ஆகையால் இதனை ஏழு முதல் எட்டு முறை நீர் விட்டு நன்கு கழுவி விட வேண்டும். இவ்வாறு அதிக முறை கழுவுவதினால் அதில் உள்ள கசப்பு தன்மை நீங்கி உண்பதற்கு ஏதுவாக இருக்கும்.



இப்போது அந்த பிள்ளை கற்றாழை சதையுடன் உப்பு மற்றும் புளி ஆகியவற்றை அளவாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இவை மூன்றையும் ஒன்றாக கலந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த பாத்திரத்தை அப்படியே அடுப்பில் வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பிள்ளை கற்றாழை நன்கு வெந்தபின் அடிப்பினை அணைத்து இறக்கி விட வேண்டும்.



குறிப்பு:

1. பிள்ளை கற்றாழையை சமைக்கும்போது அதில் காரம் சேர்க்கக்கூடாது.

2. மேலும் இந்த கற்றாழை சோறு குளிர்ச்சி தன்மையும் சீத வீரியமும் உடையது. எனவே இது உஷ்ணம் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது.

சிறுநீர் எரிச்சல், சிறுநீர் அடைப்பு போன்ற பல நோய்களுக்கும் இது உதவுகிறது. சித்த வைத்திய முறைகளில் பஸ்ப செந்தூரங்கள் தயாரிப்பதில் இந்த பிள்ளை கற்றாழை சோறு சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நடிகை மனோரமா-8

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என்று மனோரமா…

2 hours ago

வேர்க்குரு எதனால் வருகிறது… வியர்க்குரு போவதற்கு என்ன செய்வது.?

கோடைக்காலத்தில் வெயிலினால் நம்முடைய ஆரோக்கியத்திலும், தோலிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பருக்கள், அரிப்பு போலவே வேர்க்குருவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது.…

2 hours ago

கோடை காலத்தில் நம்ம ஊருக்கு ஏற்றதா ‘ஏர் கூலர்’?

வெயிலைச் சமாளிக்க நாம் பல போராட்டங்களை இந்தக் கோடைக் காலத்தில் மேற்கொள்வோம். அவற்றுள் ஒன்றுதான் ஏர் கூலர் வாங்குவது. பொதுவாக…

2 hours ago

இந்தியன் படத்தில் நம்பவே முடியாத 5 ஆச்சரியங்கள்…

1996ல் உலகநாயகன் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான போது இந்தியன் பட்டையைக் கிளப்பியது. அந்தக் காலத்தில் தமிழில் இந்தியன்…

2 hours ago

மகாபாரதக் கதைகள்/குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன…

5 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள். அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி. தலவிருட்சம் : மகாலிங்கமரம். தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய…

5 hours ago