Categories: CinemaEntertainment

பாலா சாரால் நான் விலகவில்லை நான் விலகியதற்கு காரணம் இது தான்.! உண்மை உடைத்த நடிகை..

 கடந்த சில வாரங்களாகவே இயக்குனர் பாலா குறித்த ஏராளமான சர்ச்சைக்குரிய தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாலா தான் இயக்கும் படங்களிலும் இருக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் தத்துரூபமாக இருக்க வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருபவர் அப்படி அந்த படத்தில் நடிக்கும் அனைத்து பிரபலங்களையும் மிகவும் கடுமையாக வேலை வாங்குவாராம்.



பலரையும் அடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது இந்த சூழலில் சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை இயக்கி வந்தார் பாலா. ஆனால் சில காரணங்களால் சூர்யா இந்த படத்தில் இருந்து விலக பிறகு அருண் விஜய் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். வணங்கான் படத்திற்கான படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது மீண்டும் பாலா குறித்த சர்ச்சைக்குரிய தகவல் வெளியாகி உள்ளது.

சரியாக நடிக்காததால் தன்னை இயக்குனர் அடித்து விட்டதாக நடிகை மமீதா பைஜு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்த இந்த பிரச்சனையில் பாலா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது எங்கு இந்த விவகாரத்தில் தனது பெயர் கெட்டுப் போய் விடுமோ என்ற பயந்து மமிதா தற்பொழுது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறிய அனைத்தும் முழு விவரமாக தெரியவில்லை ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக கூறியிருப்பது போல் தெரிகிறது. அவர் கூறியிருப்பதாவது, நான் கொடுத்த சிறிய பேட்டியை மட்டும் போட்டு அதனை பெரிய விஷயமாகி விட்டார்கள் நான் அப்படி சொல்லவே இல்லை பாலாவுடன் கிட்டத்தட்ட ஒரு வருடம் பணிபுரிந்து இருக்கிறேன். என்னை அவர் நன்றாக பார்த்துக் கொண்டார் உதவி இயக்குனர்களும் சிறப்பாக கவனித்துக் கொண்டார்கள்.



இதில் எனக்கு பாலா முழு சுதந்திரம் கொடுத்து நடிக்க வைத்தார் சூரியா சார் அந்த படத்திலிருந்து விலகியதால் அந்த படம் எப்படி தொடங்கும் என்ற எண்ணத்தில் நானும் விலகி விட்டேன் என கூறியுள்ளார். மேலும் தனக்கான காட்சிகளும் முடிந்துவிட்டது மீண்டும் இதற்கான நேரம் ஒதுக்க முடியாது என்பதனால் தான் விலகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது இவ்வாறு சூர்யா விலகிய காரணத்தினால் தான் விலகியதாக கூறி இத்தனை நாள் பாலா குறித்து பரவி வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை மமிதா பைஜு.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நடிகை மனோரமா-7

தமிழ் திரையுலகம் ஆரம்பித்த காலகட்டங்களில் இருந்து இதுவரைக்கும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்ற எத்தனையோ கதாநாயகிகளைப் பார்த்திருப்போம். ஆனால்,…

2 hours ago

பாலிடெக்னிக்குகளில் சேர்ந்து டிப்ளமோ படிக்கப் போறீங்களா?…

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் பட்டயப் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் மே 10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக்…

2 hours ago

ரயில் பயணிகளின் லக்கேஜ்: புதிய விதிமுறைகளை வெளியிட்ட ரயில்வே நிர்வாகம்..

ரயிலில் பயணம் செய்யும்போது, யாராவது தங்கள் லக்கேஜுடன் ஓடிவிட்டால், கேட் திறந்திருப்பதால், பல பயணிகள் இரவில் தூங்குவதில்லை. கேட்டை சுற்றியுள்ள…

2 hours ago

சுசித்ராவின் இரண்டாவது கணவர் யார்? பல உண்மைகள்!

சென்னையில் பிறந்து வளர்ந்து, தன்னுடைய விடாமுயற்சியாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக பிரபலமானவர் சுசித்ரா. பாடகி என்பதை தாண்டி,…

2 hours ago

மகாபாரதக் கதைகள்/சகுனி பற்றி கிருஷ்ணரின் விளக்கம்

மகாபாரத போர் முடிந்து அஸ்தினாபுரத்தில் மெல்ல மெல்ல அமைதி திரும்பி கொண்டிருந்தத அந்த நேரத்தில் போரில் வீர மரணம் அடைந்த…

6 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில்(அ) கங்கைகொண்ட சோழபுரம் கோவில்

தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன். தன் தந்தையைப்போல மிகச்சிறப்புடன் ஆண்டவன்…

6 hours ago