Categories: Beauty Tips

‘நேத்ரா பஸ்தி’ முறை என்றால் என்ன தெரியுமா?

‘நேத்ரா’ என்றால் கண்கள் என்று பொருள்.  ‘பஸ்தி’ என்றால் சுத்தம் அல்லது குளிப்பது எனப் பொருள்படும். ஆயுர்வேதத்தில், ‘நேத்ரா பஸ்தி’ முறை என்றால் கண்களை சுத்தப்படுத்தி, கண் மற்றும் கண்களைச் சுற்றியுள்ள சருமத்தின் வீக்கம் மற்றும் வறட்சியை தடுப்பதற்காகவும் கண் சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையாகவும் இது பயன்படுகிறது.

நேத்ரா பஸ்தி சிகிச்சை செய்யும் முறை: நோயாளி உணவு உண்டபின் 4 மணி நேரம் கழித்து தூசி மற்றும் புகை இல்லாத நல்ல வெளிச்சம் உள்ள காற்றோட்டமான ஒரு அறையில் படுக்க வைக்கப்படுவர்.

ஆர்கானிக் மாவினால் செய்யப்பட்ட வளையம் கண்களைச் சுற்றியும் கண் இமைகளின் மேலும் வைக்கப்படும். பின்பு அதில் புதிய இளம் சூடாக உருக்கப்பட்ட நெய்யை ஊற்ற வேண்டும். நோயாளி கண்களைத் திறந்து மூடவேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரை ஊற்றி சிகிச்சை செய்யப்படுகிறது.



சிகிச்சையின் பலன்கள்:

1. கண் சோர்வு, வலியை போக்குகிறது.

2. கண்ணின் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி கண் பார்வையை மேம்படுத்துகிறது.

3. கணினியில் தொடர்ந்து வேலை செய்பவர்கள், இயந்திரங்களை இயக்குபவர்கள் நீண்ட நேரம் வாகனம் ஓட்டுபவர்களுக்கு இது சிறந்த சிகிச்சை ஆகும்.

4. கண்ணாடி அணிந்திருப்பவர்கள் படிப்படியாக பவர் குறைந்து கண்ணாடியை நாளடைவில் கழற்றி விடலாம்.

5. சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு இந்த சிகிச்சை முறை நல்ல பலனை தரும். கண்களுக்கு நல்ல பார்வையை தரும்.



6. வறண்ட கண்கள், வறட்சியான கண் இமைகள் முதலியவை சரிப்படுத்தப்பட்டு ஈரப்பதம் உள்ள மற்றும் தெளிவான பார்வை கிடைக்கும்.

7. கண்களுக்கு அடியில் உள்ள கருவளையங்கள் சரி செய்யப்படுகிறது.

8. உலர்ந்த கண் பிரச்னை சரி செய்யப்படுகிறது. கண் இமைகளில் இருந்து முடி உதிர்தல் நிற்கிறது.

9. தொலைக்காட்சி பார்ப்பது, கம்ப்யூட்டர் திரையை அதிக நேரம் பார்ப்பது, தூசு போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்கிறது. கண் சிவத்தலை தடுக்கிறது.

10. கண்ணீர் அழுத்த நோய் எனப்படும் க்ளூக்கோமா நோய் வராமல் தடுக்கப்படுகிறது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

உடலென நான் உயிரென நீ -16

16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…

41 mins ago

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

43 mins ago

பெண்களே நீங்க சேலையில ஒல்லியா ஸ்டக்சரா தெரியணுமா? அப்போ இந்த டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க…

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு, என்று ஒரு சினிமா பாடலே இருக்கிறது. புடவை கட்டினால் பெண்கள் வழக்கத்தை விட…

47 mins ago

குக் வித் கோமாளியை முதல் எபிசோடில் ஓரங்கட்டிய டாப் குக் டூப் குப்!..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் புதிதாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறங்கியுள்ளார்.…

50 mins ago

தின்பண்ட வியாபாரம்.. வெற்றி கதை?

பல்வேறு தொழில் மேற்கொண்டு அதில் சரிவை கண்டவர்களுக்கு சில வெற்றிக் கதைகளை கேட்கும்போது ஒரு உத்வேகம் கிடைக்கும். அப்படி ஒரு…

3 hours ago

மீனாவால் முகம் மாறிய முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து, மீனா சேர்ந்து…

4 hours ago