Categories: Beauty Tips

இயற்கையான முறையில் ஃபேஷியல்கள் செய்வது எப்படி?

வெந்தயமும், நன்னாரியும் உள்ளங்கை அளவு எடுத்து கழுவி விட்டு முந்தின நாள் இரவே தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் இதனுடன் ரோஜா இதழ் சந்தனத்தூள் காய வைத்து பொடியாக்கிய எலுமிச்சைதோல் செஞ்சந்தனம் இவற்றை சேர்த்து அரைத்து முகத்தில் தடவ வேண்டும். அரை மணி நேரம் கழித்து பாசிப்பருப்பு மாவு போட்டு முகத்தை கழுவ வேண்டும் முகப்பரு, உஷ்ணக் கட்டிகள், கருவளையம், முக வறட்சி என அனைத்தும் நீங்கி முகத்திற்கு பொலிவு கிடைக்கும்.



ஸ்தூரி மஞ்சள் ஒரு டீஸ்பூன், சந்தன பொடி ஒரு டீஸ்பூன், வசம்பு பொடி ஒரு டீஸ்பூன் எல்லாவற்றையும் பாதாம் எண்ணெயில் குழைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊற விட வேண்டும். பிறகு இளம் சூடான நீரில் முகத்தை கழுவ வேண்டும். வாரம் இரு முறை இவ்வாறு செய்து வந்தால் முகம் பொலிவுடன் திகழும்.

தோல் நீக்காத முழு பச்சை பயிறு இரண்டு டீஸ்பூன் நடுநரம்பு நீக்கிய எலுமிச்சை இலை, இரண்டு வேப்பிலை ஒரு கைப்பிடி துளசி நான்கு,  பூலான் கிழங்கு ஒன்று, ரோஜா மொட்டு ரெண்டு, கசகசா அரை ஸ்பூன் இவற்றை அளவான தயிரில் முந்தைய நாள் இரவே ஊறவைக்க வேண்டும். மறுநாள் அரைத்து பசை போல ஆக்க வேண்டும். இதனுடன் கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை சேர்த்து கலக்க வேண்டும். இதை முகத்தில் தடவி அரை மணி நேரம் வைத்திருந்து பிறகு அலம்பினால் முகம் மிருதுவாகி பளபளவென மின்னும்.



பாசிப்பருப்பு 1/4 கிலோ, கசகசா 10 கிராம், பாதாம் 10 கிராம், பிஸ்தா 10 கிராம், துளசி இருபது கிராம், ரோஜா மொட்டு 20 கிராம் இவை எல்லாவற்றையும் நன்றாக காய வைத்து பவுடராக்கிக் கொள்ள வேண்டும். இந்த பவுடரில் சிறிது எடுத்து பாலில் குழைத்து முகத்தில் தடவ வேண்டும். அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளபளவென மின்னும் இது ஒரு அற்புதமான ஃபேஷியலாகஇருக்கும்.

யிர் அரை டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு சாறு ஒரு டீஸ்பூன், கேரட் சாறு ஒரு  டீஸ்பூன் எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். முகத்திற்கு நிறமும் பளபளப்பும் கிடைக்கும்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மகாபாரதக் கதைகள்/மகாபாரதம் நடந்தது உண்மைதானா?விளக்கங்கள்-1

மகாபாரதம் என்பது பண்டைய இந்தியாவின் பழம்பெரும் காவியம் ஆகும். கிமு 9 ஆம் நூற்றாண்டில் குருக்ஷேத்திர இராச்சியத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும்…

3 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு சாய் பாபா திருக்கோவில்

தலச்சிறப்பு : இக்கோவிலில் துனி என்கிற அணையாத புனித நெருப்பு உள்ள இடம் நவீன மயமாக்கப்பட்டு உள்ளது. மற்ற பாபா…

3 hours ago

நாள் உங்கள் நாள் (16.05.24) வியாழக்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று மே 16.05.24 வியாழக்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - வைகாசி 3 ஆம்…

3 hours ago

இன்றைய ராசி பலன் (16.05.24)

சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள மூலம், பூராடம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம்…

3 hours ago

திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்வது பற்றி மனம் திறக்கும் கோவை சரளா.!

தமிழ் சினிமாவில் வெகு சில பெண் நகைச்சுவை கலைஞர்கள் மட்டுமே கோலோச்சியுள்ளனர். அப்படி காமெடியில் பின்னி பெடலேடுத்த மனோரம்மாவிற்கு பிறகு,…

14 hours ago

அதிர்ச்சியில் பாக்கிய – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி உட்கார்ந்து…

14 hours ago