இன்றைய ராசி பலன் (29.03.24)

சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 06.21 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி. இன்று மாலை 06.41 வரை சுவாதி. பின்னர் அனுஷம். உத்திரட்டாதி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

நம்பியவர்களால் சில நேரம் ஏமாற்றப்படுவீர்கள். காதலியின் டார்ச்சரால் வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலைக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் சில சிக்கல்களில் இருந்து மீண்டு வருவீர்கள். வியாபாரிகள் பணம் புரட்ட சிரமப்படுவார்கள். சந்திராஷ்டம நாள். எந்த விஷயத்திலும் எச்சரிக்கையுடன் நடந்தால் நஷ்டத்தை தவிர்ப்பீர்கள்.விநாயகரை வழிபடுவதன் மூலம் மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி  உறவினர்களால் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

வீட்டில் திருமண நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்வீர்கள். வீட்டு தேவைகளை பூர்த்தி பண்ண அக்கறையுடன் வேலை பார்ப்பீர்கள். வெளிவட்டார செல்வாக்கை அதிகரித்துக் கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுதலால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமடைந்து போட்டியாளர்களை சமாளிப்பீர்கள். கடன் சுமையை கணிசமாக குறைப்பீர்கள்.ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தரும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுன ராசி அன்பர்களே!

சுவாச பிரச்சனையால் அவதிப்படுவீர்கள். தொழிலுக்கு மறைமுக எதிர்ப்புகள் தோன்றுவதால் சங்கடப்படுவீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்கள். பெற்றோரின் மருத்துவ செலவுக்காக நகையை அடகு வைப்பீர்கள். சொத்து பிரச்சனைக்காக சகோதரர்களே கொடுக்கும் தொல்லைகளை சமாளிப்பீர்கள்.தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளைத்  தகர்த்துவிடும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நன்று.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தேவையற்ற செலவுகளால் கையிருப்பு கரையும்.

கடக ராசி அன்பர்களே!

பிள்ளைகளின் பிரச்சனைக்காக பள்ளிக்கூடம் சென்று ஆசிரியரை சந்திப்பீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்வீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மழலைச் செல்வம் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலுக்கு தேவையான பண உதவியை நண்பர்களிடமிருந்து பெறுவீர்கள். வெளியூர் பயணங்களுக்காக குடும்பத்தை பிரிந்து செல்வீர்கள். துர்கை வழிபாடு காரிய வெற்றி தரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பார்த்த செய்தி கிடைப்பது தாமதமாகும்.

சிம்ம ராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்களால் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும் பத்தினர் உங்கள் யோசனையை ஏற்றுக்கொள்வார்கள். விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

கன்னி ராசி அன்பர்களே!

சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை அரவணைத்துச் செல்வது அவசியம். அவர்கள் கேட்டதை வாங்கித் தர  முயற்சி செய்யவும். உறவினர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். வியாபாரத்தில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மகாலட்சுமியை வழிபட மகிழ்ச்சி கூடுதலாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின்  உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வராது என்று நினைத்த கடன் தொகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டாகும்.

துலா ராசி அன்பர்களே!

தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு. குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும். கண வன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும் பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் அதிகரிக்கும் செலவுகளால்  கடன் வாங்கவும் நேரிடும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பப் பெரியவர்களால் ஆதாயம்  உண்டாகும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமை அவசியம். எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆனால், தாயின் அன்பு ஆறுதலாக இருக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் மிக அவசியம். லட்சுமி நரசிம்மர் வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கச் செய்யும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருப்பது அவசியம்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள் வார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் மூலம் காரியம் அனுகூலமாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சிவபெருமானை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய  முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பதற்றம் தவிர்க்கவும்.

மகர ராசி அன்பர்களே!

நீண்ட காலமாக கட்டி வந்த எல்ஐசி தொகையை தொழிலுக்காக எடுப்பீர்கள். வியாபாரத்தில் கிடைத்த லாபத்தைக் கொண்டு வீடு வாங்க முயற்சி செய்வீர்கள். தள்ளாட்டமாக இருந்த வியாபாரத்தை நண்பர்களின் உதவியால் நிலை நிறுத்துவீர்கள். அரசாங்கத்தின் மூலமாகக் கிடைக்க வேண்டிய பலன்கள் தாமதமின்றி வருவதால் சந்தோஷப்படுவீர்கள்.இன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது,

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கும்பராசி அன்பர்களே!

உங்களுக்கு பாதகம் விளைவித்த நபருக்கு உதவி செய்வீர்கள். கட்டுமானத் துறையில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்கத்தின் மூலமாகக் கிடைக்கவேண்டிய காண்ட்ராக்ட்கள் தடையின்றி பெறுவீர்கள். வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அபிரிமிதமான பலனை அடைவீர்கள். வெளியூர்களில் கிளைகள் திறக்க முயற்சி மேற்கொள்வீர்கள். மகாவிஷ்ணுவை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்து கொள்வது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சியுடன் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.

மீனராசி அன்பர்களே!

இழந்த பொருள்களை திரும்பப் பெறுவீர்கள். தொழில் ரீதியான வருமானத்தை அதிகரிப்பீர்கள். அரசு வகையில் வரவேண்டிய தொகைகளை உரிய நேரத்தில் பெறுவீர்கள். . வரவுகள் அதிகரிப்பதால் சேமிப்பை உயர்த்துவீர்கள். தக்க சமயத்தில் வங்கியில் இருந்து கடன் பெறுவீர்கள். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த வேலை மாறுதல் கிடைத்து செல்வீர்கள்.வேங்கடேச பெருமாளை வழிபட சிரமங்கள் குறையும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு  திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற செலவு செய்ய வேண்டி வரும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மகாபாரதக் கதைகள்/மகாபாரதம் நடந்தது உண்மைதானா?விளக்கங்கள்-1

மகாபாரதம் என்பது பண்டைய இந்தியாவின் பழம்பெரும் காவியம் ஆகும். கிமு 9 ஆம் நூற்றாண்டில் குருக்ஷேத்திர இராச்சியத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும்…

36 mins ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு சாய் பாபா திருக்கோவில்

தலச்சிறப்பு : இக்கோவிலில் துனி என்கிற அணையாத புனித நெருப்பு உள்ள இடம் நவீன மயமாக்கப்பட்டு உள்ளது. மற்ற பாபா…

38 mins ago

நாள் உங்கள் நாள் (16.05.24) வியாழக்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று மே 16.05.24 வியாழக்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - வைகாசி 3 ஆம்…

39 mins ago

இன்றைய ராசி பலன் (16.05.24)

சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள மூலம், பூராடம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம்…

41 mins ago

திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்வது பற்றி மனம் திறக்கும் கோவை சரளா.!

தமிழ் சினிமாவில் வெகு சில பெண் நகைச்சுவை கலைஞர்கள் மட்டுமே கோலோச்சியுள்ளனர். அப்படி காமெடியில் பின்னி பெடலேடுத்த மனோரம்மாவிற்கு பிறகு,…

12 hours ago

அதிர்ச்சியில் பாக்கிய – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி உட்கார்ந்து…

12 hours ago