இன்றைய ராசி பலன் (26.03.24)

சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 03.06 வரை பிரதமை. பின்னர் துவிதியை. இன்று பிற்பகல் 01.42 வரை அஸ்தம். பின்னர் சித்திரை. அவிட்டம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.



மேஷ ராசி அன்பர்களே!

காலம் தாழ்த்தி எடுக்கப்படும் முடிவுகளால் நல்ல பலனை அடைய மாட்டீர்கள். கட்டுமானத் துறையில் புதிய காண்ட்ராக்ட்கள் பெறுவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் அவசரம் காட்டாதீர்கள். பங்குச் சந்தை வியாபாரத்தில் பாதகமான நிலையை சந்திப்பீர்கள். உறவினர்களின் சூழ்ச்சியை புத்திசாலித்தனமாக முறியடிப்பீர்கள். முருகப்பெருமானை வழிபட சிரமங்கள் அறவே நீங்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

ரிஷப ராசி அன்பர்களே!

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை செய்வீர்கள். தகுந்த நேரத்தில் தாய்மாமன் உதவியை பெறுவீர்கள். காதலியுடன் வெளிநாடு செல்ல திட்டமிடுவீர்கள். தனியார் துறையில் விடுமுறை கிடைக்காமல் தடுமாறுவீர்கள். தொழிலும் வியாபாரமும் சிறப்பாக நடந்து மகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் மரியாதை அதிகரிப்பீர்கள்.அம்பிகையை வழிபட மற்றவர்களால் ஏற்பட்ட அவப் பெயர் நீங்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

மிதுன ராசி அன்பர்களே!

விளையாட்டாக வாங்கிப்போட்ட நிலத்தை நல்ல விலைக்கு விற்பீர்கள். புதிய ஆர்டர்கள் மூலம் நல்ல கமிஷன் பெறுவீர்கள். நீங்கள் கேட்ட பொருளை வெளிநாட்டில் இருந்து உங்கள் நண்பர் மூலம் பெறுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக எல்ஐசி பாலிசி எடுப்பீர்கள். சம்பள உயர்வு பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். தந்தையாரை மருத்துவமனையில் சேர்ப்பீர்கள்.துர்கை வழிபாடு அளவற்ற மகிழ்ச்சியைத் தரும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.

கடக ராசி அன்பர்களே!

பகல் இரவு பார்க்காமல் குடும்பத்திற்குப் பாடுபடுவீர்கள். மனைவி எடுத்தெறிந்து பேசுவதால் மனம் துன்பப்படுவீர்கள். பூர்வீகச் சொத்தை பாகப்பிரிவினை செய்யும்படி சகோதரரால் வற்புறுத்தப்படுவீர்கள். தேவையில்லாமல் பேசி ஊர்ப் பகையை இழுக்காதீர்கள். வார்த்தைக்கு கட்டுப்பட மறுக்கும் பிள்ளைகளால் கவலைப்படுவீர்கள்.வேங்கடேச பெருமாளை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு.

சிம்ம ராசி அன்பர்களே!

வீட்டிற்கு வேண்டிய பொருட்களை வாங்கிப் போடுவீர்கள். இடம் வாங்கி மாற்றி விடுவதன் மூலம் இருமடங்கு லாபம் பார்ப்பீர்கள். உழைப்பால் உயரதிகாரிகளின் மனதைக் குளிர வைப்பீர்கள். ஆசைப்பட்ட நகைகளைப் பெண்கள் வாங்குவீர்கள். புதிய வாகனம் வாங்க பதிவு செய்வீர்கள். ஐடி துறை ஊழியர்கள் அபார வளர்ச்சி அடைந்து வருமானத்தை பெருக்குவீர்கள்.தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் விலகும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

வயிற்றுக் கோளாறால் பயணத்தை தள்ளிப் போடுவீர்கள். வியாபாரத்திற்காக வெளிநாடு செல்ல திட்டமிடுவீர்கள். தொழில் போட்டிகளை சமாளிப்பீர்கள். கேட்ட இடத்தில் இருந்து பணம் கைக்கு வர தாமதமாவதால் வீட்டு வேலையில் சுணக்கத்தை காண்பீர்கள். சகோதரர் திருமணத்திற்கு பண உதவி செய்வீர்கள். வேலைப்பளு காரணமாக ஐடி ஊழியர்கள் டென்ஷன் ஆவீர்கள்.முருகப்பெருமானை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை நன்றாக யோசித்து எடுப்பது நல்லது.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.

துலா ராசி அன்பர்களே!

அடுத்தவரின் ஆலோசனையைக் கேட்டு அவசரப்பட்டு காரியத்தில் இறங்கினால் அவஸ்தைப்படுவீர்கள் . ஆன்லைன் விளையாட்டுகளில் உள்ள ஆபத்தை உணர்வீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் ஏமாற்றப்படுவீர்கள். வாங்கிய கடனைக் கொடுக்காவிட்டால் அவமானத்தைச் சந்திப்பீர்கள். தொழிற்சாலைகளில் வேலை செய்யும் போது கவனத்தை சிதற விடாதீர்கள்.முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கப் பெறலாம்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காலையில் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் சில சங்கடங்கள் ஏற்படும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

நீண்டகாலமாக இழுபறியில் இருந்த தாய்வழிச் சொத்தை விற்பனை செய்வீர்கள். உங்களுக்கு உரிய பங்கு கைக்கு வந்து வீட்டு வேலைகளை முடிப்பீர்கள். தொழிலுக்குத் தேவையான அரசாங்க உதவி பெறுவீர்கள். மருத்துவர்கள், இன்ஜினியர்கள் அதிக லாபம் அடைவீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். கையிருப்பை உயர்த்துவீர்கள்.இன்று லட்சுமி நரசிம்மரை வழிபட பல வகைகளிலும் அனுகூலப் பலன்கள் ஏற்படும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

தனுசு ராசி அன்பர்களே!

புதிய வீடு கட்டுவதற்கான ஏற்பாடு செய்வீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் எதிர்பாராத லாபம் தேடுவீர்கள். வியாபாரப் போட்டியில் வெற்றி பெறுவீர்கள். ஐடி ஊழியர்கள் வருமானம் அதிகரித்து மகிழ்ச்சி அடைவீர்கள். காதலி கேட்ட நகையை வாங்கி கொடுத்து மனம் குளிர வைப்பீர்கள். கோயில் திருப்பணிக்கு பண உதவி செய்து அந்தஸ்தை அதிகரிப்பீர்கள்.ஆஞ்ச நேயரை வழிபட முக்கிய முடிவுகள் சாதகமாகும்,

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

மகர ராசி அன்பர்களே!

நாக்கும் வாக்கும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையென்றால் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். ஆத்திரப்பட்டுப் பேசி உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவீர்கள். தகப்பனாருக்கு மருத்துவச் செலவு செய்வீர்கள். வெளியூர்ப் பயணங்களால் அதிக பயன் அடைய மாட்டீர்கள். சகோதர சகோதரிகளுக்காக விரயச் செலவு செய்வீர்கள். வியாபாரத்தில் சற்று சறுக்களை சந்திப்பீர்கள்.விநாயகரை வழிபடுவது நன்மை களை அதிகரிக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண விவகாரத்தில் கவனமாக இருக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும்.

கும்பராசி அன்பர்களே!

எடுத்த காரியத்தில் ஏதாவது தடங்கலை எதிர்நோக்குவீர்கள். வெயிலின் கொடுமையால் உடல்நிலையில் பாதிப்பு அடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற மாட்டீர்கள். அரசு ஊழியர்கள் கடுமையாகப் பணியாற்றுவீர்கள். முதலாளிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். உங்களின் ஆத்திரத்தை குடும்பத்தில் காட்டாதீர்கள். சந்திராஷ்டமம் நாள்.எச்சரிக்கை தேவை.
சரபேஸ்வரரை வழிபட சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும்.

மீனராசி அன்பர்களே!

வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்காக கடன் வாங்குவீர்கள். பழைய பாக்கிகளை சிரமப்பட்டு வசூல் செய்வீர்கள். வியாபார மந்த நிலையால் கவலைப்படுவீர்கள். பைனான்ஸ் தொழிலில் சிரமத்தை எதிர் நோக்குவீர்கள். ஒழுங்காக வேலை பார்க்கவில்லை என்றால் பணியை இழப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்.இன்று விநாயகரை வழிபட நன்மைகளைக் கூடுதலாகப் பெறலாம்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மகாபாரதக் கதைகள்/குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன…

3 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள். அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி. தலவிருட்சம் : மகாலிங்கமரம். தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய…

3 hours ago

நாள் உங்கள் நாள் (20.05.24) திங்கட்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று மே 20.05.24 திங்கட்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - வைகாசி 7 ஆம்…

3 hours ago

இன்றைய ராசி பலன் (20.05.24)

இன்றைய ராசிபலன் மே 20, 2024, குரோதி வருடம் வைகாசி 7, திங்கட் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார்.…

3 hours ago

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

14 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

14 hours ago