இன்றைய ராசி பலன் (17.03.24)

சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 03.32 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி. இன்று இரவு 09.53 வரை மிருகசீரிடம். பிறகு திருவாதிரை. சித்திரை சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

செலவுக்கு தகுந்த வருமானம் பார்ப்பீர்கள். எதிர்ப்புகளை மீறி ஏற்றம் பெறுவீர்கள். கலைத்துறையில் அமோக வெற்றி பெறுவீர்கள். பெண் நண்பர்களிடம் எல்லை மீறி பழகி அவமானப்படுவீர்கள். உங்களுக்கு எதிராக உறவினர்கள் செய்யும் சூழ்ச்சியில் சிக்குவீர்கள். திருமணம் போன்ற நல்ல காரியத்திற்காக அதிகம் செலவு செய்வீர்கள்.இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

ரிஷப ராசி அன்பர்களே!

கணக்கு வழக்குகளை ஒழுங்காக கவனிக்காமல் சிறு நஷ்டம் அடைவீர்கள். புதிய தொழில்களில் போட்டியாளர்களால் பாதிக்கப்படுவீர்கள். வாகன விபத்தில் சிக்குவீர்கள். ரியல் எஸ்டேட், கெமிக்கல், கமிஷன் போன்ற வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோரின் மருத்துவச் செலவுகளுக்காக கடன் வாங்குவீர்கள். சிவ வழிபாடு சிரமங்களைக் குறைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் சுமுகமாகப் பழகுவது அவசியம்.



மிதுன ராசி அன்பர்களே!

ஆடம்பரச் செலவுகளில் அதிக நாட்டம் கொள்வீர்கள். அதற்காக கடன் வாங்கி கஷ்டப்படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் தலைகுனிவு அடைவீர்கள். காதலியின் கவனக்குறைவால் பண விரயம் செய்வீர்கள். போட்டி பந்தயங்களில் அதிக லாபமடைய மாட்டீர்கள். கையில் இருக்கும் பணத்தை உங்களை அறியாமலேயே செலவு செய்வீர்கள். அம்பிகை வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் பண உதவி கிடைக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.



கடக ராசி அன்பர்களே!

தொழிலில் முன்னேற்றம் அடைந்து எதிர்பாராத வருமானம் பெறுவீர்கள். அதைச் சேமிப்பாக மாற்றுவீர்கள். வீட்டு மனை வாங்கும் ஆசையை நிறைவேற்றுவீர்கள். மனைவியிடம் விட்டுக் கொடுத்து நடந்து குடும்பத்தில் இருந்த இறுக்கத்தை குறைப்பீர்கள். வருடாந்திர மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வீர்கள். பணியிடங்களில் மன அழுத்தத்தால் பாதிப்படைவீர்கள்.ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனம் கொள்ளவும்.

சிம்ம ராசி அன்பர்களே!

புதிதாக பொன் நகைகள் வாங்குவீர்கள். கமிஷன் வியாபாரத்தில் கணிசமான லாபம் பார்த்து உறவினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். நெருக்கடியான கடன்களை அடைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்து மரியாதையை உயர்த்திக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களின் இழுபறியை முடிவுக்கு கொண்டு வருவீர்கள்.
சூரிய பகவானை வழிபடுவது நலம் தரும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் அவ்வப்போது சலனங்கள் ஏற்பட்டு நீங்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.



கன்னி ராசி அன்பர்களே!

எத்தனை கடுமையான நெருக்கடி வந்தாலும் உங்கள் மென்மையான நடவடிக்கையால் சமாளிப்பீர்கள்.மங்கள நிகழ்ச்சிகளுக்காக பணம் ஒதுக்குவீர்கள். தாய் தந்தை ஆசைப்பட்ட பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களால் நல்ல ஆதாயம் அடைவீர்கள்.மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் உயர்வான நிலைக்குச் செல்வீர்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்று.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பது தாமதமாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

துலா ராசி அன்பர்களே!

வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி செய்யாதீர்கள். பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள மறக்காதீர்கள். கமிஷன் வியாபாரத்தில் கஷ்டத்தை சந்திப்பீர்கள். ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஆசைப்படாதீர்கள். கடுமையாக பாடுபட்டு கடன்களை அடைக்க முயற்சி செய்வீர்கள். சந்திராஷ்டம நாள். எச்சரிக்கை தேவை.
மகாலட்சுமியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கியப் பிரமுகர்களிடம் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.



விருச்சிக ராசி அன்பர்களே!

சொந்தங்களுக்குள் திருமணப் பேச்சுவார்த்தைகளை நடத்துவீர்கள். அதை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மேல்படிப்புக்காக பிள்ளைகளை வெளியூருக்கு அனுப்புவீர்கள். குடும்பத்தின் தேவை அறிந்து நடந்து கொள்வீர்கள். உறவுகளில் இருந்த மனக்கசப்பைப் போக்குவீர்கள். வீட்டை அலங்காரப்படுத்தும் வேலையைச் செய்வீர்கள். இல்லறத்தை இனிமையாக்கப் பாடுபடுவீர்கள். விநாயகரை வழிபட வெற்றிகள் வசமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் அலைச்சலும் செலவும் ஏற்படக்கூடும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு ராசி அன்பர்களே!

அனுபவமிக்கவரின் ஆலோசனையை மதித்து நடப்பீர்கள். தொழில் போட்டிகளை துடைத்து எறிவீர்கள். கையில் காசு தங்குவது சற்று கடினம்தான் என்றாலும் சிக்கனமாக செலவு செய்வீர்கள். நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யாதீர்கள். அலுவலகப் பணியில் அலைச்சலால் அவதிப்படுவீர்கள். ஃபுட் பாய்சன் ஏற்பட்டு மருந்து எடுத்துக் கொள்வீர்கள்.
பைரவரை வழிபடுவது நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் அனுகூலம் உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திப்பீர்கள். குடும்பத்திலும் வெளி வட்டாரங்களிலும் இருந்த சங்கடங்களை களைவீர்கள். கவனக்குறைவால் சிறு விபத்துகளில் சிக்குவீர்கள். வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்புவீர்கள். பல வழிகளில் பண வரவு கிடைத்து சேமிப்பை உயர்த்துவீர்கள். ஆடை ஆபரணங்களை வாங்கி காதலியை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள்.துர்கை வழிபாடு நலம் சேர்க்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டு.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.



கும்பராசி அன்பர்களே!

எந்த காரியத்திலும் முரட்டுத்தனம் காட்டாதீர்கள். விட்டுக் கொடுத்துப் போனால் வெற்றி பெறுவீர்கள். திருமண வயதில் உள்ளவர்கள் விவாகப் பிராப்தம் அடைவீர்கள். குழந்தைப் பாக்கியத்திற்கு ஏங்கியவர்கள் மழலைச் செல்வம் கிடைத்து மகிழ்ச்சி கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்த ஏற்ற இறக்கங்களை சரிப்படுத்துவீர்கள். பண வரவை அதிகரிப்பீர்கள்.சிவபெருமானை வழிபடுவது நன்று.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.

மீனராசி அன்பர்களே!

வேலை காரணமாக குடும்பத்தைப் பிரிந்து செல்வீர்கள். பழைய வாகனங்களை விற்று புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். பணி இடத்தில் இருந்த சிக்கலைத் தீர்ப்பீர்கள். கூட்டுத் தொழிலை சிறப்பாக நடத்துவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்ப்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் மேம்பாடு காண்பீர்கள். ஐடி ஊழியர்கள் அதிக வருமானம் பெறுவீர்கள்.மகாவிஷ்ணு வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் செலவுகள் ஏற்படும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பணம் கிடைக்கக்கூடும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

6 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

6 hours ago

நுங்கு இனிப்பு சாதம் செய்யலாம் வாங்க!

இந்த வெயிலுக்கு நுங்கு சாப்பிடுறது ரொம்ப நல்லது. நுங்கு சீசன் இப்பதான் ஆரம்பிக்குது. இன்னும் கொஞ்ச நாள்ல ஆங்காங்கே தெருவோரத்துல…

6 hours ago

‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடர் விமர்சனம்

தமிழக முதல்வரான கிஷோர் மீதான ஊழல் வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு அவருக்கு எதிராக…

7 hours ago

உடலென நீ உயிரென நான்-15

15 "  சப்பாத்தி மாவு எந்த அளவு அழுத்தி பிசையுறோமோ அந்த அளவு சாப்டா வருமாம் .குலோப்ஜாமூன் மாவை அழுத்தி…

10 hours ago

ஒருவரின் இறப்புக்குப் பின்பு அவரது ஆதார் கார்டை என்ன செய்வது?

நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் முக்கியமான ஆவணங்களாக…

10 hours ago