108 திவ்ய தேச தலங்கள் – 107 | திருப்பாற்கடல் க்‌ஷீராப்தி நாதன்

இறைவன்: வெங்கடேஸ்வரர்

அறிமுகம்

இந்த திவ்யதேசம் நிலஉலகில் இல்லை . அவைகள் கடவுள் ஸ்ரீமகாவிஷ்ணு வசிக்கும் இடங்கள். 108-வது திவ்யதேசமாகிய திருப்பரமபதத்தில் பெருமாள் அமர்ந்திருந்து ஆட்சிபுரியும் இடம். 107-வதாகிய மேற்படி திருப்பாற்கடலில் ஐயன் ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும் இடம். இந்த இரு இடங்களுக்கு மானுடம் இந்த பூதவுடலோடு செல்வது ஆகாது. ஆனால் தீவிரபக்தி பூண்டு மனதளவில் பரமனோடு ஒன்றிவிட்ட ஞானிகள் முதலாய அடியார்கள், பரமாத்மாவோடு ஜீவாத்மா ஒன்றி நிற்கும் நிலை (சாயுஜ்யம்) பெற்றவர்கள் பூதவுடலை நீத்த பிறகு கடவுள் இருக்கும் உலகை (சாலோகம்) அடைந்து, கடவுளைப்போலவே உருப்பெற்று (சாரூபம்), அவருடனே வாழ்ந்திருப்பார்கள் என்று வேதவேதாந்தங்கள், புராணேதிகாசங்கள் போன்ற நமது சாத்திரங்கள் முழங்குகின்றன.



புராண முக்கியத்துவம்

அங்கணம் தகுதி பெற்றவர்களே நமது முன்னோர்களாகிய ரிஷிகள், முனிவர்கள் முதலானோர். அவர்கள் வழி வந்த ஆழ்வார்கள் பக்தி மேலீட்டால் பரமன் திருப்பாற்கடலிலும், திருப்பரமபதத்திலும் (ஸ்ரீவைகுண்டம்) இருக்கும் நிலைகளை தங்களின் மனத்திரையில் கண்டு மங்களாசாஸனம் செய்துள்ளார்கள். மேற்படி 107 திருப்பாற்கடல் மற்றும் 108 திருப்பரமபதத்தில் பரமாத்மா எங்கணம் நிலை கொண்டுள்ளாரோ அதே நிலையில் நமது நாட்டிலும் இரண்டு இடங்களில் காட்சியளிக்கின்றார்.

பூவுலகில் உள்ள 106 திவ்யதேசங்களை தரிசித்தவர்கள், அவர்கள் பரமபதித்த பின் பகவானே அவர்களை இந்த திவ்யதேசங்களுக்கு அழைத்துக்கொள்கிறார் என்று பெரியோர்கள் சொல்லி வைத்திருக்கிறபடியால், 106 திவ்யதேசங்களை கண்ட நாம் மேலோகத்தில் பரமனின் வாசஸ்தலங்களாகிய திருப்பாற்கடல் மற்றும் திருப்பரமபதம் போன்றே நமக்கருகாமையிலும் இருக்கின்ற இரண்டு தலங்களையும் தரிசித்து, சேவித்து நமக்கும் சாலோகபிராப்தி உண்டென்று நம்புவோமாக.

நம்பிக்கைகள்

காட்சிகண்டவர்கள் : பிரம்மா, ருத்ராதிகள் முதலிய தேவர்கள். மங்களாசாஸனம்: பெரியாழ்வார் 5, ஆண்டாள் 3, குலசேகராழ்வார் 2, திருமழிசையாழ்வார் 13, தொண்டரடிப்பொடியாழ்வார் 1, திருமங்கையாழ்வார் 11, பொய்கையாழ்வார் 1, பூதத்தாழ்வார் 2, பேயாழ்வார் 4, நம்மாழ்வார் 9 ஆக 51 பாசுரங்களில்போற்றியுள்ளார்.



What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

தின்பண்ட வியாபாரம்.. வெற்றி கதை?

பல்வேறு தொழில் மேற்கொண்டு அதில் சரிவை கண்டவர்களுக்கு சில வெற்றிக் கதைகளை கேட்கும்போது ஒரு உத்வேகம் கிடைக்கும். அப்படி ஒரு…

27 mins ago

மீனாவால் முகம் மாறிய முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து, மீனா சேர்ந்து…

29 mins ago

நடிகை மனோரமா-8

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என்று மனோரமா…

3 hours ago

வேர்க்குரு எதனால் வருகிறது… வியர்க்குரு போவதற்கு என்ன செய்வது.?

கோடைக்காலத்தில் வெயிலினால் நம்முடைய ஆரோக்கியத்திலும், தோலிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பருக்கள், அரிப்பு போலவே வேர்க்குருவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது.…

3 hours ago

கோடை காலத்தில் நம்ம ஊருக்கு ஏற்றதா ‘ஏர் கூலர்’?

வெயிலைச் சமாளிக்க நாம் பல போராட்டங்களை இந்தக் கோடைக் காலத்தில் மேற்கொள்வோம். அவற்றுள் ஒன்றுதான் ஏர் கூலர் வாங்குவது. பொதுவாக…

3 hours ago

இந்தியன் படத்தில் நம்பவே முடியாத 5 ஆச்சரியங்கள்…

1996ல் உலகநாயகன் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான போது இந்தியன் பட்டையைக் கிளப்பியது. அந்தக் காலத்தில் தமிழில் இந்தியன்…

3 hours ago