Big Boss Tamil 7: எல்லாரும் இந்த ஒரு ஆளுக்காக தான் வெயிட்டிங்!யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோட் வேற லெவலில் இருக்கப் போகிறது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்ற போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொருவராக இப்போது வந்து கொண்டிருக்கின்றனர்.

அதில் அனன்யா, அக்ஷயா, வினுஷா ஆகியோர் தற்போது வீட்டுக்குள் இருக்கின்றனர். இதில் வினுஷாவின் என்ட்ரியை தான் ஆடியன்ஸ் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அதற்கு குறை வைக்காமல் தற்போது அவர் நம் மனதில் இருப்பதை எல்லாம் கொட்டி தீர்த்துள்ளார்.

அதன்படி இன்று வெளியான ப்ரோமோவில் நிக்சனை 70 கேமராக்களுக்கு முன்னால் வைத்து கேள்வி கேட்பேன் என கூறியது தரமான சம்பவமாக இருந்தது. அதை அடுத்து அர்ச்சனாவின் முகத்திரையும் அவர் கிழித்துள்ளார். பிக்பாசின் ஆரம்பத்தில் ஒன்னும் தெரியாத பாப்பா போல் இருந்த அச்சு இரண்டாவது வாரத்திலேயே தன் குணத்தை காட்டினார்.



அதற்கு அவர் கையில் எடுத்த ஆயுதம் தான் பிரதீப். அதை அடுத்து வினுஷா விஷயத்தையும் கையில் எடுத்து உரிமை குரல் தூக்கினார். இதனால் நிக்சன் பெயர் பயங்கர டேமேஜ் ஆனது. தற்போது அதைப்பற்றி கூறியிருக்கும் வினுஷா உன்னோட கேமுக்கு என் பெயரை எதுக்கு யூஸ் பண்றீங்க.

உங்களுக்கு ஒரு பிரச்சனை வரும்போது என்ன பத்தி பேசி ஸ்கோர் செய்றீங்க. ஆனா பிக்பாஸ் வீட்டுக்கு வந்தப்ப நிக்சனிடம் சும்மா சாரி சொல்லிடு. வினுஷா விஷயத்தை மக்கள் மறந்துருவாங்கன்னு சொன்னீங்க என சவுக்கடி கேள்விகளை கேட்டு அர்ச்சனாவை திணற வைத்தார்.

 



இதனால் அதிர்ச்சி அடைந்த அர்ச்சனா நான் சின்ன புள்ளத்தனமா பேசினேன் என சாக்கு போக்கு சொல்லினார். ஆனாலும் வினுஷா விடாமல் கேள்வி கேட்டு அவரை வாயடைக்க வைத்தார். உண்மையில் அர்ச்சனா மற்றவர்களை தன் கேமிற்காக பயன்படுத்திக் கொள்கிறார். இது ஆடியன்ஸ் மனதில் இருந்தாலும் பிக்பாஸ் இப்போது தான் அதை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்.

அர்ச்சனாவை தொடர்ந்து வினுஷா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கும் நிலையில் தினேஷ் அவரிடம் நிக்சன் பேசினாரா என்று கேட்டார். அதற்கு வினுஷா போன் பண்ணினார், 70 கேமராக்கு முன்னாடி அப்படி பேசிய நீ அதே 70 கேமராவுக்கு முன்னாடி வந்து என்னிடம் பேசு என சொல்லிவிட்டதாக கூறியிருந்தார். இதை தொடர்ந்து நிக்சன் எப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவார் என போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

வினுஷா ஏற்கனவே தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக கமலஹாசன் உரிமை குரல் கொடுப்பார் என எதிர்பார்த்தார். ஆனால் அப்படி நடக்கவில்லை என தெரிந்ததும் தன்னுடைய அதிருப்தியை சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தார். இதனால் கண்டிப்பாக நிக்சன் வீட்டிற்குள் வந்ததும் வினுஷா தன்னை பற்றி தவறாக பேசியதை பற்றி நிக்சனிடம் கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

உடலென நான் உயிரென நீ -16

16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…

13 mins ago

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

15 mins ago

பெண்களே நீங்க சேலையில ஒல்லியா ஸ்டக்சரா தெரியணுமா? அப்போ இந்த டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க…

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு, என்று ஒரு சினிமா பாடலே இருக்கிறது. புடவை கட்டினால் பெண்கள் வழக்கத்தை விட…

20 mins ago

குக் வித் கோமாளியை முதல் எபிசோடில் ஓரங்கட்டிய டாப் குக் டூப் குப்!..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் புதிதாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறங்கியுள்ளார்.…

22 mins ago

தின்பண்ட வியாபாரம்.. வெற்றி கதை?

பல்வேறு தொழில் மேற்கொண்டு அதில் சரிவை கண்டவர்களுக்கு சில வெற்றிக் கதைகளை கேட்கும்போது ஒரு உத்வேகம் கிடைக்கும். அப்படி ஒரு…

3 hours ago

மீனாவால் முகம் மாறிய முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து, மீனா சேர்ந்து…

3 hours ago