விஜய் அரசியலுக்கு வந்தா நல்லதுதான்-சிவராஜ்குமார்

நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை, மக்கள் எதிர்க்கவே இல்லை என கன்னட நடிகர் சிவராஜ் குமார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படம் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே சில தினங்களுக்கு முன் கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் தனது மனைவியுடன் சிவராஜ் குமார் பங்கேற்றிருந்தார். தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், நடிகர் தனுஷை புகழ்ந்து தள்ளினார். மேலும் மேடையில் கேப்டன் மில்லர் படத்தில் இடம் பெற்ற கோரனார் பாடலுக்கு தனுஷூடன் சேர்ந்து நடனமாடினார். இந்த வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. இன்றைய தினம் கேப்டன் மில்லர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகிறது.

இதனைத் தொடர்ந்து சிவராஜ் குமார் பல சேனல்களுக்கு நேர்காணல் அளித்து வருகிறார். அந்த வகையில் ஒரு நேர்காணலில் நடிகர் விஜய்யுடனான நட்பு குறித்து பேசியுள்ளார். அதில் சிவராஜ் குமாரிடம், “ரஜினிகாந்துக்கும் உங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவர் அரசியலுக்கு வருகை என்ற பேச்சு வந்தது ஆனால் வரவில்லை. விஜயகாந்த் அரசியலுக்குள் இருந்தவர். விஜய்யுடன் உங்களுக்கு இருக்கும் நட்பு பற்றி சொல்லுங்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.



அதற்கு, ”விஜய்யுடன் நல்ல நட்பு உள்ளது. என்னுடைய 100வது பட விழாவுக்கு விஜய், சூர்யா இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அவரின் எல்லா படமும் எனக்கு பிடிக்கும். அவருக்கென்று ஒரு ஸ்டைல் இருக்கிறது.  கடினமாக உழைக்கிறார்.அவர் ஒரே இரவில் பிரபலமானவராக மாறி விடவில்லை. சினிமாவில் தன்னை மெருகேற்றி கொள்ள நிறைய போராட்டங்களை எதிர்கொண்டார். தன்னுடைய ஸ்டைல், படங்கள் தேர்வு என எல்லாவற்றிலும் தன்னை மெருகேற்றி கொண்டார்.

விஜய் பள்ளி மாணவ, மாணவியருக்கு உதவிய வீடியோ எல்லாம் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அவர் அரசியலுக்கு வருவது நல்லதுதான். அந்த திறமை விஜய்யிடம் உள்ளது, அவர் தன்னை நம்புகிறார். அந்த நம்பிக்கை தான் மக்களுக்கு பிடித்துள்ளது. பொதுவாக ஒரு பிரபலம் நடிப்பில் இருந்து அரசியலுக்கு வந்தால் எதுக்கு அதெல்லாம் என கேட்பார்கள். ஆனால் விஜயின் அரசியல் வருகையை மக்கள் அப்படி சொல்லவில்லை. அவர்கள் அதை எதிர்க்கவில்லை” என சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில்  விஜய் ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.  ஏற்கனவே ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த சிவராஜ் குமாருக்கு, அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியை…

4 hours ago

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா..புதிய அப்டேட்!

மிழ் திரையுலகில் காமெடி நடிகராகவே பல ஆண்டு காலம் பயணித்து வந்த நடிகர் சூரியின், திரை வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய…

4 hours ago

குழந்தைகளுக்கு பிடித்த பிரெஞ்சு டோஸ்ட் செய்யலாம் வாங்க!

French Toast உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் காலை உணவாகும். எளிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவு,…

4 hours ago

விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு

தமிழ் திரையுலகில் காமெடியனாக கொடிகட்டிப் பறந்தவர் சந்தானம். ஒரு காலத்தில் நிற்க கூட நேரமில்லாமல் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்த…

4 hours ago

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

8 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

8 hours ago