Categories: CinemaEntertainment

சிகப்பு ரோஜாக்கள் படத்தின் தப்பை பற்றி பல வருடங்கள் கழித்து சொன்ன பாரதிராஜா..

பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில் என இரண்டு பக்கா கிராம படங்களை இயக்கி ஹிட் கொடுத்த பாரதிராஜா மூன்றாவதாக இயக்கிய திரைப்படம்தான் சிகப்பு ரோஜாக்கள். பாரதிராஜா அந்த மாதிரி ஒரு படத்தை எடுப்பார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், முதல் இரண்டு படங்களுக்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.



சிறு வயதில் ஒரு மோசமான பெண்ணால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் தன்னை அரவணைத்த ஒரு பெரிய பணக்காரருக்காக பெண்களை அழைத்து வந்து அவர்களுடன் சந்தோஷமாக இருப்பான். அந்த வீடியோவை அந்த பணக்காரர் பார்த்து ரசிப்பார். அந்த சைக்கோ இளைஞன் வாழ்வில் ஒரு நல்ல பெண் வருகிறாள். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய பாரதிராஜா ‘சிட்டி சப்ஜெட் கதைகளை என்னால் இயக்க முடியாது என சொன்னார்கள். அந்த கோபத்தோடு இயக்கிய படம்தான் சிகப்பு ரோஜாக்கள். இந்த கதையை இரண்டு பெரிய ஹீரோக்களிடம் சொன்னேன். நடிக்க முடியாது என சொல்லிவிட்டனர். கமல்தான் உடனே சம்மதித்தார். புதுமையானவற்றை செய்வதில் கமல் அப்போதே அப்படித்தான்.



தி.நகரில் ஒரு பங்களாவை கண்டுபிடித்து கமலை பேச வைத்து அனுமதி வாங்கி அதில் படத்தை எடுத்தேன். அப்படத்தில் நடித்த கருப்பு பூனையை கண்டிபிடிக்க போதும் போதும் என்றாகிவிட்டது. 2 நாள் நடித்த அந்த பூனை 3வது நாளில் காணாமல் போய்விட்டது. பூனைக்கு சொந்தக்காரர் கோர்ட்டில் கேஸ் போட்டார். அவரை சமாதனப்படுத்தி வழக்கை வாபஸ் வாங்க வைத்தேன்.

இந்த படத்தில் ஒரு பெரிய தவறை நான் செய்திருப்பேன். கமலுக்கு என்ன பிளாக்‌ஷ்பேக் என்பதை அவரின் பார்வையில்தானே சொல்லவேண்டும். ஆனால், ஒரு அறையில் ஸ்ரீதேவி போய் விழுந்ததும் அங்கிருக்கும் பொருட்களை அவர் பார்த்தபின் பிளாஷ்பேக் துவங்கும். ஆனால், சாமார்த்தியமாக அதை மறைத்துவிட்டேன். அதுதான் சினிமாவின் மேஜிக்.

20 நாட்களில் அப்படத்தை எடுத்து முடித்துவிட்டேன். அப்போது சினிமா செழிப்பாக இருந்தது. தியேட்டரில் நீண்ட வரிசையில் ரசிகர்கள் நிற்பார்கள். இப்போது செல்போனில் படம் பார்க்கிறார்கள். காலம் மாறிவிட்டது’ என அவர் பேசியிருந்தார்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

9 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

9 hours ago

நுங்கு இனிப்பு சாதம் செய்யலாம் வாங்க!

இந்த வெயிலுக்கு நுங்கு சாப்பிடுறது ரொம்ப நல்லது. நுங்கு சீசன் இப்பதான் ஆரம்பிக்குது. இன்னும் கொஞ்ச நாள்ல ஆங்காங்கே தெருவோரத்துல…

9 hours ago

‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடர் விமர்சனம்

தமிழக முதல்வரான கிஷோர் மீதான ஊழல் வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு அவருக்கு எதிராக…

9 hours ago

உடலென நீ உயிரென நான்-15

15 "  சப்பாத்தி மாவு எந்த அளவு அழுத்தி பிசையுறோமோ அந்த அளவு சாப்டா வருமாம் .குலோப்ஜாமூன் மாவை அழுத்தி…

12 hours ago

ஒருவரின் இறப்புக்குப் பின்பு அவரது ஆதார் கார்டை என்ன செய்வது?

நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் முக்கியமான ஆவணங்களாக…

13 hours ago