பிக்பாஸ் அர்ச்சனாவுக்கு நாசுக்காக ஹிண்ட் கொடுத்த உடன்பிறப்பு

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் போட்டியாளர்களின் குடும்பங்கள் வீட்டுக்குள் வந்து நிகழ்ச்சியை சுவாரசியமாக்கி வருகின்றனர். அதில் அனைவருமே தங்கள் பிள்ளைகளுக்கு ஏதாவது ஒரு ஹிண்டை கொடுத்து செல்கின்றனர்.



அந்த வகையில் நேற்று பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அர்ச்சனாவின் தங்கை ஒரு விஷயத்தை நாசுக்காக அவருக்கு தெரியப்படுத்தினார். அதாவது தற்போது ரசிகர்களின் ஆதரவு யாருக்கு அதிகமாக இருக்கிறது என்று பார்த்தால் அது அர்ச்சனா, விசித்ரா தான்.

அதில் அர்ச்சனா தன்னுடைய நடவடிக்கைகளால் ஒவ்வொரு வாரமும் தனக்கான ஆதரவை அதிகப்படுத்தி வருகிறார். அப்படி பார்க்கும்போது இவரும் இறுதி மேடையை அலங்கரிக்க போகும் போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

அதைத்தான் அர்ச்சனாவின் தங்கையும் நாசுக்காக வெளிப்படுத்தி இருக்கிறார். அதாவது அவர் தன் அக்காவிடம் நீ ஏதாவது ஒரு பெட்டில கைய வைக்கணும்னா அது துணி பெட்டியா மட்டும் தான் இருக்கணும். இதை நல்லா ஞாபகம் வச்சுக்கோ என்று கூறினார்.

அர்ச்சனாவும் அதற்கு வேகமாக தலையாட்டினார். இதன் மூலம் அர்ச்சனாவின் தங்கை உனக்கு ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் அவசரப்பட்டு பணப்பெட்டியில் கையை வைத்து விடாதே என தன் அக்காவுக்கு மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார்.

பொதுவாக வீட்டுக்குள் வரும் சொந்தங்களுக்கு வெளியில் நடப்பதை சொல்லக்கூடாது என அறிவுறுத்தப்படும். ஆனால் இந்த முறை போட்டியாளர்களின் குடும்பங்கள் பல விஷயங்களை வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பேசினார்கள். இதனால் இனிவரும் வாரங்களில் ஆட்டம் மாறவும் வாய்ப்பு இருக்கிறது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

8 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

8 hours ago

நுங்கு இனிப்பு சாதம் செய்யலாம் வாங்க!

இந்த வெயிலுக்கு நுங்கு சாப்பிடுறது ரொம்ப நல்லது. நுங்கு சீசன் இப்பதான் ஆரம்பிக்குது. இன்னும் கொஞ்ச நாள்ல ஆங்காங்கே தெருவோரத்துல…

8 hours ago

‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடர் விமர்சனம்

தமிழக முதல்வரான கிஷோர் மீதான ஊழல் வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு அவருக்கு எதிராக…

8 hours ago

உடலென நீ உயிரென நான்-15

15 "  சப்பாத்தி மாவு எந்த அளவு அழுத்தி பிசையுறோமோ அந்த அளவு சாப்டா வருமாம் .குலோப்ஜாமூன் மாவை அழுத்தி…

12 hours ago

ஒருவரின் இறப்புக்குப் பின்பு அவரது ஆதார் கார்டை என்ன செய்வது?

நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் முக்கியமான ஆவணங்களாக…

12 hours ago