Categories: CinemaEntertainment

இரண்டு நடிகையுடன் திருமணம்..! ரஞ்சித் பற்றி தெரியாத தகவல்கள்..!

நடிகர் ரஞ்சித் கடந்த 1974 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். தற்பொழுது 50 வயதாகும் இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.



தன்னை ஒரு நடிகராக, இயக்குனராக, அரசியல்வாதியாக பல்வேறு பரிணாமங்களில் காட்டியிருக்கும் இவர் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான பொன்விலங்கு என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் இடையில் கடந்த 2003 ஆம் ஆண்டு பீஷ்மர் என்ற படத்தை இயக்கி நடித்து தயாரித்தும் இருந்தார்.

இந்த திரைப்படம் தோல்வியை தழுவ மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கினார் நடிகர் ரஞ்சித். அதன்பிறகும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருந்த இவருக்கு திருமண வாழ்க்கையும் பல சிக்கல்களை உருவாக்கியது.

கடந்த 1999 ஆம் ஆண்டு நடிகை பிரியா ராமன்-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் 2014 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.



இந்த விவாகரத்துக்கு காரணம் நடிகை ராதாசுதா-வுடன் இருக்கும் தொடர்பு என்று பேசப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக விவாகரத்து செய்த அடுத்த சில மாதங்களிலேயே ராகசுதாவை திருமணம் செய்து கொண்டார் நடிகர் ரஞ்சித்.

நடிகை ராகசுதா பல நடிகை கே ஆர் விஜயாவின் சகோதரியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ராகசுதாவை திருமணம் செய்து கொண்டதன் மூலம் நடிகை கே.ஆர்.விஜயாவின் மருமகன் ஆனார் ரஞ்சித்.ஆனால், இந்த திருமணம் சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை. 2015 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே ராஜசுதாவை பிரிந்தார் நடிகர் ரஞ்சித்.

ராகசுதாவை பிரிந்த ரஞ்சித் தனியாக இரண்டு ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். அதன் பிறகு தன்னுடைய முதல் மனைவி பிரியா ராமனை சந்தித்து மீண்டும் அவரையே திருமணம் செய்து கொண்டு கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தன்னுடைய முதல் மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.



What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நீயில்லாமல் வாழ்வது லேசா!-16 (நிறைவு)

16 ‘‘அட.. ஏன் இப்படி யோசிக்கிறீர்கள்? வாருங்கள் சகோதரி..” பிரெட்ரிக்கின் ‘சிஸ்டர்’ மைக் வழியாக அந்த அரங்கம் முழுவதும் அதிர்ந்தது.…

12 mins ago

ஒன்று சேர்ந்த ஜிவி பிரகாஷ், சைந்தவி.. என்ன நடந்துச்சு தெரியுமா.?

கடந்த சில மாதங்களாகவே அடுத்தடுத்து விவாகரத்து செய்திகள் தான் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அதிலும் கோலிவுட்டில் இப்போது இந்த கலாச்சாரம்…

15 mins ago

தங்கமயிலின் ஆட்டத்திற்கு முடிவு கட்டிய மீனா ராஜி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதி, மாமியாரின் கெத்து எப்படி இருக்கும் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டார்.…

18 mins ago

பட்டுனு தந்தூரி சிக்கன் செஞ்சு சட்டுனு சாப்பிடலாம்!

சிக்கன் விரும்பிகளுக்கு இந்த எளிய ரெசிபி பெரிய உதவியாக இருக்கும். பட்டுன்னு பத்தே நிமிஷத்துல செஞ்சிடலாம் தந்தூரி சிக்கன். ஆனா…

20 mins ago

’எமகாதகன்’ திரைப்பட விமர்சனம்

முன்னொரு காலத்தில் பாஞ்சாயி என்ற பெண் விடுத்த சாபத்தால் குடும்பத்தின் மூத்த ஆண் பிள்ளைகள் திருமணம் செய்துக் கொண்டால் இறந்து…

23 mins ago

சரணடைந்தேன் சகியே – 26

26   சொன்னபடியே மறுநாள் காலையிலேயே ஆபீசில் வந்து நின்றான் பாலகுமரன்.. பெற்றுக் கொண்டேனில் “ண்” இரண்டு சுழியா, மூன்று…

4 hours ago