தங்கம் வாங்க ஏற்ற நேரம்…



இப்போது இருக்கும் கூட்ட நெரிசலில் எல்லோராலும் குறிப்பிட்ட நேரத்தில் வாங்கி விட முடியாது. அதனால் ஏப்ரல் 22ம் தேதி காலையில் உப்பு, மஞ்சள், மல்லிகை, அரிசி இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கி பூஜை செய்யுங்கள்.

செல்வ வளம் பெருக அட்சய திருதியை நாள் மிக உன்னதமான நாளாகும். இந்து புராணங்களின்படி பல விதமான சிறப்புகளைக் கொண்டது இந்த அட்சய திரிதியை நாள். மகாலட்சுமியின் அருளை முழுவதுமாக பெறும் நாள் இது. இந்த நாளில் நாம் தன லட்சுமியை வழிபட்டால் அவரின் முழு அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.



அட்சய திரிதியை 2023 தேதி மற்றும் நேரம்

இந்த 2023ம் ஆண்டு அட்சய திரிதியை வரும் ஏப்ரல் 22ம் தேதி வருகிறது என நாட்காட்டிகள் பல வற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் சில நாட்காட்டிகள் ஏப்ரல் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமைதான் அட்சய திரிதியை என்று குறிப்பிட்டுள்ளன. இதனால் அட்சய திரிதியை சனிக்கிழமையான ஏப்ரல் 22ம் தேதியா அல்லது ஞாயிற்றுக் கிழமையான ஏப்ரல் 23ம் தேதியா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 22ம் தேதி துவங்கும் அட்சய திரிதியை ஏப்ரல் 23ம் தேதி வரை நிகழ்கிறது. இதனால் இரண்டு தினங்களில் எந்த நாளை அட்சயதிரிதியை பூஜை செய்யவும், தங்கம் முதலிய தன பொருட்கள் வாங்கவும் உபயோகிக்க வேண்டும் என்பதில் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. தங்கம் வாங்க நல்ல நாள் எது நல்ல நேரம் எது என்பதும் மக்கள் அதிகம் கேட்கும் கேள்வியாக இருக்கிறது.

அட்சய திரிதியை வரும் ஏப்ரல் 22ம் தேதி காலை 7 மணி 49 நிமிடங்களுக்குத் துவங்கி, அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 23ம் தேதி காலை 7 மணி 47 நிமிடங்களுக்கு முடிந்துவிடுகிறது.

நீங்கள் காலை பூஜை செய்ய விரும்பினால் இரண்டு தினங்களில் ஏதாவது ஒரு நாளில் வழிபடுவதில் தவறில்லை. அதேநேரம் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு முக்கியமான ஒன்றை கவனிக்க வேண்டியிருக்கிறது.

தங்கம் வாங்க நல்ல நேரம்

அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க பலரும் விரும்புவார்கள். குறிப்பிட்ட நாளில் தங்கம் வாங்க விரும்புபவர்கள் தாங்கள் விரும்பும் ஏதோ ஒரு நேரம் சென்று வாங்கி விட முடியாது. முக்கியமாக மதிய வேளைக்கு முன்பாகவே சூரியன் உச்சத்தை அடைவதற்கு முன்பாகவே தங்கம் வாங்க வேண்டியது அவசியம்.



காலை 8 மணி முதல் 9.30 வரை நீங்கள் தங்கம் வாங்கினால் அட்சய திரிதியை நாளின் அனைத்து பலன்களும் உங்களுக்கு கிடைக்கும். அதேநேரம் அதன்பிறகு வாங்கக் கூடாது என்பதல்ல.

இப்போது இருக்கும் கூட்ட நெரிசலில் எல்லோராலும் குறிப்பிட்ட நேரத்தில் வாங்கி விட முடியாது. அதனால் ஏப்ரல் 22ம் தேதி காலையில் உப்பு, மஞ்சள், மல்லிகை, அரிசி இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கி பூஜை செய்யுங்கள்.

தங்கம் என்பது பெரிய பெரிய நகையாகத் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. 1 கிராம் வாங்கினாலும் அது தங்கம்தான். மேலே சொல்லப்பட்ட உப்பு, மஞ்சள், மல்லிகை, அரிசி இவற்றில் ஏதாவது ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ வாங்கி காலையிலேயே வழிபட்டு அதை அப்படியே சாமி படத்துக்கு முன்பு வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து முடிந்த அளவுக்கு அருகிலுள்ள தங்க வியாபாரம் செய்பவரிடம் சென்று கூட வாங்கி வழிபடலாம்.

தங்கம் மூலம் உங்கள் குடும்ப வருமானத்தை பெருக்குங்கள்!

இந்த அட்சய திரிதியை நாளில் உங்களால் முடிந்த அளவுக்கு பணத்தை நீங்கள் சேமித்து வங்கியில் போட்டு வைக்க முடியும். ஆனால் அதைவிட சிறந்த விசயம் தங்கத்தில் முதலீடு செய்வதுதான்.

இன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் 5665 ரூபாய் இருக்கிறது. இது ஏறும் இறங்கும். உங்களால் குறைந்தபட்சம் மாதம் 5000 ரூபாய் சேமிக்க முடிந்தால் போதும். தங்க நகைக் கடைகளில் தங்கம் வாங்க சேமிப்பு திட்டங்கள் இருக்கும். அதனைத் துவங்கி நீங்கள் வாங்கும் தங்கத்தில் லாபத்தை பெறுங்கள்.

நகையாக வாங்க விருப்பம் இல்லையென்றால் ஒரு கிராம் நாணயமாக வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். 10 முதல் 12 மாதங்களில் 1 சவரன் தங்கம் உங்களிடம் இருக்கும். இப்படி நீங்கள் சேமிக்கும் பணத்தில் ஒரு பங்கை தங்கமாக சேமித்தால் நாளை அதை விற்கும்போது மிகப்பெரிய தொகை உங்கள் கையில் வரும்.

மாதம் 5000 ரூபாய் சேமித்து 10 வருடங்களில் 6 லட்சம் ரூபாய் உங்கள் கைகளில் வந்தால், அதைக் கொண்டு நீங்கள் தங்கம் வாங்கும்போது கிட்டத்தட்ட 10 சவரன் தங்கம் கிடைக்கும் என்றால், அதையே மாதாமாதம் எடுத்து வைக்கும் பட்சத்தில், உங்களிடம் இருக்கும் தங்கத்தை 10 வருடங்கள் கழித்து அந்த விலைக்கு விற்கும்போது கூடுதலான பணம் கிடைக்கும் அல்லவா?

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Padma Grahadurai

Website Admin

Recent Posts

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியை…

5 hours ago

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா..புதிய அப்டேட்!

மிழ் திரையுலகில் காமெடி நடிகராகவே பல ஆண்டு காலம் பயணித்து வந்த நடிகர் சூரியின், திரை வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய…

5 hours ago

குழந்தைகளுக்கு பிடித்த பிரெஞ்சு டோஸ்ட் செய்யலாம் வாங்க!

French Toast உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் காலை உணவாகும். எளிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவு,…

5 hours ago

விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு

தமிழ் திரையுலகில் காமெடியனாக கொடிகட்டிப் பறந்தவர் சந்தானம். ஒரு காலத்தில் நிற்க கூட நேரமில்லாமல் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்த…

5 hours ago

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

9 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

9 hours ago