சிறு வயதிலேயே பருவமடையும் பெண்கள்..காரணம் என்ன?

இளம் வயதில் பருவமடைவது என்பது இயல்பான ஒன்று, ஆனால் சமீப காலமாக இயல்புக்கு மாறாக மாதவிடாய் குறித்த புரிதலே இல்லாத குழந்தைகள் பருவமடைவது அதிகரித்துள்ளது. இதனால் அவர்கள் சில சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது.

குழந்தைப் பருவத்தில் இருக்கும் ஒரு பெண் குழந்தை, தன்னுடைய அடுத்தடுத்த வளர்ச்சியால் இயல்பான மாற்றங்களை எதிர்கொண்டு, இளம் வயதில் பூப்பெய்துகிறாள். தங்கள் வீட்டுப் பெண் குழந்தை எதிர்கால வாழ்க்கைக்குத் தயாராகிவிட்டாள் என்பதை உணர்த்துவதற்காகக் கிராமப்புறங்களில் பருவமடைதலை பூப்புனித நீராட்டுவிழா என வெகு விமா்சியாக கொண்டாடும் வழக்கம் உண்டு.



ஆனால் இதில் அதிர்ச்சி என்னவென்றால் சமீப காலமாக இந்த விழா மேடைகளில் வீற்றிருப்பவர்களில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆம் மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஏற்படும் இயல்பான நிகழ்வுதான் என்பது குறித்த புரிதல் இல்லாத பல ஆண்களுக்கு, அது குறித்த புரிதலை ஏற்படுத்த இன்றளவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படும் இதே சமூகத்தில்தான் 7 முதல் 10 வயதுடைய குழந்தைகளும் தங்கள் முதல் மாதவிடாயை சந்திக்கிறார்கள்.

அண்மையில் தலைநகர் டெல்லியில் 7 வயது பெண் குழந்தை தனது முதல் மாதவிடாயை சந்தித்திருக்கிறார், சற்று யோசித்துப் பாருங்கள் அந்த வயதில் நீங்கள் என்ன செய்துக் கொண்டிருந்தீர்கள்? மழலை மனம் மாறாமல் குழந்தைகளோடு குழந்தையாய் விளையாடி கொண்டிருந்திருப்பீர்கள். அப்படி விளையாடவேண்டிய ஒரு குழந்தை மாதவிடாயின்போது எத்தனை வலியை சந்தித்திருப்பார். பெங்களூரிலும் 8வயதில் ஒரு சிறுமி பருவமடைந்திருக்கிறார்.



அமெரிக்காவில் சராசரியாக 15சதவீதம் சிறுமிகள் 7 வயதிற்குள்ளும், 28 சதவீதம் சிறுமிகள் 8 வயதிலும் தங்களது முதல் மாதவிடாயை சந்திக்கிறார்கள். அதிகமான எண்ணிக்கையில் ஸ்பெயின் சிறுமிகள் 9 வயதிலும் 10 வயதுடைய இந்தியச் சிறுமிகளும் பருவமடைவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இப்படி விரைவில் பருவமடைவது குழந்தைகளின் மனநிலையைக் கடுமையாகப் பாதிக்கிறது. குழந்தைப் பருவத்திலேயே அவர்களின் பொறுப்பு கூடிவிடுகிறது. பருவமடையும் வயதிற்கு முன்பே நாப்கின்களை கையாளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தனிமைப்படுத்தப்பட்டது போன்ற உணர்வை எதிர்கொள்வார்கள், சக குழந்தைகள் அவர்களின் சூழலை புரிந்துகொள்ளாமல் போகும் நிலையும் ஏற்படும் என்கிறார்கள் மனநல ஆலோசகர்கள் .



மேலும் ஹார்மோன் அதிக அளவில் உற்பத்தியாவதால் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் எனவும். அதி விரைவில் பூப்பெய்தும் குழந்தைகள், ஆரம்பத்தில் தனது சம வயதுக் குழந்தைகளைவிட உயரம் அதிகமாக இருப்பதைப்போலத் தெரிந்தாலும், விரைவாகவே எலும்புகளின் வளர்ச்சி முழுமையடைந்துவிடுவதால், அவர்களின் உயரம் சற்றுக் குறைவாக இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

வாழ்க்கைமுறை மாற்றம் தான் இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. துரித உணவுகளை அதிகம் உட்கொள்வது. புரோட்டின், பால் உணவுகள் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது. பதப்படுத்தப்பட்ட உணவு, ரசாயணம் கலந்த நொறுக்குத் தீனி போன்றவற்றை அதிகம் உண்பதால் அவர்களின் உடல் எடை அதிகரிக்கிறது. உடல் பருமன் விரைவில் பருவமடைவதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இது தவிர சிறுவயதில் பாலியல் ரீதியிலான கொடுமைகளுக்கு ஆளாகும் குழந்தைகளின் ஹாா்மோன்கள் தூண்டப்பட்டு விரைவில் மாதவிடாயை சந்திக்கிறார்கள். வாழ்க்கை முறை மாற்றத்தால் குழந்தையின்மையும் அதிகரித்துள்ளது.  உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் படி 6 ல் ஒருவர் குழந்தையின்மை பிரச்சினையை சந்திக்கிறார்கள்.



எதிர்காலத்தில் நம் குழந்தைகள் இதுபோன்ற பிரச்சனையை சந்திக்காமல் இருக்க வேண்டுமென்றால் நம் வாழ்க்கை முறையை நாம் மாற்றித்தான் ஆக வேண்டும். குழந்தைகளின் வளர்ச்சியில் கவனம்கொண்டு வயதிற்கு அதிகமான மார்பக வளர்ச்சி, ரோமங்கள், போன்றவை தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. அவர்களின் உடல் பருமனை அளவோடு வைத்துக்கொள்வது பல நோய்களைத் தடுக்கும்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

5 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

5 hours ago

நுங்கு இனிப்பு சாதம் செய்யலாம் வாங்க!

இந்த வெயிலுக்கு நுங்கு சாப்பிடுறது ரொம்ப நல்லது. நுங்கு சீசன் இப்பதான் ஆரம்பிக்குது. இன்னும் கொஞ்ச நாள்ல ஆங்காங்கே தெருவோரத்துல…

5 hours ago

‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடர் விமர்சனம்

தமிழக முதல்வரான கிஷோர் மீதான ஊழல் வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு அவருக்கு எதிராக…

5 hours ago

உடலென நீ உயிரென நான்-15

15 "  சப்பாத்தி மாவு எந்த அளவு அழுத்தி பிசையுறோமோ அந்த அளவு சாப்டா வருமாம் .குலோப்ஜாமூன் மாவை அழுத்தி…

9 hours ago

ஒருவரின் இறப்புக்குப் பின்பு அவரது ஆதார் கார்டை என்ன செய்வது?

நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் முக்கியமான ஆவணங்களாக…

9 hours ago