Categories: lifestylesNews

கவலை தாக்குதல் – பீதி தாக்குதல்.. இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?

கவலை, மன அழுத்தம், சோகம் போன்ற வார்த்தைகள் ஒரே விதமான பொருள் தருவது போல தோன்றினாலும் இவை அனைத்தும் ஒரே விதமான சொற்கள் அல்ல. பயம், கவலை, மன அழுத்தம் ஆகியவை நமது மனதுடன் தொடர்புடையது. மேலும் இது ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமாக விளைவுகளை ஏற்படுத்துகிறது.



முக்கியமாக வெகு வேகமாக இயங்கும் இந்த வாழ்க்கை முறையில் மன அழுத்தம் மற்றும் கவலை ஆகியவை ஏற்படுவது மிகவும் இயல்பான ஒன்றுதான். அதே சமயத்தில் அளவுக்கதிகமாக கவலையும் மன அழுத்தமும் ஒருவருக்கு அதிகரிக்கும் போது அவை வேறொரு புதிய மனநல பிரச்சனையை உண்டாக்க கூடும்.

இது போன்ற சூழலில் சிலருக்கும் பேனிக் அட்டாக் எனப்படும் பேரச்ச அல்லது பீதி தாக்குதல்கள் ஏற்படுகிறது. ஆனால் உண்மையிலேயே பீதி தாக்குதல்களும் கவலை தாக்குதலும் வெவ்வேறு விதமானவை. அறிகுறிகள் ஒரே போல இருந்தாலும் மற்றும் விளைவுகள் வெவ்வேறானவை



பீதி தாக்குதல் மற்றும் கவலை தாக்குதல்களுக்கு இடையே உள்ள வேறுபாடு!

பீதி தாக்குதல்:

  • தீவிரம்: பீதி தாக்குதல்களின் அறிகுறிகள் மிகவும் தீவிரமானவை. இதனால் அந்த நபர் கிட்டத்தட்ட பித்து பிடித்ததை போல தோன்றுவார். தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்தோ அல்லது தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளவும் முயற்சி செய்வார்.

  • துவக்கம்: திடீரென்று எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் ஒருவர் வெறி பிடித்ததை போல நடந்து கொள்வார்.

  • காலம்: இதன் அறிகுறிகள் பொதுவாகவே 10 நிமிடங்கள் வரை நீடிக்கும் பிறகு மிக விரைவாகவே அடங்கிவிடும்.



இதைத்தவிரவேறு சில அறிகுறிகளும் நோயாளிக்கு ஏற்படலாம்

படபடப்பு

அதீத இதயத் துடிப்பு

அதிக வியர்வை

நடுக்கம்

மூச்சு விடுவதில் சிரமம்

நெஞ்சு வலி

அடி வயிற்றில் பிரச்சனை

மயக்கமாக உணர்வது

லேசான தலைவலி

சுய கட்டுபாடின்மை

கவலை தாக்குதல்கள்:

தீவிரம்: அறிகுறிகளின் தீவிரமானது வெவ்வேறு விதமாக இருக்கலாம். சில அறிகுறிகள் மிகவும் தீவிரமாகவும் சில மிகவும் லேசாகவும் இருக்கும்.

துவக்கம்: இதை மெதுவாக ஆரம்பித்து காலப்போக்கில் சில நாட்கள் அல்லது மாதங்களுக்கு கூட நீடிக்கலாம். மன அழுத்தம் அதிகரித்து அதிகரித்து, கிட்டத்தட்ட ஒரு அட்டாக்கை போல மாறிவிடும். இதன் அறிகுறிகள் நீண்ட நாட்களுக்கு காணப்படும்.



இதைத்தவிரவேறு சில அறிகுறிகளும் நோயாளிக்கு ஏற்படலாம்..

    • தசைகள் நீட்சி

    • ஞாபகம் மறதி

    • கவன குறைவு

    • தூங்குவதில் பிரச்சனை

    • மயக்கம்

    • ஓய்வில்லாமல் இருத்தல்

    • எரிச்சல்

    • சீரற்ற இதய துடிப்பு

  • மூச்சு விடுவதில் சிரமம்



எவ்வாறு சமாளிப்பது?

அமைதியாக இருக்கவேண்டும்: நோயாளியின் அறிகுறிகளை பார்த்து பயப்படாமல் இருக்க வேண்டும். நீங்கள் அமைதியாக இருக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட நோயாளியும் அனைத்தும் சரியாக உள்ளது என்பதை உணர்ந்து அவரும் மனதளவில் அமைதியாக இருப்பார்.

 

தாக்குதலை பற்றி கூறுங்கள்இது வெறும் பேணிக் ஆட்டாக் தான் இதைப்பற்றி பயப்பட ஒன்றுமில்லை. இது விரைவில் சரியாகிவிடும். நான் உன்னுடன் இருக்கிறேன்” என்று நோயாளிக்கு ஆறுதல் அளிக்க வேண்டும். இதுவே அறிகுறிகளை மிக விரைவில் சரியாக்கிவிடும். பொதுவாகவே இந்த பேணிக் தாக்குதல்கள் அரை மணி நேரத்திற்குள்ளாகவே சரியாகிவிடும்.

ஆறுதல்: நோயாளியை அருகில் அழைத்து அமர வைத்து அவர்களை லேசாக வைக்க முயற்சி செய்ய வேண்டும். அவர்களை ஆறுதல்படுத்தி வேண்டும் என்றால் சிறிது தண்ணீர் கொடுக்கலாம்.



ஆழ்ந்த மூச்சு பயிற்சிமனதை அமைத்து படுத்துவதற்காக மூச்சு பயிற்சி தியானம் போன்ற பயிற்சிகளை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம். ஒரு நேரத்தில் ஒரு டெக்னிக்கை மட்டும் பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக மூச்சுப் பயிற்சி ஈடுபடுவதன் மூலம் வெளியே உள்ள பிரச்சனைகளைப் பற்றி மறந்து மூச்சின் மீது கவனம் செலுத்தலாம்.

மெதுவாக பேச்சு கொடுங்கள்நோயாளி சற்று சரியான நிலைக்கு வரும் நேரத்தில் அவர்களுடன் பேச்சு கொடுக்கலாம். எதனால் இப்படி நிகழ்ந்தது என்பதை அவர்களிடம் தெளிவாக கேட்டு எறிந்து நோயாளியின் சூழ்நிலையை புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம்.

தைரியம் கொடுக்க வேண்டும்அறிகுறிகளினால் நோயாளி மனதளவில் பயந்து போய் இருப்பார். எனவே அவருக்கு தைரியம் கொடுக்கும் விதத்தில் இதுவும் கடந்து போகும் உன்னால் இதை சமாளிக்க முடியும் என்பது போன்ற தைரியமான வார்த்தைகளை அவருக்கு எடுத்துரைக்க வேண்டும்.

மருத்துவ ஆலோசனைஇதற்கான தீர்வை பெறுவதற்காக நோயாளியை மருத்துவ ஆலோசனை பெறுமாறு உற்சாகப்படுத்தலாம். தகுந்த மனநல மருத்துவர் பார்த்து ஆலோசனை செய்யுமாறு அவர்களுக்கு அறிவுரை கூறலாம்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

3 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

3 hours ago

அழகிய காஷ்மீரை 6 நாள் குடும்பத்தோடு சுற்றிப் பார்க்கலாம்.. எவ்வளவு தெரியுமா?

ஐஆர்சிடிசி காஷ்மீர் டூர் பேக்கேஜை பயணிகளுக்காக அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த டூர் பேக்கேஜின் பயணம் சண்டிகரில் இருந்து தொடங்கும். ஐஆர்சிடிசியின்…

3 hours ago

உங்க நட்புக்கு நா பலிகிடாவா? கதறும் சுசித்ரா

சாதுமிரண்டா காடு கொள்ளாது என்று சொல்லுவாங்க, அப்படித்தான் இப்போது பாடகி சுசித்ரா பொங்கி எழுந்து கொண்டிருக்கிறார். பேச வேண்டிய நேரத்தில்…

3 hours ago

சிறுதானியத்தில் ஐஸ்கிரீம் : ஸ்ரீ மில்லட் ஐஸ்கிரீம்ஸ் சாதனை படைத்தது எவ்வாறு?..!

பிரபு வேணுகோபால், சசிதர், அருண் பிரகாஷ், பார்கவ் ஆகிய நான்கு பேரும் நல்ல நண்பர்கள். வெளிநாட்டில் கைநிறைய சம்பளம் தரும்…

6 hours ago

ரோகினி கொடுத்த வார்னிங் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின்…

6 hours ago