18 மொழியில் தயாராகும் ஜெயம் ரவி படம்..

18 மொழியில் தயாராகும் ஜெயம் ரவி படம்.. பொன்னியின் செல்வனுக்கு பிறகு பிரம்மாண்ட படத்தில் இணைகிறார்

நடிகர் ஜெயம் ரவிக்கு கடந்த சில வருடங்களாகவே வெற்றி படங்கள் எதுவும் அமையவில்லை. கடைசியாக அவர் கொடுத்த சூப்பர் ஹிட் படம் என்றால் அது அவருடைய அண்ணன் இயக்கத்தில் நடித்து வெளியான தனி ஒருவன் திரைப்படம் தான். அதன் பின்னர் ஜெயம் ரவி எப்படியாவது ஒரு ஹிட் படம் கொடுத்து விட வேண்டும் என்று கடுமையாக போராடி வருகிறார்.



அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்து வந்த நடிகர் ஜெயம் ரவிக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் பொன்னியின் செல்வன். அதுவும் அந்த கதையின் மைய கதாபாத்திரமான ராஜ ராஜ சோழனின் கேரக்டரை எடுத்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு அமைந்தது. இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. வசூலிலும் ஜெயித்தது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு ஜெயம் ரவிக்கு அடுத்தடுத்து நல்ல பட வாய்ப்புகள் அமையும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் வெளியான அகிலன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்மறையான விமர்சனங்களே சந்தித்தது. மேலும் இந்த படம் ரசிகர்களின் கவனத்தை அவ்வளவாக ஈர்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இதனால் ஜெயம் ரவி தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை தான் பெரிய அளவில் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருடைய 32 ஆவது படத்தின் அப்டேட் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை ஐசரி கணேசின் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

மேலும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருக்கிறார். படத்தின் இயக்குனர் யார் என்பது கூடிய விரைவில் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை மொத்தம் 18 மொழிகளில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை விட பெரிய அளவில் இதை கொண்டு செல்ல வேண்டும் என திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள்.

படத்தின் மொத்த பட்ஜெட் 100 கோடி என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த கோமாளி திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக ரவி இந்த நிறுவனத்துடன் கை கோர்த்திருக்கிறார். படத்தின் அப்டேட் கூடிய விரைவில் வெளியாக வாய்ப்பிருக்கிறது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியை…

3 hours ago

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா..புதிய அப்டேட்!

மிழ் திரையுலகில் காமெடி நடிகராகவே பல ஆண்டு காலம் பயணித்து வந்த நடிகர் சூரியின், திரை வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய…

3 hours ago

குழந்தைகளுக்கு பிடித்த பிரெஞ்சு டோஸ்ட் செய்யலாம் வாங்க!

French Toast உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் காலை உணவாகும். எளிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவு,…

3 hours ago

விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு

தமிழ் திரையுலகில் காமெடியனாக கொடிகட்டிப் பறந்தவர் சந்தானம். ஒரு காலத்தில் நிற்க கூட நேரமில்லாமல் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்த…

3 hours ago

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

7 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

7 hours ago