தமிழ் நாட்டு அரண்மனை -3 (பத்மநாபபுரம் அரண்மனை)

பத்மநாபபுரம் அரண்மனை

கன்னியாகுமரி மாவட்டத்தின் தக்கலைக்கு அருகில், நாகர்கோவில் நகரிலிருந்து கேரள தலைநகர் திருவனந்தபுரம் செல்லும் பாதையில் பத்மநாபபுரம் அரண்மனை அமைந்துள்ளது. இந்த அரண்மனை தமிழ்நாட்டுப் பகுதியில் அமைந்திருந்தாலும், கேரள தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இது கி.பி.1601-ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட ரவிவர்ம குலசேகர பெருமாள் என்பவரால் கட்டப்பட்டது.

 வரலாறு

இந்த அரண்மனையானது திருவிதாங்கூர் சமஸ்தானத்தை  ஆண்ட இரவி வர்ம குலசேகர பெருமாள் என்பவரால் பொ.வ 1601 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்றாலும், தற்போது உள்ள முழு அரண்மனையும் அவரால் கட்டப்பட்டதல்ல. அரண்மனையின் முகப்பில் இருக்கும் தாய் கொட்டாரம் என அழைக்கப்படும் பகுதி மட்டுமே அவரால் கட்ட பட்டடதாக கூறப்படுகிறது. அவருக்குப்பின் ஆட்சிக்கு வந்த அவரின் மருகமனான அனிழம் திருநாள் மாராத்தாண்ட வர்மா காலத்தில் இந்த அரண்மனை விரிவுபடுத்தப்பட்டது. கேரளக் கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.  இந்தக் கட்டமானது காலம்காலமாக புதுப்பிக்கபட்டுவந்ததாக சொல்லப்படுகிறது. இந்த அரண்மனையின் எல்லா பகுதிகளிலும் இயற்கை ஒளியை பயன்படுத்தும் விதத்தில் கட்டப்பட்டுள்ளது. கேரள பாணியில் கட்டப்பட்ட இந்த அரண்மனையில் சீன பாணியிலான சிம்மாசனம் உள்ளது. இது அங்கிருந்து தருவிக்கப்படதாகவோ அல்லது அன்பளிப்பாக தரப்படதாகவோ இருக்கலாம்.

 

இந்த அரண்மனையில் மிகப்பெரிய அன்னதானக்கூடம் உள்ளது. இது அரண்மனையின் கொடையை பறைசாற்றுவதாக உள்ளது. ஏறக்குறைய இரண்டாயிரம் பேர் அமர்ந்து உணவு உண்ணும் இடவசதியுடன் இந்தக் கூடம் அமைந்துள்ளது. இந்த உணவுக் கூடத்தில் சீனச்சாடிகள் வைக்கப்பட்டுள்ளன. இவை உணவுப் பொருட்களை வைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

 

பொ.வ 1795 ஆம் ஆண்டு தலைநகரம் இவ்வரண்மனையிலிருந்து (பத்மனாபபுரம்) திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. அரண்மனை வளாகத்தில் உள்ள உப்பரிகை மாளிகைக்கு அருகே  சரஸ்வதியம்மன் கோவில் உள்ளது.

இவ்வரண்மனையில் உள்ள முக்கியமான கட்டிடங்கள் பின்வருமாறு:

  • தாய் கொட்டாரம்: தாய்க் கொட்டாரம் இந்த அரண்மனையின் மிகப் பழமையான பகுதி இந்த தாய் கொட்டாரம் ஆகும். இது பொ.வ 1550 ற்கு முன் கட்டப்பட்டது. இது கேரள நாலுகெட்டு வீடு பணியில் கட்டப்பட்டுள்ளது. இதன் மேலு இரு படுக்கையறைகள் உள்ளன.

  • பூ முகம்: அரண்மனையின் நுழைவு கட்டடமானது கேரள பாரப்பரியத்தின்படி பூமுகம் என அழைக்கப்படுகிறது. இந்தப் பூமுகவாயிலானது மரவேலைப்பாடுகளுடன் கூடிய இரட்டைக் மரக்கதவைவும் கருங்கல் துணையும் உடையது. இந்தக் கதவில் 90 வகைத் தாமரைகள் செதுக்கப்பட்டுள்ளன. பூமுகத்தில் கேரள பாரம்பரிய தொங்கும் விளக்கு உள்ளது.

  • மந்திர சாலை : மந்திர சாலை என்பது மன்னரின் அரசவையாக இருந்த கட்டடம் ஆகும். இது பிரம்மாண்டமானதாக இல்லாமல் எளிமையானதாக உள்ளது. இந்த மந்திர சாலை முழுக்க மரத்தால் கட்டப்பட்டுள்ளது.

  • உப்பரிகை மாளிகை : இது நான்கடுக்கு மாளிகையாக உள்ளது. இது அரண்மனையின் மையத்தில் அமைந்துள்ளது. முதல் தளத்தில் அரசரின் படுக்கை அறைகள் அமைந்துள்ளன. இதில் மருத்துவ குணம் கொண்ட கட்டிலொன்று உள்ளது. அறையின் சுவர்களில் ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டாம் தளத்தில் அரசர் படிப்பதற்கான அறைகளும் உபவாசம் இருப்பதற்கான அறைகளும் உள்ளன. மேல் தளத்தில் பூஜை அறை அமைதுள்ளது. இந்த பூசை அறையில் இந்து தொன்மவியிலை விளக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

  • நவராத்திரி மண்டபம் : இது கேரள கட்டக்கலையில் இருந்து மாறுபட்டு விஜயநகர கட்டடக்கலையை பிரதிபலிப்பதாக உள்ளது. இதன் தளபானது தேங்காய்கூடு, முட்டையின் வெள்ளைக்கரு, கற்கள் போன்றவற்றைக் கொண்டு அமைக்கபட்டுள்ளது எனப்படுகிறது. இந்த மண்டபத்தில் நவராத்திரி காலங்களில் நடன நிகழ்ச்சிகள் நடக்கும். அரசர்கள் மண்டபத்தில் உள்ளே அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிப்பர். அரச மகளிர் இந்த நடன நாட்டிய நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்க ஏதுவாக, மண்டபத்தை ஒட்டியே தெற்குப்பக்கமாக ஒரு அறைகள் அமைக்கபட்டுள்ளன. இந்த அறைகளில் இருந்து மரத் துளைகளின் வழியாக நடன நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க முடியும் என்றாலும் மண்டபத்தில் உள்ளவர்களால் அவர்களைப் பார்க்க முடியாது. 

  • ஹோமபுரம் – சடங்குகள், யாகங்கள் செய்யும் பகுதி.

  • இந்திரவிலாசம் – விருந்தினர் இல்லாமாக செயல்பட்டது. இது மேற்கத்திய சாலைக் கொண்டதாக உள்ளது.

  • நாடக சாலை

  • தெற்குக் கொட்டாரம் -தாய்க் கொட்டாரத்தினைப் போன்றே பழமையானது. தற்போது அருங்காட்சியமாக செயல்படுகிறது.

  • நீச்சல் குளம்

பத்மநாபபுரம் அரண்மனையானது, பத்மநாபபுரக் கோட்டைக்குள்ளே, மேற்கு தொடர்ச்சி மலையான வேளிமலையடிவாரத்தில் அமைந்துள்ளது. அதனை மாளிகை என்று குறிப்பிடுவதைவிட, மாளிகைத் தொகுதியென்று குறிப்பிடுவதே பொருத்தமானதாக அமையும். ஏறத்தாழ 14 மாளிகைகளைக் கொண்ட தொகுதியாகவே இந்த அரண்மனை காணப்படுகிறது.

What’s your Reaction?
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

விஜய் டிவியின் 5 சீரியலின் கதை..ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி சீரியலை கொடுப்பது விஜய் டிவி! தான்.

என்னதான் சன் டிவி சீரியலுக்கு மக்கள் அமோக வரவேற்பை கொடுத்து வந்தாலும் இப்ப இருக்கிற ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி சீரியலை கொடுப்பது விஜய் டிவி தான்.…

11 hours ago

பாக்யா குடும்பத்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. சீரியலில் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தி கோபி இனிமே…

11 hours ago

பாலியல் தொழிலாளிகள் சூழலை பேசும் வெப் சீரிஸ்: ஹீராமண்டி எப்படி? ஓடிடி திரை அலசல்

பாலியல் தொழில் நடக்கும் புகழ்பெற்ற ஹீராமண்டியின் ஷாஹி மஹாலின் தலைவியான மல்லிகாஜானை வென்று அந்த இடத்தைப் பிடிக்க அவரது சகோதரியின்…

11 hours ago

பேரிச்சம்பழம் அல்வா

ஊட்டச்சத்துக்களின் உறைவிடமாக இருக்கும் பேரீச்சை பழங்களில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் இயற்கையான இனிப்புச் சத்துக்கள் உள்ளன. பேரீச்சை பழங்கள் துரிதமான…

11 hours ago

உடலென நான் உயிரென நீ-12

12 " என்னாயிற்று பேபி ...? "  தன் சட்டையை இறுக்கி பிடித்திருந்த அவள் கைகளை பார்த்தபடி கேட்டான் கணநாதன்…

15 hours ago

வேண்டுதல் நிறைவேற 9 வாரம் முருகன் வழிபாடு

முருகா! எத்தனை காலமாக இந்த வேண்டுதலை உன்னிடம் வைக்கின்றேன். ஆனால் என்னுடைய வேண்டுதல் நிறைவேறுவதற்கு காலதாமதம் ஏன், என்று எல்லோரும்…

15 hours ago