” இதில் என்ன …? கொடுங்க பார்க்கலாம் …” பையை வாங்கி பிரித்தவள் விழி விரித்தாள் .பையினுள் இருந்த பெட்டியில் நகைகள் இருந்தன. நிறைய …பெரியதும் ..சிறியதுமாக …கல் பதித்தும் , இல்லாததுமாக …கொஞ்சம் பழைய டிசைன் நகைகள் .ஒரு ஒழுங்கில்லாமல் குவியலாக பெட்டிக்குள் அடைபட்டிருந்தன .
” என் நகைகள் .உனக்கு கல்யாண வீட்டிற்கு போட்டுக் கொள்ள கொடுக்கலாமேன்னு எடுத்துட்டு வந்தேன் …” தயக்கமாக கூறினாள் மங்கையர்க்கரசி .
ஆச்சரியம் தாக்க கணவனை பார்த்தாள் , அவன் அதே பாவனையுடன் தாயை பார்த்துக் கொண்டிருந்தான் .
” அமர் வாங்கிட்டு வந்திருக்கிறது புது டிசைனாக நல்லாயிருக்கு .என் நகை கொஞ்சம் பழைய மாடல் .உனக்கு பிடிக்காது …” மாமியாரின் திணறலில் வேதிகாவிற்கு அவள் தோளணைக்கும் வேகம் வந்த்து .மருமகளுக்கு நகைகளை தூக்கி கொடுக்கும் மாமியார் .எப்பேர்பட்ட பெண் இவர் .மங்கையர்க்கரசியன் அருகே அமர்ந்து ஆதரவாக அவள் கைகளை பிடித்துக் கொண்டாள் .
” எனக்கு எப்பவுமே இந்த மாதிரி பழைய டிசைன் நகைகள் தான் பிடிக்கும் அத்தை .கொடுங்கள் போட்டு கொள்கிறேன் …” கைகளை நீட்டிக் கொண்டே கணவனை பார்த்து சரிதானே என பார்வையால் கேட்டாள் .
அவன் இன்னமும் தாயிடமிருந்து மீளா பார்வையுடன் மனைவிக்கு சரியென தலையாட்டினான் .மங்கையர்க்கரசியின் முகம் வெளிச்சம் பூசிக் கொண்டது .
” இந்த நகைகளை பற்றி சொல்லுங்களேன் அத்தை ” வேதிகா மாமியாரை மேலும் பேச்சுக்குள் இழுக்க , மங்கையர்க்கரசி உற்சாகத்துடன் கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்து தன் நகைகளை கட்டில் மேல் பரப்பியபடி விவரிக்க ஆரம்பித்தாள் .
” இலைத்தோடு , மாங்காய் மாலை , காசு மாலை , கல் வளையல் , நெளி மோதிரம் , அட்டிகை …”என ஒவ்வொரு நகையாக அவள் விவரிக்க …விவரிக்க அவளது முக உணர்ச்சிகளை பார்த்தபடி இருந்தனர் கணவனும் , மனைவியும் .
” என் அப்பா எனக்கு அறுபது பவுன் நகை போட்டார் .உன் மாமனார் ஒரு அறுபது பவுன் வாங்கி தந்திருப்பார் .என் நகை மொத்தம் நூற்றியிருபது பவுன் ….” பெருமையாய் அறிவித்தாள் .
” இதையெல்லாம் இதுவரை என்னிடம் நீங்கள் சொன்னதே இல்லையே அம்மா ..? ” அமரேசன் மென்மையாக கேட்டான் .
” நீ கேட்டதே இல்லையேடா …” மங்கையர்க்கரசி திருப்பினாள் .
வாயடைத்து அமர்ந்திருந்த கணவனை குறுகுறுவென பார்த்தாள் வேதிகா .நீ வழக்கமாக எதிரலிருப்பவர்கள் வாயைத்தானே அடைக்க வைப்பாய் …இன்றென்ன காற்று உனக்கெதிர் புறம் வீசுகிறது …மனைவியின் கிண்டல் பார்வையை அமரேசன் கவனிக்கவில்லை . அவன் பார்வை முழுவதும் தாயிடமே இருந்த்து .
” ம் ..தப்புத்தான் .நான் கேட்டிருக்க வேண்டும்தான் …” தலையை குனிந்து ஆமோதித்து கொண்டான் .வேதிகா கன்னத்தில் கை தாங்கி தாயையும் , மகனையும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் .
தரையில் பார்வை பதித்திருந்த மகனின் தலையில் பார்வையை வைத்திருந்தாள் தாய் .நிமிர்ந்த்தும் தாயின் பார்வையை சந்தித்த மகன் ,சேரிலிருந்து எழுந்து தன் அம்மாவின் கைகளை பிடித்து கொண்டு கட்டிலில் அவளருகே அமர்ந்து கொண்டான் .
” இன்னமும் கூட நான் நிறைய உங்களிடம் பேசவில்லையோ …எனத் தோன்றுகிறது அம்மா .” மங்கையர்க்கரசியின் கைகள் நடுங்கியபடி உயர்ந்து மகனின் தலையை வருடியது .
சூழ்நிலையின் கனத்தை உணர்ந்த வேதிகா எழுந்தாள் .” பேசிக் கொண்டிருங்கள் .வருகிறேன் .” தன்னை கடந்தவளின. கைகளை பற்றினான் அமரேசன .
” எங்கே போகிறாய் …உட்கார் …” உத்தரவான அவன் குரலில் முகம் சுணங்கினாள் .
” நீ அறியாமல் எந்த ரகசியம் பேச போகிறோம் வேதா …? ” பேசி
யது மங்கையர்கரசிதானா …காதுகளை தேய்த்து விட்டுக் கொண்டு மீண்டும் அமர்ந்து கொண்டாள் வேதிகா .
” நீங்கள் தான் பேசினீர்களா அத்தை …? ”
” நானேதான் …என் நகைகளை போட்டு கொள்கிறாயா வேதாம்மா …? ” மகனின் கையையும் , மருமகளின் கையையும் தன் இரு கைகளாலும் பிடித்து கொண்டாள் .
” பின்னே …சும்மா காட்டிவிட்டு எடுத்து போய்விடலாமென நினைக்கிறீர்களா அத்தை …? நான் இது இது வேண்டுமென உங்களிடம் சண்டையிடலாமென இருந்தேன் …” வேதிகா கொஞ்சல் குரலில் கூற மங்கையர்கரசி மலர்ந்து சிரித்தாள்.
” எடுத்துக்கோம்மா .உனக்கு இல்லாத்தா…? ”
” இன்னமும் எதையெல்லாம் மறைத்து வைத்திருக்கறீர்கள் அம்மா …? ” குற்றச் சாட்டுவது போலிருந்த மகனின் குரலில் மங்கயர்கரசியின் முகம் பழையபடி மரத்த தன்மைக்கு மாறியது .
அந்த மாற்றத்தை விரும்பாத வேதிகா ” பெண்கள் நாங்கள் எங்களுக்கு தேவையான நகைகளை தனிப்பட வைத்திருப்போம் .எல்லாவற்றையும் உங்களிடம் காட்ட வேண்டுமென்றோ , சொல்ல வேண்டிமென்றோ என்ன கட்டாயம் …? இப்படித்தான் அத்தை கணக்கு போட்டு எனது நகைகளை கொண்டு போய் அடமானத்தில் வைத்துவிட்டார் ….” மாமியாரிடம் கணவனை குற்றம் கூறினாள் .கோபத்திற்கு பதில் அமரேசனின் முகம் மலர்ச்சிக்கு போனது .
இதற்கு எதற்கு பல்லை காட்டுகிறான் …? முழியை பார் …சொல்லவிளங்கா பார்வையுடன் தன் முகத்தில் பதிந்த கணவனின் பார்வையில் திணறியவள் ” அத்தை நீங்க என் தோட்டத்தை பார்த்திருக்கறீர்களா …வாங்க பார்க்கலாம் ” அழைத்தாள் .
” ஆமாம் அம்மா .அருமையான தோட்டம் .போய் பாருங்கள் ்குறிப்பாக அந்த மல்லிகை கொடியை கட்டாயம் பார்த்துவிடுங்கள் ….” அமரேசனின் பார்வை வேதிகாவை உணவென மென்றது.
” அப்படி என்னம்மா அந்த மல்லிகை கொடியில் விசேசம் …? ” கேட்ட மாமியாருக்கு பதில் சொல்ல முடியாமல் முகம் சிவந்து விட , சட்டென தலையணையை எடுத்து கணவன்முதுகில் ஒன்று போட்டாள்.
” எதையாவது உளறாதீர்கள் …”
” ஐய்யோ …என் முதுகு …போச்…அம்மா காப்பாத்துங்க …” குனிந்து கத்தியவனின் முதுகில் கைகளால் இரண்டு வைத்தாள் .
” இதைத்தான் வேதாம்மா நீ முதலிலேயே செய்திருக்க வேண்டும் .தலையணையை எடுத்ததுதான் தப்பு …”
” ஐயோ …மாமியாரும் மருமகளும் சேர்ந்துட்டீங்களா …? ” அமரேசனின் அலறலில் ” ஆமான்டா …” என அவள் தலையில் கொட்டினாள் மங்கையர்கரசி .இது நாள் வரை தள்ளி நின்ற குதூகலம் திரும்ப அவர்களிடையே நுழைந்து அமர்ந்து கொண்ட போது …
” எதற்கு இப்படி கத்திக் கொண்டிருக்கிறீர்கள் …? குடும்பம் நடக்கும் வீடு போல் தெரியவில்லையே …” கரித்து கொட்டியபடி வந்து நின்றாள் திலகவதி .
என்னதான் சன் டிவி சீரியலுக்கு மக்கள் அமோக வரவேற்பை கொடுத்து வந்தாலும் இப்ப இருக்கிற ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி சீரியலை கொடுப்பது விஜய் டிவி தான்.…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. சீரியலில் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தி கோபி இனிமே…
பாலியல் தொழில் நடக்கும் புகழ்பெற்ற ஹீராமண்டியின் ஷாஹி மஹாலின் தலைவியான மல்லிகாஜானை வென்று அந்த இடத்தைப் பிடிக்க அவரது சகோதரியின்…
ஊட்டச்சத்துக்களின் உறைவிடமாக இருக்கும் பேரீச்சை பழங்களில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் இயற்கையான இனிப்புச் சத்துக்கள் உள்ளன. பேரீச்சை பழங்கள் துரிதமான…
12 " என்னாயிற்று பேபி ...? " தன் சட்டையை இறுக்கி பிடித்திருந்த அவள் கைகளை பார்த்தபடி கேட்டான் கணநாதன்…
முருகா! எத்தனை காலமாக இந்த வேண்டுதலை உன்னிடம் வைக்கின்றேன். ஆனால் என்னுடைய வேண்டுதல் நிறைவேறுவதற்கு காலதாமதம் ஏன், என்று எல்லோரும்…