Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 21

21

” உன் அப்பாவை பார்க்க வேண்டுமே கமலினி .? எங்கே …எப்போது பார்க்கலாம் ? “

” அதெல்லாம் பார்க்கலாம் . நீங்கள் முதலில் இதை சொல்லுங்கள் . நான்கு நாட்களாக உங்களிடம் தனியாக பேச நேரம் கிடைக்கவேயில்லை . தினமும் நிகிதாவை மீட் பண்ணுகிறீர்கள் தானே ? உங்கள் காதலில் எதுவும் முன்னேற்றம் இருக்கிறதா ? “




விஸ்வேஸ்வரன் ஒரு மாதிரி விழித்தான் .”தினமும் மீட் பண்ணுகிறோம் .பேசுகிறோம் . அப்புறம் …” பேச்சை நிறுத்தி யோசித்தபடி இருந்தான் .அவனே தொடர்வானென கொஞ்ச நேரம் காத்திருந்து விட்டு …

” ம் …சொல்லுங்கள் ” தூண்டினாள் .

” ப்ச் …என்ன சொல்ல ? இப்படி பேச்சிலேயே தொடர்ந்து கொண்டிருப்பதில் பிரயோஜனம் இருப்பது போல் தெரியவில்லை கமலினி .எத்தனை நாட்கள் ஆகுமோ ? எனக்கு பொறுமையே இல்லை …”

” காதலுக்கு பொறுமை ரொம்ப அவசியம் விஸ்வா. நான்கே நாட்களுக்குள் சலித்தால் எப்படி ? “

” என்ன பொறுமை …? எதில் பொறுமை ? “

” காதலி வரும் வரை காத்திருப்பது …அவளுக்கு பிடித்த பொருட்களை தேடி வாங்குவது…உங்களுக்கு பிடிக்கவில்லையென்றாலும் அவளுக்கு பிடிக்கும் விசயங்களை பொறுமையாக கேட்பது …இப்படி “

” இதெல்லாம் டீன் ஏஜ் காதலர்கள் செய்ய வேண்டியது . நாங்கள் இருவருமே அந்த ஏஜையெல்லாம் தாண்டி விட்டோம் கமலினி .”

” இல்லை விஸ்வா காதலுக்கு வயதில்லை .எல்லாக் காலமும் காதலுக்கு ஒன்றுதான் . மேலோட்டமாக  பார்க்க அற்பமாக தோன்றினாலும் பரஸ்பரம் ஒருவரால் ஒருவர் கவனிக்கப்படுகிறோம் என்பதே காதலின் ஆணிவேர் “

” ச் …போ கமலினி .உன் ஐடியா எல்லாமே ஓட்டை . ப்ராக்டிகலாக எதுவுமே ஒத்து வருவதே இல்லை . அவளது டேஸ்டும் என்னிடைய டேஸ்டும் ஆப்போசிட் .சாதாரண பேச்சைக் கூட பத்து நிமிடங்களுக்கு மேல் எங்களால் நீட்டிக்க முடிவதில்லை “

” காதலின் முதல்படி உணர்ச்சிகள் தான் சார் .ப்ராக்டிகலுக்கு அங்கே இடம் இல்லை .என் கணக்குபடி உங்கள் வியாபார பேச்சுக்களை குறைத்துக் கொண்டீர்களென்றலே எல்லாம் சரியாக நடக்கும் “

” காட் …என் வியாபார பேச்சை குறைத்தால் அவளது டென்னிஸ் பற்றியே பேச வேண்டியதாக இருக்கும் .ஐ கான்ட் டாலரேட் தேட் ….”

” ஓ…அப்போது நீங்கள் ஜெம்ஸை பற்றியும் , நிகிதா டென்னிஸை பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் ? இந்த நான்கு நாட்களும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறதா ? “

ஒற்றைவிரலால் உச்சந்தலையை சொறிந்தபடி விஸ்வேஸ்வரன் ஒரு மாதிரி விழிக்க …அவனது அந்த தோற்றம் அப்படியே கமலினியின் மனதில் பதிந்து போனது. பாடத்தை தவறாக ஒப்புவித்து ஆசிரியையிடம் மாட்டிக் கொண்ட மாணாக்கனின் அவஸ்தை தோற்றம்.

” இந்தாங்க துடைச்சுக்கோங்க …அவ்வளவு வடியுது …” தன் கர்ச்சீப்பை நீட்டினாள் .முதலில் எதற்கோ என வாங்கியவன் பின் அவள் கேலி புரிந்து …

” ஏய் என்னை ஓட்டுறியா நீ ? ” கர்ச்சிப்பை மீண்டும் அவள் மேல் எறிந்தான் .

” சொன்னபடி நடக்காத ஸ்டூடன்டை என்ன செய்வது …? தரையில் முட்டி போட வைக்கனும் ” மீண்டும் கர்ச்சீப்பை எறிந்தாள் .

” ஓட்டை ஐடியாவாக கொடுத்து விட்டு என்னை முட்டி போட வைப்பாயா ? ” இப்போது அவன் திருப்பி எறிந்தான் .

” என் ஐடியா ஒட்டையா ? உங்க மண்டையில்தான் ஓட்டை உள்ளே ஒன்றுமில்லை .காலி ” பேசியபடி இருவரும் ஒருவர் மேல் ஒருவர் விளையாட்டாக கர்ச்சீப்பை எறிய ஆரம்பித்தனர் .

” என் மண்டை காலியா …? உன் உதவாத ஐடியாவெல்லாம் ஒத்து வராமல் நானாக ஒரு சூப்பர் ஐடியா கண்டுபிடித்து வைத்திருக்கறேனாக்கும் “

” ஐய்யே …உங்க ஐடியா லட்சணம் தெரியாதாக்கும் .வைரத்தை தங்கத்தில் பதிக்கலாமா …? வெள்ளியில் பதிக்கலாமான்னு பேசிட்டிருப்பீங்க “

” நோ கண்ணா …இதில் பேச்சே கிடையாது . ஒனலி ஆக்சன்தான் .நிகிதாவை இப்போது இங்கே வரச் சொல்லியிருக்கிறேன் ….நீயே பார் “

” என்ன ஆக்சன் ? நிகிதாவை இழுத்து அறையலாம்னு நினைக்கிறீங்களோ ? உங்க ஆக்சனெல்லாம் இந்த மாதிரிதானே இருக்கும் ? “

” ஏய் என்னை என்ன நினைத்தாய் ? இப்படி என்னை நினைத்ததற்கு மட்டும் …நீ இன்று இங்கேயே இருக்க போகிறாய் .என் ஆக்சனை பார்க்க போகிறாய் “

” நிச்சயமாக நீங்களே போகச் சொன்னாலும் நான் போக மாட்டேன் . இருந்து பார்த்து விட்டுத்தான் போவேன் “




” நீ ஏன் இங்கே இருப்பாய் ? எதை பார்ப்பாய் ? ” நிகிதாவின் குரல் அறைவாசலிலிருந்து வர இருவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து அப்படியே அமர்ந்து விட்டனர் .நிகிதா அறைக்கதவை திறந்து நின்றபடி இருவரையும் விநோதமாக பார்த்துக் கொண்டிருந்தாள் .

இப்போதுதான் தங்களது பாஷிங் த கர்ச்சீப் விளையாட்டை உணர்ந்த இருவரும் வேகமாக நார்மல் பொசிசனுக்கு வந்தனர் .கர்ச்சீப்பை அவசரமாக தன் பேன்ட் பாக்கெட்டிற்குள் நுழைத்தான் விஸ்வேஸ்வரன் .கமலினி வேகமாக எழுந்து நின்றாள் .

” வா…வாங்க மேடம் “

” என்னை பெயர் சொல்லி கூப்பிட சொல்லியிருக்கிறேன் . நானும் , விஸ்வாவும்  கொஞ்சம் பர்சனலாக பேச போகிறோம் .இங்கே நீ என்ன பார்க்க போகிறாய் ? “

” ஆங் …சரி மேடம் …இல்லை நிகிதா .நீங்கள் பேசுங்கள் .நான் போகிறேன. …”

” நில்லு கமலினி .உனக்கு வேலை கொடுத்தேனே …நீ பாட்டுக்கு போனால் எப்படி …? “

என்ன வேலை கொடுத்தான. ..? கமலினி விழித்து நிற்க …” லாக்கர் ரூமை க்ளீன் பண்ண சொன்னேனே …? ” அந்த அறையிலேயே ஓரமாக இருந்த லாக்கர் ரூமை காட்டினான் .

மிக விலையுயர்ந்த நகைகளின் ஒரு மாதிரி மட்டுமே கடை ஷோகேஸில் இருக்கும் .மற்றவை இந்த லாக்கர் அறைக்குள் பத்திரப்படுத்தப்பட்டு இருக்கும். கடை உரிமையாளர்கள் மட்டுமே லாக்கர் அறைக்குள் நுழைவர் .

இந்த வேலையை எப்போது சொன்னான் ? கமலினி யோசித்தபடி தயங்கி நிற்க , ” விஸ்வா கமலினி இங்கே செர்வென்ட் தானே ? அவளை லாக்கர் ரூமிற்குள் அனுப்புகிறீர்களே ? ” நிகிதா நேரடியாகவே கேட்டுவிட்டாள் .

” இல்லை நிகிதா.கமலினி இங்கே செர்வன்ட் இல்லை .என் ப்ரெண்ட் .எனக்கு தொழிலில் ஹெல்ப் பண்ணிக் கொண்டிருக்கிறாள்.என் பார்ட்னர் போல் அவள் …” விஸ்வேஸ்வரன் அழுத்தமாக சொல்ல நிகிதா தோள்களை குலுக்கிக் கொண்டாள்.

” இங்கே வா கமலினி …” அவளை லாக்கர் ரூம் முன் அழைத்துப் போய் நம்பர் லாக் நம்பர்களை  அவளுக்கு காட்டியபடி கதவை திறந்து கொண்டே மெல்லிய குரலில் பேசினான் .

” என் ஆக்சனில் சந்தேகப்பட்டாய்தானே …? இப்போது இந்த அறைக்குள் இருந்து என் செயல்பாட்டை பார் “

” என்ன செய்ய போகிறீர்கள் ? “

” நேற்று ஒரு பிலிமில் பார்த்தேன் .அதைத்தான் இப்போது நிகிதாவிடம் டிரை பண்ண போகிறேன் …”

” என்ன பார்த்தீர்கள் ? “

விஸ்வேஸ்வரன் உதடுகளை குவித்தான் .காலிப்பசங்க போல விசிலடிக்க போகிறானா என்ன ? கமலினி அவன் உதடுகளை கூர்ந்து பார்த்தபடி இருந்த போது அவ்விதழ்கள் குவிந்து சேர்ந்து பின் பிரிந்தன .

” இச் ” என்ற சத்தம் எழுந்த்து.

அப்போது அவர்கள் இருவரும் குறுகலான அந்த லாக்கர் அறைக்குள் வந்திருந்தனர் .ஆளற்ற அந்த சிறிய அறைக்குள் விஸ்வேஸ்வரன் எழுப்பிய சத்தம் பக்கவாட்டு லாக்கர்கள் மேல் பட்டு எதிரொலித்து அறை முழுவதும் பரவி பெரிதாய் பெருகி கமலினியின் செவிகளை தாக்கியது .உச்சந்தலை மேல் மின்னல் ஊடுறுவியது போல் அவள் அப்படியே நின்றுவிட்டாள்.

” நிகிதாவை கிஸ் பண்ண போகிறேன் …” ரகசியமாக குரலை குறைத்து விஸ்வேஸ்வரன் அறிவிக்க கமலினிக்கு திக்கென்றது .

” எ …என்ன உளறுகிறீர்கள் ? “

” இந்த பேச்செல்லாம் எனக்கு ஒத்து வரவில்லை கமலினி. ஒரே ஒரு கிஸ் …நிகிதா என் காலடியில் விழுந்து விடுவாள் பாரேன் “

” நோ …இதற்கெல்லாம் நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் .என்னை வெளியே விட்டு விடுங்கள் .நான் போய்விடுகிறேன் .பிறகு நீங்கள் என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கொள்ளுங்கள் ” சிறு வெறுப்புடன் வெளியேற முயன்றவளின் கையை பற்றினான் .

” இல்லை …உன்னை விட மாட்டேன் .நீ இன்று என் வீரத்தை பார்க்கத்தான் போகிறாய் ..? “

ஐய்யோ கடவுளே இவனது இந்த கண்றாவி வீரத்தை நான் பார்க்கத்தான் வேண டுமா ? கமலினிக்கு ஓவென கூச்சலிட வேண்டும் போல் இருந்த்து .

” வேண்டாம் விஸ்வா இது தப்பு . செய்யாதீர்கள் “

” ஏய் ப்ளீஸ்பா …ஒரு டிரை தானே …? சரி வரலைன்னா விட்டுடுடலாம் .”

” நீங்க என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க .என்னை விட்டுடுங்க .இந்த பாவத்திற்கெல்லாம் நான் துணை போக மாட்டேன் “

” ஏய் கமலி …கமலி …ப்ளீஸ்பா .நீ பக்கத்தில் இருந்தாயானால் எனக்கு கொஞ்சம் தைரியமாக இருக்கும் …”

கமலினிக்கு அந்த இரும்பு லாக்கர்களில் நொட் நொட்டென தலையை மோதிக் கொள்ளும் வேகம் வந்த்து . என் வீரத்தை பார் என்று சலம்பி விட்டு , இப்போது நானிருந்தால் தைரியமாம் …இவனெல்லாம் …

” யோவ் ஒரு பெண்ணை பக்கத்தில் வைத்துக் கொண்டு செய்யும் காரியமா இது ? தத்தி …தத்தி…” தன் நெற்றியில் லேசாக அடித்துக் கொண்டாள் .

” ஏன் இதிலென்ன …நீதானே எனக்கு லவ் ஐடியாஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறாய் .ஜஸ்ட் இந்த ரூமுக்குள் இருக்க போகிறாய் .அவ்வளஙுதானே …? “

கமலினி வெறுத்துப் போய் அவனை நிமிர்ந்து பார்க்க விஸ்வேஸ்வரனின் கண்களில் போலியோ , கல்மிசமோ இல்லை.என் விளையாட்டை பார்க்க வாம்மா எனத் தாயை அழைக்கும் ஆவல் குழந்தையாக நின்றிருந்தான் .இவனுக்கு உண்மையிலேயே ஒன்றும் தெரியவில்லை .அவள் வேறு வழியின்றி தலையாட்டினாள் .




” இதோ இந்த கதவை லேசாக திறந்து வைத்துக் கொள் .வெளியே இருந்து பார்த்தால் இங்கே  ஒன்றும் தெரியாது .என்னோட மூவ்ல ஏதாவது தப்பிருந்தால் என் மொபைலுக்கு ஒரு மெசேஸ் அனுப்பு …” விஸ்வேஸ்வரன் உற்சாகமாக விளக்க ,

” யோவ் திரும்ப திரும்ப கடுப்பேத்தாதே . வெளியே போ முதலில் ….” அவனுக்கு அலட்சியமாக கையசைக்க விஸ்வேஸ்வரன் அறையை விட்டு வெளியேறினான் .

ஐந்து நிமிடம் கழித்து கமலினி மெல்ல எட்டிப் பார்த்த போது விஸ்வேஸ்வரன் நிகிதாவை அணுகி அவள் தோள்களில் தன் இரு கைகளையும் வைப்பதை பார்த்தாள். அந்தக் கணம் தன் மனது தடம் புரள்வது  போல்  உணர்ந்தாள் .குத்தூசி ஒன்று இதயத்தில் சொருகிய வலி வினாடியில் உடல் முழுவதும் வேதனை அலைகளாக பரவியது .கமலினியின் கண்கள் கலங்க தொடங்கின .

What’s your Reaction?
+1
19
+1
17
+1
1
+1
1
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Kurinji
Kurinji
4 years ago

Kamali I unakku deivaiyaa intha talaivali ellam.

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!